ETV Bharat / state

ஊரடங்கு தளர்வு: தமிழ்நாட்டில் இன்றுமுதல் பேருந்துகள் இயக்கம்!

கரோனா ஊரடங்கு உத்தரவில் கொண்டுவரப்பட்டுள்ள தளர்வு காரணமாக தமிழ்நாட்டில் இன்றுமுதல் அரசு, தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன.

author img

By

Published : Sep 1, 2020, 1:08 PM IST

Updated : Sep 1, 2020, 2:19 PM IST

curfew-relaxation-first-buses-in-tamil-nadu-today
curfew-relaxation-first-buses-in-tamil-nadu-today

தமிழ்நாட்டில் கரோனா ஊரடங்கு தளர்வு படிப்படியாக அமல்படுத்தப்பட்டுவருகிறது. அதன்படி செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் அந்தந்த மாவட்டத்திற்குள் மட்டும் பொது போக்குவரத்து இயங்கும் என அரசு அறிவித்தது. அதன்படி இன்று அனைத்து மாவட்டங்களிலும் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன.

அரியலூர்: பேருந்துகளுக்கான தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜெயங்கொண்டம் பணிமனையிலிருந்து 175 பேருந்துகள் இன்றுமுதல் மாவட்டம் முழுவதும் இயக்கப்பட்டுவருகின்றன. மேலும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள், பணியாளர்கள் என அனைவரும் கிருமிநாசினி, முகக்கவசம் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும் என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி: அரசின் அறிவிப்பையடுத்து தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து திருச்செந்தூர், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், நாசரேத், துறைமுகம், விளாத்திகுளம், கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பகுதிகளுக்கும் இன்றுமுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. இருப்பினும் பேருந்துகளில் குறைந்த அளவு பயணிகள் மட்டுமே பயணித்தனர்.

தருமபுரி: பேருந்துகளுக்கான தடை நீக்கப்பட்டதையடுத்து தருமபுரி மாவட்டத்தில் முதற்கட்டமாக 100 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. பின்னர் பயணிகளின் வருகையைப் பொறுத்து கூடுதல் பேருந்துகளை இயக்குவது குறித்து முடிவுசெய்யப்படும் எனப் போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு: இன்றுமுதல் மாவட்டங்களுக்குள் பேருந்துகள் இயக்கப்படலாம் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் 170-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டன. இருப்பினும் பயணிகளின் வருகை குறைவாக இருந்த காரணத்தினால் குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டதாக போக்குவரத்து கழகத்தினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:அரசு பேருந்துகளில் சோதனை பணிகள் தீவிரம்!

தமிழ்நாட்டில் கரோனா ஊரடங்கு தளர்வு படிப்படியாக அமல்படுத்தப்பட்டுவருகிறது. அதன்படி செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் அந்தந்த மாவட்டத்திற்குள் மட்டும் பொது போக்குவரத்து இயங்கும் என அரசு அறிவித்தது. அதன்படி இன்று அனைத்து மாவட்டங்களிலும் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன.

அரியலூர்: பேருந்துகளுக்கான தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜெயங்கொண்டம் பணிமனையிலிருந்து 175 பேருந்துகள் இன்றுமுதல் மாவட்டம் முழுவதும் இயக்கப்பட்டுவருகின்றன. மேலும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள், பணியாளர்கள் என அனைவரும் கிருமிநாசினி, முகக்கவசம் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும் என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி: அரசின் அறிவிப்பையடுத்து தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து திருச்செந்தூர், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், நாசரேத், துறைமுகம், விளாத்திகுளம், கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பகுதிகளுக்கும் இன்றுமுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. இருப்பினும் பேருந்துகளில் குறைந்த அளவு பயணிகள் மட்டுமே பயணித்தனர்.

தருமபுரி: பேருந்துகளுக்கான தடை நீக்கப்பட்டதையடுத்து தருமபுரி மாவட்டத்தில் முதற்கட்டமாக 100 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. பின்னர் பயணிகளின் வருகையைப் பொறுத்து கூடுதல் பேருந்துகளை இயக்குவது குறித்து முடிவுசெய்யப்படும் எனப் போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு: இன்றுமுதல் மாவட்டங்களுக்குள் பேருந்துகள் இயக்கப்படலாம் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் 170-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டன. இருப்பினும் பயணிகளின் வருகை குறைவாக இருந்த காரணத்தினால் குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டதாக போக்குவரத்து கழகத்தினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:அரசு பேருந்துகளில் சோதனை பணிகள் தீவிரம்!

Last Updated : Sep 1, 2020, 2:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.