ETV Bharat / state

வடிகால் வசதி இல்லாததால் நீரில் மூழ்கிய நாற்றுகள்: விவசாயிகள் வேதனை! - farmers protest

அரியலூர்: புதிதாக அமைக்கப்பட்ட ஏரியின் கரையில் வடிகால் இல்லாமல் 80 ஏக்கர் வேளாண்மை நிலம் பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

farmers
author img

By

Published : Sep 25, 2019, 1:16 PM IST

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள குருவாடி கிராமத்தில் 25 ஏக்கர் சமவெளியை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்ட ஏரியின் கரை, கடந்த மாதம் புதிதாக அமைக்கப்பட்டது. இதற்கு வடிகால் வசதி செய்து தர வேண்டும் என விவசாயிகள் அப்போதே கோரிக்கைவிடுத்தனர்.

பின்னர் செய்து தருவதாகக் கூறிய அலுவலர்கள், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அப்படியே விட்டுவிட்டனர். இதனால், அரியலூர் மாவட்டத்தில் மழை பெய்தபோது ஏரிக்கு அருகிலுள்ள 80 ஏக்கர் விளைநிலத்தில் நீர் நிரம்பியது. தண்ணீரில் மூழ்கிய நெல் நாற்றுகள் அழுகிவிடும் சூழ்நிலையில் உள்ளது. இதன் காரணமாக மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

இதனை அலுவலர்கள் நேரடியாக ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாவட்ட நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை எடுத்தால் மட்டுமே விவசாயிகளையும் விவசாயத்தையும் காப்பாற்ற முடியும் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: உயர்மின்னழுத்த கோபுரங்களுக்கு வாடகை கேட்டு விவசாயிகள் போராட்டம்!

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள குருவாடி கிராமத்தில் 25 ஏக்கர் சமவெளியை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்ட ஏரியின் கரை, கடந்த மாதம் புதிதாக அமைக்கப்பட்டது. இதற்கு வடிகால் வசதி செய்து தர வேண்டும் என விவசாயிகள் அப்போதே கோரிக்கைவிடுத்தனர்.

பின்னர் செய்து தருவதாகக் கூறிய அலுவலர்கள், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அப்படியே விட்டுவிட்டனர். இதனால், அரியலூர் மாவட்டத்தில் மழை பெய்தபோது ஏரிக்கு அருகிலுள்ள 80 ஏக்கர் விளைநிலத்தில் நீர் நிரம்பியது. தண்ணீரில் மூழ்கிய நெல் நாற்றுகள் அழுகிவிடும் சூழ்நிலையில் உள்ளது. இதன் காரணமாக மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

இதனை அலுவலர்கள் நேரடியாக ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாவட்ட நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை எடுத்தால் மட்டுமே விவசாயிகளையும் விவசாயத்தையும் காப்பாற்ற முடியும் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: உயர்மின்னழுத்த கோபுரங்களுக்கு வாடகை கேட்டு விவசாயிகள் போராட்டம்!

Intro:அரியலூர் புதிதாக அமைக்கப்பட்ட ஏரியின் கரையில் வடிகால் இல்லாமல் 80 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


Body:அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள குருவாடி கிராமத்தில் 25 ஏக்கர் சமவெளியில் ஆக்கிரமித்து செய்யப்பட்டிருந்த வண்ணான் ஏரியின் கரை புதிதாக கடந்த மாதம் அமைக்கப்பட்டது இதற்கு அப்போது விவசாயிகள் வடிகால் வசதி செய்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர் அப்போது செய்து தருவதாக கூறி அதிகாரிகள் அதன் பிறகு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் விட்டதால் அரியலூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் ஏரியின் அரம்பிக்கும் அருகிலுள்ள m80 ஏக்கர் விளைநிலங்களில் நீர் நிரம்பிய வடி உள்ளதால் நெல் நாற்றுகள் அழுகி வீடும் சூழ்நிலையில் உள்ளது மேலும் அருகில் இரண்டு மீன் கோட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன அவற்றிலிருந்து மீன்கள் வெளியேறியதால் மீன் குட்டை அமைத்திருந்த வேண்டும் கஷ்டப்பட்டு உள்ளனர்


Conclusion:இதனை அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து வடிவத்தை செய்து தரவேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மாவட்ட நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை எடுத்தால் மட்டுமே விவசாயிகளையும் விவசாயத்தையும் காப்பாற்ற முடியும் எனவும் தெரிவித்தனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.