ETV Bharat / state

குடிநீர் இல்லை என்று கூறினால் பள்ளி உரிமம் ரத்து! அமைச்சர் அதிரடி

author img

By

Published : Jun 22, 2019, 4:21 PM IST

ஈரோடு: தனியார் பள்ளிகளில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது என கூறினால் அப்பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்தப் பள்ளியின் அங்கீகாரம் உடனடியாக ரத்து செய்யப்படும் என்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

education minister sengoottaiyan

கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட 18 பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்புப் படிக்கும் 1,586 மாணவ மாணவிகளுக்குத் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, ’தனியார்ப் பள்ளிகளில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது எனக் கூறினால் அந்தப் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அப்பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். ஏற்கெனவே காஞ்சிபுரத்தில் இதுபோன்ற அறிவிப்பு வெளியிட்ட தனியார்ப் பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. தனியார்ப் பள்ளிகள் மாணவர்களிடம் வாங்கும் கட்டணத்தில் அனைத்து வசதிகளும் செய்ய முடியும். இந்நிலையில் உள் கட்டமைப்பு இல்லாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பு

அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கக்கூடாது. அவ்வாறு வசூல் செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கோபி அருகே உள்ள மலையப்பாளையம் அரசுப் பள்ளி மீது இது போன்ற குற்றச்சாட்டு வந்தது. இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7 கி.மீ. தூரம் நடந்து பள்ளி செல்லும் மாணவ மாணவிகளுக்கு எஸ்.எஸ்.ஏ. மூலம் வாகன வசதி செய்ய உத்தரவிடப்பட்டது. இதே போன்று பேருந்து வசதி இல்லாத பள்ளிகளுக்கும் மானவர்களை ஏற்றிச் செல்லும் வகையில் வாகன வசதி செய்யப்படும்’ எனக் கூறினார்.

கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட 18 பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்புப் படிக்கும் 1,586 மாணவ மாணவிகளுக்குத் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, ’தனியார்ப் பள்ளிகளில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது எனக் கூறினால் அந்தப் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அப்பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். ஏற்கெனவே காஞ்சிபுரத்தில் இதுபோன்ற அறிவிப்பு வெளியிட்ட தனியார்ப் பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. தனியார்ப் பள்ளிகள் மாணவர்களிடம் வாங்கும் கட்டணத்தில் அனைத்து வசதிகளும் செய்ய முடியும். இந்நிலையில் உள் கட்டமைப்பு இல்லாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பு

அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கக்கூடாது. அவ்வாறு வசூல் செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கோபி அருகே உள்ள மலையப்பாளையம் அரசுப் பள்ளி மீது இது போன்ற குற்றச்சாட்டு வந்தது. இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7 கி.மீ. தூரம் நடந்து பள்ளி செல்லும் மாணவ மாணவிகளுக்கு எஸ்.எஸ்.ஏ. மூலம் வாகன வசதி செய்ய உத்தரவிடப்பட்டது. இதே போன்று பேருந்து வசதி இல்லாத பள்ளிகளுக்கும் மானவர்களை ஏற்றிச் செல்லும் வகையில் வாகன வசதி செய்யப்படும்’ எனக் கூறினார்.


 தனியார் பள்ளிகளில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது என கூறினால் அந்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அந்த பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.
அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் 

;டி.சாம்ராஜ்,
செய்தியாளர்
சத்தியமங்கலம்
94438 96939, 88257 02216

TN_ERD_03_22_SATHY_EDUCATION_MINIS_VIS_TN10009
TN_ERD_03A_22_SATHY_EDUCATION_MINIS_BYTE_TN10009  
(Visual  FTP இல் உள்ளது)

கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 18 பள்ளிகளில் பயிலும் பதினொன்றாம் வகுப்பு படிக்கும்  மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது.. கிரு~;ணகிரி மாவட்டத்தில் 7 கிலோமீட்டர் தூரம் நடந்து பள்ளி செல்லும் மாணவ மாணவிகளுக்கு எஸ்.எஸ்.ஏ மூலம் வேன் வசதி செய்ய உத்தரவிடப்பட்டது. இதே போன்று பேருந்து வசதி இல்லாத பள்ளிகளுக்கும் வேன் வசதி செய்யப்படும் என தெரிவித்தார்..



கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 18 பள்ளிகளில் பயிலும் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் 1586 மாணவ மாணவிகளுக்கு தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்திப்பின்போது தனியார் பள்ளிகளில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது என கூறினால் அந்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அந்த பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். ஏற்கெனவே காஞ்சிபுரத்தில் அது போன்ற அறிவிப்பு வெளியிட்ட தனியார் பள்ளி  நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் வாங்கும் கட்டணத்தில் அனைத்து வசதிகளும் செய்ய முடியும். இந்நிலையில் உள் கட்டமைப்பு இல்லாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்க கூடாது. அவ்வாறு வசூல் செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கோபி அருகே உள்ள மலையப்பாளையம் அரசு பள்ளி மீது  இது போன்ற குற்றச்சாட்டு வந்தது. இது குறித்து முதன்மை கல்வி அலுவலர் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. கிரு~;ணகிரி மாவட்டத்தில் 7 கிலோமீட்டர் தூரம் நடந்து பள்ளி செல்லும் மாணவ மாணவிகளுக்கு எஸ்.எஸ்.ஏ மூலம் வேன் வசதி செய்ய உத்தரவிடப்பட்டது. இதே போன்று பேருந்து வசதி இல்லாத பள்ளிகளுக்கும் வேன் வசதி செய்யப்படும். சட்டமன்றத்தில் புதிய திட்டங்கள் குறித்து அறிவிக்கப்படும் என கோபியில்  மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிகணிணி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்
பேட்டி:
திரு.கே.ஏ.செங்கோட்டையன் - தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.