ETV Bharat / state

மனைவியைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்

author img

By

Published : May 15, 2020, 6:20 PM IST

அரியலூர்: மனைவியை அடித்துக் கொலை செய்த கணவன், தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்
மனைவியை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்

அரியலூர் மாவட்டம், ஸ்ரீபுரந்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துவேல். ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கும் அருள்மொழி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தி என்பவருக்கும் திருமணமாகி, மூன்று வயதில் பெண் குழந்தையும், ஒன்றரை வயதில் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. தனக்குச் சொந்தமான வயலில் விவசாயம் செய்து வந்த முத்துவேலுக்கு குடிப்பழக்கம் உள்ளதால், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது.

இந்நிலையில் குடிபோதை காரணமாக, கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, ஆனந்தி கோபித்துக்கொண்டு, தனது தகப்பனார் வீட்டிற்கு ஒரு மாதத்திற்கு முன்பு சென்றுவிட்டார். பின்னர் தனது உறவினர்களை வைத்து சமாதானப்படுத்தி நேற்று (மே 14) மாலை ஆனந்தியை, தனது வீட்டிற்கு முத்துவேல் அழைத்து வந்துள்ளார். இரவில் கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் முத்துவேல் அடித்ததால் ஆனந்தி கீழே விழுந்துள்ளார்.

மனைவியைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்

அதன்பின் உறங்கிவிட்ட முத்துவேல், எழுந்து தனது மனைவியைப் பார்த்துள்ளார். கீழேவிழுந்த நிலையிலேயே ஆனந்தி கிடந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்த முத்துவேல் அருகில் சென்றுபார்த்தபோது, அவர் இறந்துபோனது தெரிய வந்துள்ளது. இதனால் அச்சமுற்ற முத்துவேல், தனது வீட்டில் இருந்த ஃபேனில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்நிலையில் அருகில் உள்ளவர்கள் வீட்டிற்குச் சென்று பார்த்த போது கணவன், மனைவி இருவரும் இறந்து கிடந்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கரமங்களம் காவல் துறையினர் இருவரது உடல்களையும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் இதுகுறித்து விக்கரமங்களம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தொடர் திருட்டில் ஈடுபட்ட ரவுடிகள் கைது

அரியலூர் மாவட்டம், ஸ்ரீபுரந்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துவேல். ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கும் அருள்மொழி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தி என்பவருக்கும் திருமணமாகி, மூன்று வயதில் பெண் குழந்தையும், ஒன்றரை வயதில் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. தனக்குச் சொந்தமான வயலில் விவசாயம் செய்து வந்த முத்துவேலுக்கு குடிப்பழக்கம் உள்ளதால், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது.

இந்நிலையில் குடிபோதை காரணமாக, கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, ஆனந்தி கோபித்துக்கொண்டு, தனது தகப்பனார் வீட்டிற்கு ஒரு மாதத்திற்கு முன்பு சென்றுவிட்டார். பின்னர் தனது உறவினர்களை வைத்து சமாதானப்படுத்தி நேற்று (மே 14) மாலை ஆனந்தியை, தனது வீட்டிற்கு முத்துவேல் அழைத்து வந்துள்ளார். இரவில் கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் முத்துவேல் அடித்ததால் ஆனந்தி கீழே விழுந்துள்ளார்.

மனைவியைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்

அதன்பின் உறங்கிவிட்ட முத்துவேல், எழுந்து தனது மனைவியைப் பார்த்துள்ளார். கீழேவிழுந்த நிலையிலேயே ஆனந்தி கிடந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்த முத்துவேல் அருகில் சென்றுபார்த்தபோது, அவர் இறந்துபோனது தெரிய வந்துள்ளது. இதனால் அச்சமுற்ற முத்துவேல், தனது வீட்டில் இருந்த ஃபேனில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்நிலையில் அருகில் உள்ளவர்கள் வீட்டிற்குச் சென்று பார்த்த போது கணவன், மனைவி இருவரும் இறந்து கிடந்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கரமங்களம் காவல் துறையினர் இருவரது உடல்களையும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் இதுகுறித்து விக்கரமங்களம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தொடர் திருட்டில் ஈடுபட்ட ரவுடிகள் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.