ETV Bharat / state

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ், ஆங்கில பாடத்திலும் ஒரே தாள் !

சென்னை : தமிழ்நாட்டில் வரும் கல்வியாண்டு முதல் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான மொழிப்பாடம் தமிழ், ஆங்கிலம் ஒரே தாளாக ஒருங்கிணைத்து தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

author img

By

Published : Sep 14, 2019, 9:02 AM IST

பள்ளிக் கல்வித்துறை வளாகம்

பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான மொழிப்பாடம் ஆங்கிலம் ஒரே தாளாக ஒருங்கிணைத்து தேர்வு நடத்தப்படுவது குறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் அரசு தேர்வுகள் இயக்குனர் 11 , 12ம் வகுப்பு பொது தேர்வுகளில் மொழிப்பாடம், ஆங்கில பாடங்களில் உள்ள இரண்டு தாள்களை, 2 தேர்வுகளாக எழுதுவதற்கு பதில் ஒரே தாளாக தேர்வு எழுத அனுமயளித்து ஆணையிடப்பட்டது.

பள்ளிக் கல்வித்துறை வளாகம்
பள்ளிக் கல்வித்துறை வளாகம்

ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சுமார் 10 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். மொழிப்பாடம், ஆங்கில பாடத்திற்கு ஒரே தாளாக தேர்வு நடத்துவதால் சுமார் 20 லட்சம் விடைத்தாள்கள் குறையும். இதனால் அரசு தேர்வு மையத்தில் ஓராண்டு பயன்படுத்தப்படும் சுமார் 3 கோடி எண்ணிக்கையிலான தாள்கள் சேமிக்கப்படும்.

அரசு தேர்வுத்துறை இயக்குனரின் கருத்தினை ஏற்றும், ஆசிரியர் சங்கங்கள், பொதுநல அமைப்புகளின் கோரிக்கைகளின் அடிப்படையிலும், மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையிலும், ஆசிரியர்களை பெருமளவில் கற்பித்தல், கல்வி மேம்பாட்டுப் பணிகளில் அதிக நேரம் ஈடுபடுத்தும் வகையிலும் ,தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு மொழி பாடம்,ஆங்கிலம் பாடத் தேர்வில் இரு தாள்களுக்கு தேர்வு நடத்துவதற்கு பதிலாக 2019-2020ஆம் கல்வி ஆண்டு முதல் இரு தாள்களையும் ஒருங்கிணைத்து ஒரே தாளாகத் தேர்வு நடத்துவதப்படும்.

அவ்வாறு தேர்வு நடத்தும் போது பாடங்களின் மதிப்பீடு பாதிக்காதவாறு முதல், இரண்டாம் தாளில் உள்ள அனைத்து பாடங்களில் உள்ள சாரம்சங்களை உள்ளடக்கியதாகவும் தேர்வுகள் நடத்திட அரசு தேர்வுத்துறை இயக்குனருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என அதில் கூறியுள்ளார்.

இதனால் மாணவர்கள் 700 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதிய பின்னர் அதனை 500 மதிப்பெண்களுக்கு மாற்ற வேண்டிய சூழ்நிலை மாறும், ஆனால் அதே நேரத்தில் மாணவர்களுக்கு அதிக அளவில் இலக்கணம் கற்பிக்கும் சூழ்நிலை வெகுவாக குறையும் என்பதால் அவர்களின் மொழிப்புலமை குறையும் என கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான மொழிப்பாடம் ஆங்கிலம் ஒரே தாளாக ஒருங்கிணைத்து தேர்வு நடத்தப்படுவது குறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் அரசு தேர்வுகள் இயக்குனர் 11 , 12ம் வகுப்பு பொது தேர்வுகளில் மொழிப்பாடம், ஆங்கில பாடங்களில் உள்ள இரண்டு தாள்களை, 2 தேர்வுகளாக எழுதுவதற்கு பதில் ஒரே தாளாக தேர்வு எழுத அனுமயளித்து ஆணையிடப்பட்டது.

பள்ளிக் கல்வித்துறை வளாகம்
பள்ளிக் கல்வித்துறை வளாகம்

ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சுமார் 10 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். மொழிப்பாடம், ஆங்கில பாடத்திற்கு ஒரே தாளாக தேர்வு நடத்துவதால் சுமார் 20 லட்சம் விடைத்தாள்கள் குறையும். இதனால் அரசு தேர்வு மையத்தில் ஓராண்டு பயன்படுத்தப்படும் சுமார் 3 கோடி எண்ணிக்கையிலான தாள்கள் சேமிக்கப்படும்.

அரசு தேர்வுத்துறை இயக்குனரின் கருத்தினை ஏற்றும், ஆசிரியர் சங்கங்கள், பொதுநல அமைப்புகளின் கோரிக்கைகளின் அடிப்படையிலும், மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையிலும், ஆசிரியர்களை பெருமளவில் கற்பித்தல், கல்வி மேம்பாட்டுப் பணிகளில் அதிக நேரம் ஈடுபடுத்தும் வகையிலும் ,தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு மொழி பாடம்,ஆங்கிலம் பாடத் தேர்வில் இரு தாள்களுக்கு தேர்வு நடத்துவதற்கு பதிலாக 2019-2020ஆம் கல்வி ஆண்டு முதல் இரு தாள்களையும் ஒருங்கிணைத்து ஒரே தாளாகத் தேர்வு நடத்துவதப்படும்.

