ETV Bharat / state

ஆயுதப்படை காவலர் வெட்டிக்கொலை!

author img

By

Published : Sep 29, 2020, 1:05 AM IST

செங்கல்பட்டு: பழைய சீவரம் அருகே ஆயுதப்படை காவலர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

armed-policeman-murder-police-investigation
armed-policeman-murder-police-investigation

செங்கல்பட்டு மாவட்டம் பழைய சீவரம் பகுதியைச் சேர்ந்த இன்ப அரசு (28) என்பவர், சென்னை புழல் சிறையில் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றிவந்தார். இவர் நேற்று முன்தினம் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு, இன்று மீண்டும் தனது இருசக்கர வாகனத்தில் பணிக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது 2 இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்த அடையாளம் தெரியாத நபர்கள், செங்கல்பட்டு அருகே வாகனத்தை மறித்து இன்ப அரசை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த இன்ப அரசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தகவலில் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பாலூர் காவல் துறையினர், உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கொலைக்கு பயன்படுத்திய அரிவாள், தடயங்களை ஆய்வுசெய்தார். ஆயுதப்படை காவலர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:குடும்பத்தகராறு: இரு குழந்தைகளோடு தீக்குளித்து உயிரிழந்த தாய்!

செங்கல்பட்டு மாவட்டம் பழைய சீவரம் பகுதியைச் சேர்ந்த இன்ப அரசு (28) என்பவர், சென்னை புழல் சிறையில் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றிவந்தார். இவர் நேற்று முன்தினம் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு, இன்று மீண்டும் தனது இருசக்கர வாகனத்தில் பணிக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது 2 இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்த அடையாளம் தெரியாத நபர்கள், செங்கல்பட்டு அருகே வாகனத்தை மறித்து இன்ப அரசை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த இன்ப அரசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தகவலில் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பாலூர் காவல் துறையினர், உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கொலைக்கு பயன்படுத்திய அரிவாள், தடயங்களை ஆய்வுசெய்தார். ஆயுதப்படை காவலர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:குடும்பத்தகராறு: இரு குழந்தைகளோடு தீக்குளித்து உயிரிழந்த தாய்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.