ETV Bharat / state

துர்நாற்றம் வீசிய சாக்கு மூட்டை.. போலீசாருக்கு காத்திருந்த ஷாக்!

author img

By

Published : Jan 7, 2023, 4:00 PM IST

அரியலூர் அருகே உள்ள கிராமத்தில் சாக்கு மூட்டைக்குள் துர்நாற்றம் வீசுவதை அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், சடலம் இருக்குமோ என்ற கோணத்திக் திறந்து பார்த்தபோது நாய் இருந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே உத்திரக்குடி என்ற சிறிய கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பேருந்து நிழற்குடை ஒன்றும் அதை ஒட்டி சில வீடுகளும் அதை ஒட்டி ஒரு குட்டையும் உள்ளது. பேருந்து நிறுத்தம் அருகே வந்த பொதுமக்கள் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அப்பகுதிகள் என்னவென்று தேடினர்.

அப்போது சாக்கு மூட்டை ஒன்றில் இருந்து துர்நாற்றம் வருவதை கண்ட அப்பகுதியினர் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர், சாக்கு மூட்டையில் பிணம் ஏதும் இருக்குமோ என்ற கோணத்தில் சந்தேகப்பட்டு, முதலில் மூட்டையை பிரிக்காமல் அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

ஒருவருக்கும் எவ்வித தகவலும் தெரியவில்லை. ஒரு வழியாக முகத்தில் கர்சிப் கட்டிக் கொண்டு சாக்கு முட்டையை காவல் துறையினர் பிரித்துப் பார்த்தவுடன் கடுப்பானார்கள். காரணம் சாக்கு மூட்டைக்குள் இறந்த நிலையில் நாய் ஒன்று இருந்தது. இறந்த நாயின் உடலை சாக்குப்பைக்குள் கட்டி அதனை விஷமிகள் சிலர் பேருந்து நிறுத்தம் அருகே வைத்து விட்டு சென்றது தெரியவந்தது.

இதையும் படிங்க: கடனுக்கு மதுபாட்டில் தராததால் டாஸ்மார்க் ஊழியருக்கு அரிவாள் வெட்டு

அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே உத்திரக்குடி என்ற சிறிய கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பேருந்து நிழற்குடை ஒன்றும் அதை ஒட்டி சில வீடுகளும் அதை ஒட்டி ஒரு குட்டையும் உள்ளது. பேருந்து நிறுத்தம் அருகே வந்த பொதுமக்கள் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அப்பகுதிகள் என்னவென்று தேடினர்.

அப்போது சாக்கு மூட்டை ஒன்றில் இருந்து துர்நாற்றம் வருவதை கண்ட அப்பகுதியினர் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர், சாக்கு மூட்டையில் பிணம் ஏதும் இருக்குமோ என்ற கோணத்தில் சந்தேகப்பட்டு, முதலில் மூட்டையை பிரிக்காமல் அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

ஒருவருக்கும் எவ்வித தகவலும் தெரியவில்லை. ஒரு வழியாக முகத்தில் கர்சிப் கட்டிக் கொண்டு சாக்கு முட்டையை காவல் துறையினர் பிரித்துப் பார்த்தவுடன் கடுப்பானார்கள். காரணம் சாக்கு மூட்டைக்குள் இறந்த நிலையில் நாய் ஒன்று இருந்தது. இறந்த நாயின் உடலை சாக்குப்பைக்குள் கட்டி அதனை விஷமிகள் சிலர் பேருந்து நிறுத்தம் அருகே வைத்து விட்டு சென்றது தெரியவந்தது.

இதையும் படிங்க: கடனுக்கு மதுபாட்டில் தராததால் டாஸ்மார்க் ஊழியருக்கு அரிவாள் வெட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.