அவ்வாறு தேர்வு நடத்தும் போது பாடங்களின் மதிப்பீடு பாதிக்காதவாறு முதல், இரண்டாம் தாளில் உள்ள அனைத்து பாடங்களில் உள்ள சாரம்சங்களை உள்ளடக்கியதாகவும் தேர்வுகள் நடத்திட அரசு தேர்வுத்துறை இயக்குனருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என அதில் கூறியுள்ளார்.

இதனால் மாணவர்கள் 700 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதிய பின்னர் அதனை 500 மதிப்பெண்களுக்கு மாற்ற வேண்டிய சூழ்நிலை மாறும், ஆனால் அதே நேரத்தில் மாணவர்களுக்கு அதிக அளவில் இலக்கணம் கற்பிக்கும் சூழ்நிலை வெகுவாக குறையும் என்பதால் அவர்களின் மொழிப்புலமை குறையும் என கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

Intro:பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில்
தமிழ் , ஆங்கில பாடத்திலும் ஒரே தாள் தேர்வு


Body:பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில்
தமிழ் , ஆங்கில பாடத்திலும் ஒரே தாள் தேர்வு

சென்னை,
தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலம் இருந்தார்கள் என்று ஒரே தாள்களாக ஒருங்கிணைத்து தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் அரசு தேர்வுகள் இயக்குனர் நடத்தப்படும் 11 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகளில் மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலம் பாடங்களில் உள்ள இரண்டு தாள்களை, 2 தேர்வுகளாக எழுதுவதற்கு பதில் ஒரே தாளாக தேர்வு எழுத அனுமதி அளித்து ஆணையிப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தற்போது அரசு தேர்வுகள் இயக்குனர் பத்தாம் வகுப்பு தேர்வுக்கு மொழிப் பாடங்கள் மற்றும் ஆங்கில பாடத்திற்கு இரண்டு தாள்களாக தேர்வு நடத்தப்படுவதை மாற்றி ஒரே ஆளாக தேர்வுகள் நடத்த வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் முறையிட்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் பத்தாம் வகுப்பு மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலம் பாடங்களில் இரண்டு தாள்களை ஒரே நாடாக மாற்றி அமைப்பதால், மொழிப்பாடம் மற்றும் ஆங்கில பாட ஆசிரியர்கள் ஒவ்வொரு தேர்வின் போதும் அதிகநாட்கள் விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்காக செலவிடும் நிலை மாறி கற்பித்தல் மற்றும் கல்வி மேம்பாட்டு பணியில் அதிக நேரம் செலவிட ஏதுவாகும்.
மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலம் பாடத்தில் ஒரே தாளாக தேர்வு எழுதுவதற்கு காரணமாக மாணவர்களின் தேர்வு காலம் குறிக்கப்படுவதால் அவர்களின் கவன சிதறல் மற்றும் மன அழுத்தம் பெருமளவில் குறையும்.

விடைத்தாள் மதிப்பீட்டு பணி நடைபெறும் நாட்கள் குறைவதால் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிட வாய்ப்பு ஏற்படும்.

ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சுமார் 10 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலம் பாடத்திற்கு ஒரே தவறாக தேர்வு நடத்துவதால் சுமார் 20 லட்சம் விடைத்தாள்கள் குறையும். இதனால் அரசு தேர்வு மையத்தில் சுடுவதற்காக ஓராண்டு பயன்படுத்தப்படும் சுமார் 3 கோடி எண்ணிக்கையிலான தாள்கள் சேமிக்கப்படும்.
அரசு தேர்வுத்துறை இயக்குனரின் கருத்தினை ஏற்றும், ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகளின் கோரிக்கைகளின் அடிப்படையிலும், மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையிலும், ஆசிரியர்களை பெருமளவில் கற்பித்தல் மற்றும் கல்வி மேம்பாட்டுப் பணிகளில் அதிக நேரம் ஈடுபடுத்தும் வகையிலும் ,தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு மொழி பாடம் மற்றும் ஆங்கிலம் பாடத் தேர்வில் இரு தாள்களுக்கு தேர்வு நடத்துவதற்கு பதிலாக 2019-2020 ம் கல்வி ஆண்டு முதல் இரு தாள்களையும் ஒருங்கிணைத்து ஒரே தாளாகத் தேர்வு நடத்துவதற்கும், அவ்வாறு தேர்வு நடத்தும் போது பாடங்களின் மதிப்பீடு பாதிக்காதவாறு முதல் மற்றும் இரண்டாம் தாளில் உள்ள அனைத்து பாடங்களில் உள்ள சாராம்சங்களை உள்ளடக்கியதாகவும் தேர்வுகள் நடத்திட அரசு தேர்வுத்துறை இயக்குனருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என அதில் கூறியுள்ளார்.
இதனால் மாணவர்கள் 700 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதிய பின்னர் அதனை 500 மதிப்பெண்களுக்கு மாற்ற வேண்டிய சூழ்நிலை மாறும்.
ஆனால் அதே நேரத்தில் மாணவர்களுக்கு அதிக அளவில் இலக்கணம் கற்பிக்கும் சூழ்நிலை வெகுவாக குறையும் என்பதால் அவர்களின் மொழிப்புலமை குறையும் என கல்வியாளர்கள் கருதுகின்றனர்.








Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.