ETV Bharat / state

பொறியாளர் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை! - பொறியாளர் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை

அரியலூர்: பொறியாளர் வீட்டை திறந்து 30 பவுன் நகை அரை கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

30-savaran-theft
30-savaran-theft
author img

By

Published : Dec 30, 2019, 11:44 PM IST

அரியலூர் மாவட்டம் பாரதியார் நகரில் வசிப்பவர் காமராஜ்(54). இவர் ஜெயங்கொண்டம் ஒன்றிய அலுவலகத்தில் பொறியாளராக வேலை பார்த்துவருகிறார். இவரது மனைவி எழிலரசி இரண்டு மகள்களுடன் வசித்துவருகிறார். இதனிடையில் காமராஜ் உள்ளாட்சித் தேர்தல் பணிக்காக சென்றுள்ளார். அவரது மனைவி, மகளுடன் அவரது தந்தை வீட்டில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு பின்பக்கம் வழியாக வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் வீட்டின் கதவுகளை போலி சாவி கொண்டு திறந்து பீரோவிலிருந்த 30 பவுன் நகை, அரை கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளை அடித்து சென்றனர்.

இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் எழிலரசி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல் துறையில் புகார் அளித்தார்.

30 பவுன் நகை கொள்ளை

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில் செந்துறை தாலுகா அலுவலகம் அருகே உள்ள சில வீடுகளில் இதேபோன்று பல கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றன. ஆனால் இதுவரை எந்த குற்றவாளிகளும் கைது செய்யப்படவில்லை. இதனாலேயே தொடர்ந்து இப்பகுதியில் கொள்ள சம்பவம் நடைபெறுகிறது. அரசும் காவல் துறையும் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து பொருட்களை மீட்க வேண்டும். அப்போதுதான் இப்பகுதி மக்கள் அச்சமின்றி வாழ முடியும் என்றனர்.

இதையும் படிங்க:

மஸ்கட்டில் கொத்தடிமையாக இருந்த தமிழ்நாட்டுப் பெண் மீட்பு!

அரியலூர் மாவட்டம் பாரதியார் நகரில் வசிப்பவர் காமராஜ்(54). இவர் ஜெயங்கொண்டம் ஒன்றிய அலுவலகத்தில் பொறியாளராக வேலை பார்த்துவருகிறார். இவரது மனைவி எழிலரசி இரண்டு மகள்களுடன் வசித்துவருகிறார். இதனிடையில் காமராஜ் உள்ளாட்சித் தேர்தல் பணிக்காக சென்றுள்ளார். அவரது மனைவி, மகளுடன் அவரது தந்தை வீட்டில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு பின்பக்கம் வழியாக வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் வீட்டின் கதவுகளை போலி சாவி கொண்டு திறந்து பீரோவிலிருந்த 30 பவுன் நகை, அரை கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளை அடித்து சென்றனர்.

இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் எழிலரசி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல் துறையில் புகார் அளித்தார்.

30 பவுன் நகை கொள்ளை

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில் செந்துறை தாலுகா அலுவலகம் அருகே உள்ள சில வீடுகளில் இதேபோன்று பல கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றன. ஆனால் இதுவரை எந்த குற்றவாளிகளும் கைது செய்யப்படவில்லை. இதனாலேயே தொடர்ந்து இப்பகுதியில் கொள்ள சம்பவம் நடைபெறுகிறது. அரசும் காவல் துறையும் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து பொருட்களை மீட்க வேண்டும். அப்போதுதான் இப்பகுதி மக்கள் அச்சமின்றி வாழ முடியும் என்றனர்.

இதையும் படிங்க:

மஸ்கட்டில் கொத்தடிமையாக இருந்த தமிழ்நாட்டுப் பெண் மீட்பு!

Intro:அரியலூர் - பொறியாளர் வீட்டை திறந்து 30 பவுன் நகை அரை கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை.Body:அரியலூர் மாவட்டம் செந்துறையில் இருந்து இலங்கைச்சேரி செல்லும் பாதையில் உள்ள பாரதியார் நகரில் வசிப்பவர் காமராஜ் வயது 54. இவர் ஜெயங்கொண்டம் ஒன்றிய அலுவலகத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார் இவரது மனைவி எழிலரசி மற்றும் இரண்டு மகள்களுடன் இங்கே வசித்து வருகிறார். இதனிடையில் காமராஜ் உள்ளாட்சி தேர்தல் பணிக்காக சென்று விட்டார். அதனால் அவரது மனைவி மற்றும் மகளுடன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள அவரது தந்தை வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு பின்பக்கம் வழியாக வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் வீட்டின் கதவுகளை போலி சாவி கொண்டு திறந்து உள்ளே சென்று அங்கே இருந்த பீரோவை திறந்து அதிலிருந்த 30 பவுன் நகை அரை கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளை அடித்து சென்று விட்டனர். இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல் எழிலரசி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் திறக்கப்பட்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து வந்த உறவினர்கள் திரண்டு சென்று செந்துறை போலீசில் புகார் செய்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் செந்துறை தாலுகா அலுவலகம் அருகே உள்ள சில வீடுகளில் இதே போன்று பல கொள்ளை சம்பவம் நடைபெற்று வந்துள்ளது. ஆனால் இதுவரை எந்த குற்றவாளிகளும் கைது செய்யப்படவில்லை. அதனாலேயே தொடர்ந்து இப்பகுதியில் கொள்ள சம்பவம் நடைபெறுகிறது..Conclusion:அரசும் காவல்துறையும் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து பொருட்களை மீட்க வேண்டும். அப்போதுதான் இப்பகுதி மக்கள் அச்சமின்றி வாழ முடியும் என்று கூறினார்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.