ETV Bharat / state

நாட்டின் விடுதலையில் பாஜகவுக்கு துளியளவும் சம்பந்தமில்லை! -முத்தரசன் தாக்கு

அரியலூர்: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் தொல்.திருமாவளவனை ஆதரித்து அரியலூரில் பரப்புரை மேற்கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், நாட்டின் விடுதலைக்கும் பாஜகவுக்கும் துளியளவும் சம்பந்தமில்லை என தெரிவித்தார்.

author img

By

Published : Apr 1, 2019, 7:42 AM IST

இந்திய கம்யூனிஸ் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சிதம்பரம் தொகுதியில் நடந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டு திருமாவளவனுக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில்,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்

பறிபோன பேச்சு சுதந்திரம்

நாட்டின் விடுதலைக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் துளி அளவும் சம்பந்தமில்லை. ஆனால், நாட்டின் காவலாளி என மோடி சொல்லிக்கொள்கிறார். தனி மனிதனுக்கு பாதுகாப்பில்லாத நிலையே உள்ளது. தனியாக வெளியில் செல்ல அஞ்சும் நிலை உள்ளது. சமூக செயற்பாட்டாளர்கள் தனியாக வெளியில் நடமாட முடியவில்லை. முகிலன் காணாமல் போய் பல நாட்கள் ஆகி இன்னமும் அரசால் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆளும் கட்சியும்... வருமானவரிச் சோதனையும்...

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன், "2004இல் எவ்வாறு 40-க்கு 40 என திமுக கூட்டணி வெற்றி பெற்றதோ, அதேபோல் தற்போது நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலிலும் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் அமோக வெற்றிபெறும்.

அதேபோல இடைத்தேர்தல்களிலும் வெற்றுபெறுவோம். எதிரணியினர் வெற்றிபெற்று விடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாகத்தான் எங்களை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் துரைமுருகன் வீட்டில் சோதனை நடைபெற்றுள்ளது. மத்திய அரசு தனக்குள்ள அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை பழி வாங்குகின்றது.

மோடி ஒரு பொய்யர்! உண்மை பேசாத கட்சி பாஜக!

உயர் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரி ஆகியவை பாஜகவின் சாதனை என சொல்லப்பட்டது. ஆனால் சாதனை என்றால் தேர்தலில் பாஜகவினர் ஏன் அதை சொல்லவில்லை. பாஜக எப்போதும் உண்மையே பேசாத கட்சி. ஏனென்றால் அதனால் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அதிகளவில் நலிவடைந்து உள்ளன. இதன்காரணமாக லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்தனர். ஆனால் நாடு வளர்ச்சி அடைந்துள்ளதாக மோடி வாய் கூசாமல் பொய் பேசுகிறாகிறார்" என குற்றம்சாட்டினார்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சிதம்பரம் தொகுதியில் நடந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டு திருமாவளவனுக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில்,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்

பறிபோன பேச்சு சுதந்திரம்

நாட்டின் விடுதலைக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் துளி அளவும் சம்பந்தமில்லை. ஆனால், நாட்டின் காவலாளி என மோடி சொல்லிக்கொள்கிறார். தனி மனிதனுக்கு பாதுகாப்பில்லாத நிலையே உள்ளது. தனியாக வெளியில் செல்ல அஞ்சும் நிலை உள்ளது. சமூக செயற்பாட்டாளர்கள் தனியாக வெளியில் நடமாட முடியவில்லை. முகிலன் காணாமல் போய் பல நாட்கள் ஆகி இன்னமும் அரசால் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆளும் கட்சியும்... வருமானவரிச் சோதனையும்...

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன், "2004இல் எவ்வாறு 40-க்கு 40 என திமுக கூட்டணி வெற்றி பெற்றதோ, அதேபோல் தற்போது நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலிலும் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் அமோக வெற்றிபெறும்.

அதேபோல இடைத்தேர்தல்களிலும் வெற்றுபெறுவோம். எதிரணியினர் வெற்றிபெற்று விடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாகத்தான் எங்களை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் துரைமுருகன் வீட்டில் சோதனை நடைபெற்றுள்ளது. மத்திய அரசு தனக்குள்ள அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை பழி வாங்குகின்றது.

