ETV Bharat / state

காவலன் செயலியை 5 நாட்களில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்: ஏ.கே.விஸ்வநாதன்

author img

By

Published : Dec 12, 2019, 4:03 PM IST

சென்னை: காவலன் செயலியை ஐந்தே நாட்களில் ஒரு லட்சத்து 50ஆயிரம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

1 million 50 thousand people downloaded the kavalan sos app in 5 days, says chennai commissionor AK Viswanathan
1 million 50 thousand people downloaded the kavalan sos app in 5 days, says chennai commissionor AK Viswanathan

காவலன் எஸ்ஓஎஸ் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ராஜிவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் நடைபெற்றது. இதில், பங்கேற்று பேசிய சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், ‘காவலன் செயலியின் பட்டனை அழுத்தினால் போதும் உடனே உங்களுக்கு காவலர்களால் உதவ முடியும். தேசிய குற்ற ஆவண காப்பகம் மற்றும் செய்தி இதழில் வெளிவந்த கருத்துக் கணிப்பின்படி தமிழ்நாட்டில் குற்றங்கள் வன்முறை குறைந்துள்ளன.

இருப்பினும், குற்றம் இல்லாத நகரமாக மாற்ற முயற்சி செய்து வருகின்றோம். சங்கிலிப்பறிப்பு 50 சதவிகிதம் குறைந்துள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, அனைவரும் இந்தக் காவலன் செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதேபோல், 100 என்ற காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவிக்கலாம்.

உரையாற்றிய சென்னை மாநகர காவல் ஆனையர் ஏ.கே.விஸ்வநாதன்

ஐடி நிறுவன பெண் ஊழியர் ஒருவர் தற்போது கூட என்னிடம் பேசி நீதிமன்றத்தில் வழக்குவரும்போது சொல்லுங்கள் நான் சாட்சி சொல்கிறேன் என்று கூறியுள்ளார். முகம் தெரியாத நண்பர்களோடு சமூக வளைதளங்களில் பழகுவதை தவிர்க்க வேண்டும். நீங்கள் இதனைப் பதிவிறக்கம் செய்துகொண்டு, உங்களைச் சார்ந்தவர்களுக்குப் பதிவிறக்கம் செய்துகொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு - காவல் ஆணையர் ஈஸ்வரன் பங்கேற்பு

காவலன் எஸ்ஓஎஸ் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ராஜிவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் நடைபெற்றது. இதில், பங்கேற்று பேசிய சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், ‘காவலன் செயலியின் பட்டனை அழுத்தினால் போதும் உடனே உங்களுக்கு காவலர்களால் உதவ முடியும். தேசிய குற்ற ஆவண காப்பகம் மற்றும் செய்தி இதழில் வெளிவந்த கருத்துக் கணிப்பின்படி தமிழ்நாட்டில் குற்றங்கள் வன்முறை குறைந்துள்ளன.

இருப்பினும், குற்றம் இல்லாத நகரமாக மாற்ற முயற்சி செய்து வருகின்றோம். சங்கிலிப்பறிப்பு 50 சதவிகிதம் குறைந்துள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, அனைவரும் இந்தக் காவலன் செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதேபோல், 100 என்ற காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவிக்கலாம்.

உரையாற்றிய சென்னை மாநகர காவல் ஆனையர் ஏ.கே.விஸ்வநாதன்

ஐடி நிறுவன பெண் ஊழியர் ஒருவர் தற்போது கூட என்னிடம் பேசி நீதிமன்றத்தில் வழக்குவரும்போது சொல்லுங்கள் நான் சாட்சி சொல்கிறேன் என்று கூறியுள்ளார். முகம் தெரியாத நண்பர்களோடு சமூக வளைதளங்களில் பழகுவதை தவிர்க்க வேண்டும். நீங்கள் இதனைப் பதிவிறக்கம் செய்துகொண்டு, உங்களைச் சார்ந்தவர்களுக்குப் பதிவிறக்கம் செய்துகொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு - காவல் ஆணையர் ஈஸ்வரன் பங்கேற்பு

Intro:Body:காவலன் செயலியை 5 நாட்களில் 1லட்சத்து 50ஆயிரம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்...

காவலன் எஸ் ஓ எஸ் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய ஏ.கே.விஸ்வநாதன் காவலன் செயலி பட்டனை அழுத்தினால் போதும் உடனே உங்களுக்கு உதவ முடியும். .

தேசிய குற்ற ஆவணகாப்பகம் மற்றும் செய்தி இதழில் வெளிவந்த கருத்து கணிப்பு படி தமிழகத்தில் குற்றங்கள் வன்முறை குறைந்து உள்ளதாக என கூறினார். இருப்பினும் குற்றம் இல்லாத நகரமாக மாற்ற முயற்சி செய்து வருகின்றோம். சங்கிலி பறிப்பு 50 சதவீதம் குறைந்துள்ளது. பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தனிப்பிரிவு உருவாக்கப் பட்டது..

எனவே அனைவரும் இந்த காவலன் செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதே போல 100 என்ற காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம். ஐடி நிறுவன பெண் ஊழியர் தற்போது கூட எனக்கு பேசி நீதிமன்றத்தில் வழக்கு வரும் போது சொல்லுங்கள் சாட்சி நான் சொல்கிறேன் என்று கூறியுள்ளார்...

முகம் தெரியாத நண்பர்களோடு சமூக வளைதளங்களில் பழகுவதை தவிர்க்க வேண்டும். நீங்கள் இதனை பதிவிறக்கம் செய்து கொண்டு உங்களை சார்ந்தவர்களுக்கு பதிவிறக்கம் செய்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனக்கேட்டுக் கொண்டார்...

இந்நிகழ்வில் வடக்கு மண்டல காவல்துறை கூடுதல் ஆணையர் தினகரன், இணை ஆணையர் கபில் குமார் சாரட்கர், துணை ஆணையர் ராஜேந்திரன் மற்றும் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி, கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர். காவலன் செயலியின் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு பற்றி திரையிட்டு காட்டப்பட்டது...Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.