ETV Bharat / state

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையால் ஏற்றம் காணும் சைக்கிள் ரிக்ஷா தொழில்!

author img

By

Published : Apr 12, 2019, 1:40 PM IST

புதுச்சேரி: நலிவடைந்த சைக்கிள் ரிக்ஷா தொழில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையால் தற்போது ஏற்றம் கண்டுள்ளதையடுத்து, தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையால், ஏற்றம் காணும் சைக்கிள் ரிக்சா தொழில்!

முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கிவரும் புதுச்சேரியில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வந்த சைக்கிள் ரிக்ஷா தொழில், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களால் நாளுக்கு நாள் நலிவடைய ஆரம்பித்தது. சுமார் 3,000 சைக்கிள் ரிக்ஷாக்கள் இருந்த புதுச்சேரியில் தற்போது 35 ரிக்ஷாக்களை மட்டுமே பயணிகள் பயன்படுத்திவருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஓராண்டு காலமாக மீண்டும் சைக்கிள் ரிக்ஷா மீது சுற்றுலாப் பயணிகளின் கவனம் திரும்பியுள்ளது. இதனால் ரிக்ஷா தொழிலாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து பேட்டியளித்த ரிக்ஷா ஒட்டுநர் சங்கர் கூறுகையில், புதுச்சேரிக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், பயணம் செய்வதற்கு சைக்கிள் ரிக்ஷாவிற்கு விரும்பி வருகின்றனர். இதனால் குறைந்தது 250 முதல் 500 வரை கிடைப்பதாகவும், இதனைக் கொண்டு தங்கள் குடும்பத்தை நடத்திவருவதாகவும் தெரிவித்தார்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையால், ஏற்றம் காணும் சைக்கிள் ரிக்சா தொழில்!

முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கிவரும் புதுச்சேரியில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வந்த சைக்கிள் ரிக்ஷா தொழில், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களால் நாளுக்கு நாள் நலிவடைய ஆரம்பித்தது. சுமார் 3,000 சைக்கிள் ரிக்ஷாக்கள் இருந்த புதுச்சேரியில் தற்போது 35 ரிக்ஷாக்களை மட்டுமே பயணிகள் பயன்படுத்திவருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஓராண்டு காலமாக மீண்டும் சைக்கிள் ரிக்ஷா மீது சுற்றுலாப் பயணிகளின் கவனம் திரும்பியுள்ளது. இதனால் ரிக்ஷா தொழிலாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து பேட்டியளித்த ரிக்ஷா ஒட்டுநர் சங்கர் கூறுகையில், புதுச்சேரிக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், பயணம் செய்வதற்கு சைக்கிள் ரிக்ஷாவிற்கு விரும்பி வருகின்றனர். இதனால் குறைந்தது 250 முதல் 500 வரை கிடைப்பதாகவும், இதனைக் கொண்டு தங்கள் குடும்பத்தை நடத்திவருவதாகவும் தெரிவித்தார்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையால், ஏற்றம் காணும் சைக்கிள் ரிக்சா தொழில்!
Intro:புதுச்சேரியில் நலிவடைந்து வரும் சைக்கிள் ரிக்ஷா தொழில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை யால் தற்போது ரிக்சா தொழிலாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்


Body:புதுச்சேரி 12

சுற்றுலா தலமாக விளங்கி வரும் புதுச்சேரியில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட வந்த சைக்கிள் ரிக்ஷா தொழில், ஆட்டோக்கள் புதிய வாகனங்கள் ஆகியவற்றின் இயந்திர வளர்ச்சியினால் நாளுக்கு நாள் நலிவடைய ஆரம்பித்தது சுமார் 3000 சைக்கிள் ரிக்ஷாக்கள் இருந்த இந்த புதுச்சேரியில் தற்போது 35 ரிக்ஷாக்கள் மட்டுமே பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர் .இந்த நிலையில் கடந்த ஓராண்டு காலமாக மீண்டும் சைக்கிள் ரிக்ஷா மீது சுற்றுலாப் பயணிகளின் கவனம் திரும்பியுள்ளது ரிக்ஷா தொழிலாளிகள் சிறிது முக மலர்ச்சி அடைந்துள்ளனர்

புதுச்சேரி வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்வதில் சைக்கிள் ரிக்ஷாவில் செல்வதை மட்டுமே விரும்பி வருவதாக இதனால் நலிவடைந்து வந்த ரிக்சா தொழிலாளிகளுக்கு சற்று ஆறுதல் கிடைத்துள்ளது இது தொடர்பாக முப்பத்தி ஆறு வருடமாக

இத்தொழிலில் உள்ள ரிக்ஷா ஓட்டுநர் சங்கர் பேட்டியளிக்கையில் இத்தொழிலில் இயந்திர வளர்ச்சியினால் புதுச்சேரியில் இருந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ரிக்ஷா ஓட்டுநர்கள் நாளுக்கு நாள் குறைந்து வந்தது தற்போது 35 சைக்கிள் ரிக்ஷா மட்டுமே உள்ளன இதுவும் படிப்படியாக குறை இருந்த நிலையில் புதுச்சேரிக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் குறிப்பிட்ட தூரத்துக்கு செல்வதற்கு குறைந்தது 250 முதல் 500 வரை கிடைப்பதாக இதனைக் கொண்டு தங்கள் குடும்பத்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர் ரிக்ஷாவில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இதில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர்கள் தங்கள் ரிக்ஷாவை பயணம் செய்வது விரும்புவதாலும் நலிவடைந்து வரும் தொழிலில் சற்று ஆறுதலை அளிக்கிறது என்றார் எனவே உள்ளூர் மக்களும் மாற்றத்தை விரும்பி ரிக்ஷாவை பயணிக்க தொடங்க வேண்டும் என்றார்


Conclusion:புதுச்சேரியில் நலிவடைந்து வரும் சைக்கிள் ரிக்ஷா தொழில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை யால் தற்போது ரிக்சா தொழிலாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.