மோடி ஒரு பொய்யர்! உண்மை பேசாத கட்சி பாஜக!

உயர் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரி ஆகியவை பாஜகவின் சாதனை என சொல்லப்பட்டது. ஆனால் சாதனை என்றால் தேர்தலில் பாஜகவினர் ஏன் அதை சொல்லவில்லை. பாஜக எப்போதும் உண்மையே பேசாத கட்சி. ஏனென்றால் அதனால் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அதிகளவில் நலிவடைந்து உள்ளன. இதன்காரணமாக லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்தனர். ஆனால் நாடு வளர்ச்சி அடைந்துள்ளதாக மோடி வாய் கூசாமல் பொய் பேசுகிறாகிறார்" என குற்றம்சாட்டினார்.

அரியலூர்& மோடி ஒரு பொய்யர் உண்மை பேசாத கட்சி பாஜக இந்திய கம்யூனிஸ் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு


அரியலூர் அண்ணா சிலை அருகே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், வேட்பாளருமான தொல்.திருமாவளவனை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம்  நடைபெற்றது.
கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்துக் கொண்டு திருமாவளவனுக்கு வாக்கு சேகரித்தார். அவர் பேசும் போது தனிமனிதனுக்கு பாதுகாப்பில்லாத நிலையே உள்ளது. தனியாக வெளியில் செல்ல பயப்படும் நிலை உள்ளது. சமூக செயற்பாட்டாளர்கள் தனியாக வெளியில் நடமாட முடியவில்லை. முகிலன் காணாமல் போய் பலல நாட்கள்இன்னமும் அரசால் கண்டுபிடிக்க முடியவில்லை. 
ஆளும் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ள தேர்தல் பயத்தின் காரணமாகதான் திமுக கொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இவ்வாறு எத்தனை சோதனைகள் நடைபெற்றாலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்.  தமிழகத்தில் ஏரி,குளங்கள் தூர்வாரப்பட்டு வருவதாகவும் நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தமிழக முதல்வர் கூறி வருகின்றார். ஆனால் அவரது சொந்த மாவட்டத்திலேயே 300 ஏக்கர் பரப்பளவில் இருந்த ஏரியை தூர்த்து அடுக்குமாடி கட்டிடங்களை கட்ட அடிக்கல் நாட்டி உள்ளார் தமிழக முதல்வர்.  நாட்டின் விடுதலைக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் துளி அளவும் சம்மந்தமில்லை. ஆனால், நாட்டின் காவலாளி என மோடி சொல்லிக்கொள்கிறார். 

   பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன் 2004-ல் எவ்வாறு 40-க்கு 40 என திமுக கூட்டணி வெற்றி பெற்றதோ, அதேபோல் தற்போது நடைபெற உள்ள மக்களவை தேர்தலிலும் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் அமோக வெற்றிபெறும். அதே போல இடைத்தேர்தல்களிலும் வெற்று பெறுவோம். எதிரணியினாட வெற்றி பெற்று விடுவார்கள் என்ற அச்சத்தின் காணரமாகதான் எங்களை அவமானப்படுத்த வேண்டும் என்றதாலேயே துரைமுருகன் வீட்டில் சோதனை நடைபெற்றுள்ளது. மத்திய அரசு தனககுள்ள அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி எதிர்கட்சிகளை பலிவாங்குகின்றது. பாஜக பெருமையாக சொல்லிய உயர்பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜீஎஸ்டி குறித்து பாஜகவின் சாதனை என சொல்லப்பட்டது. ஆனால் சாதனை என்றால் தேர்தலில் பாஜகவினர் ஏன் சொல்லவில்லை. ஏனென்றால் அதனால் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டது. இதன்காரணமாக லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்தனர். நாடு வளர்ச்சி அடைந்துள்ளதாக மோடி கூறுகின்றார். அது உண்மைதான் அவரோடு உள்ள கார்பரேட்டுகள் வளர்ந்துள்ளார்கள் உன கூறினார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.