ETV Bharat / state

மேற்கூரை அமைக்கும் பணியின்போது மின்சாரம் தாக்கிய 4 பேருக்கு தீவிர சிகிச்சை!

author img

By

Published : Dec 13, 2019, 9:43 AM IST

அரியலூர்: திருமானூர் அருகே மேற்கூரை அமைக்கும் பணியின்போது உயர் அழுத்த மின் கம்பியின் மின்சாரம் தாக்கி நான்கு பேர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ariyalur
ariyalur

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள அன்னிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சரவணன், ரவிக்குமார், ரமேஷ், ராம்குமார். இவர்கள் நான்கு பேரும் நேற்று திருமானூரில் தேசிய நெடுஞ்சாலை அருகில் மேற்கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

டாடா ஏசி வாகனத்தின் மேலே இரும்பு ஏணியை வைத்து ஒருவர் ஏணியில் ஏறி வேலை செய்ய மற்ற மூவரும் ஏணியை கீழே விழாதபடி பிடித்து கொண்டிருந்தனர். இதற்கிடையில் எதிர்பாராத விதமாக, உயர் அழுத்த மின் கம்பியில் இரும்பு ஏணி உரசி நான்கு பேரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர்.

சம்பவ இடத்தை காவல்துறையினர் பார்வையிட்ட போது

இதையடுத்து அவர்களை சிகிச்சைக்காக திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். மேலும் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: உளுந்தூர்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி உயிரிழப்பு!

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள அன்னிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சரவணன், ரவிக்குமார், ரமேஷ், ராம்குமார். இவர்கள் நான்கு பேரும் நேற்று திருமானூரில் தேசிய நெடுஞ்சாலை அருகில் மேற்கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

டாடா ஏசி வாகனத்தின் மேலே இரும்பு ஏணியை வைத்து ஒருவர் ஏணியில் ஏறி வேலை செய்ய மற்ற மூவரும் ஏணியை கீழே விழாதபடி பிடித்து கொண்டிருந்தனர். இதற்கிடையில் எதிர்பாராத விதமாக, உயர் அழுத்த மின் கம்பியில் இரும்பு ஏணி உரசி நான்கு பேரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர்.

சம்பவ இடத்தை காவல்துறையினர் பார்வையிட்ட போது

இதையடுத்து அவர்களை சிகிச்சைக்காக திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். மேலும் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: உளுந்தூர்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி உயிரிழப்பு!

Intro:அரியலூர் & ஷெட்டு அமைக்கும் பணியின் போது மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த 4 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சைBody:அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள அன்னிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சரவணன், ரவிக்குமார், ரமேஷ் மற்றும் ராம்குமார். இவர்கள் நான்கு பேரும் திருமானூரில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஷெட்டு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். டாடா ஏசி வாகனத்தின் மேலே இரும்பு ஸ்டூலை வைத்து அதன் மேலே இரும்பு ஏணியை இணைத்து அதில் ஏறி வேலை செய்து கொண்டிருந்தனர். ஒருவர் ஏணி மேலே ஏறி வேலைசெய்த போது மற்ற 3பேரும் ஏணியும் ஸ்டூலும் கீழே விழாதபடி பிடித்து கொண்டிருந்தனர். இந்நிலையில் வேலை செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அவ்வழியாக சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் இரும்பு ஏணி உரசியதில் 4 பேரும் தூக்கி எறியப்பட்டு படுகாயமடைந்தனர். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் மூலம் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு முதலுதவி சிகிச்சைக்காக திருமானர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். Conclusion:இச்சம்பவம் குறித்து திருமானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.