ETV Bharat / state

திருமணத்திற்கு சென்ற போது விபத்து.. 3 குழந்தைகள் உயிரிழப்பு!

author img

By

Published : Jan 27, 2023, 1:52 PM IST

மதுராந்தகம் அருகே நேற்றிரவு ஏற்பட்ட வேன் விபத்தில் மூன்று குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேன் கவிழ்ந்து விபத்து
வேன் கவிழ்ந்து விபத்து
வேன் கவிழ்ந்து விபத்து

செங்கல்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்துள்ளது படூர். இக்கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு வேளச்சேரியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது. படூரிலிருந்து திருமணத்திற்காக நேற்று இரவு வேன் ஒன்றில் 25 பேர் கிளம்பிச் சென்றனர்.

மதுராந்தகம் அடுத்த கருங்குழி அருகே வேன் செல்லும்போது வேனின் பின்பக்க டயர் வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதில் நிலை தடுமாறிய வேன் கவிழ்ந்ததில் வேனிலிருந்த 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சபிதா என்ற சிறுமி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

அஜித்குமார், கோகுல் என்ற இரு சிறுவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் அவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சம்பவம் குறித்து மதுராந்தகம் காவல்துறை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னையில் சுவர் இடிந்து விழுந்ததில் சாலையில் நடந்து சென்ற பெண் உயிரிழப்பு

வேன் கவிழ்ந்து விபத்து

செங்கல்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்துள்ளது படூர். இக்கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு வேளச்சேரியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது. படூரிலிருந்து திருமணத்திற்காக நேற்று இரவு வேன் ஒன்றில் 25 பேர் கிளம்பிச் சென்றனர்.

மதுராந்தகம் அடுத்த கருங்குழி அருகே வேன் செல்லும்போது வேனின் பின்பக்க டயர் வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதில் நிலை தடுமாறிய வேன் கவிழ்ந்ததில் வேனிலிருந்த 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சபிதா என்ற சிறுமி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

அஜித்குமார், கோகுல் என்ற இரு சிறுவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் அவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சம்பவம் குறித்து மதுராந்தகம் காவல்துறை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னையில் சுவர் இடிந்து விழுந்ததில் சாலையில் நடந்து சென்ற பெண் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.