ETV Bharat / sports

எங்கள் மீது ஃபெடரருக்கு அக்கறை இல்லை - ஆண்ட்ரூ ஹாரிஸ் ஆதங்கம்!

author img

By

Published : Jul 2, 2020, 9:36 AM IST

சிட்னி: கரோனா வைரஸால் வருமானம் பாதிக்கப்பட்டுள்ள வீரர்களுக்கு உதவி செய்ய ரோஜர் ஃபெடரர் போன்ற முன்னணி வீரர்கள் யாரும் முன்வரவில்லை என ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூவ் ஹாரிஸ் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

'Roger Federer is all for the money': Harris slams at how tennis is handling the pandemic
'Roger Federer is all for the money': Harris slams at how tennis is handling the pandemic

கரோனா வைரஸால் கடந்த மூன்று மாதங்களாக எந்த ஒரு சர்வதேச டென்னிஸ் தொடர் போட்டிகளும் நடைபெறவில்லை. இதனால் தரவரிசை பட்டியலில் இருக்கும் வீரர்களின் வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்பெருந்தொற்றால் வருமானம் பாதிக்கப்பட்டுள்ள வீரர்களுக்கு உதவி செய்ய ரோஜர் ஃபெடரர் போன்ற முன்னணி வீரர்கள் யாரும் முன்வரவில்லை என ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூவ் ஹாரிஸ் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "டென்னிஸ் போட்டியில் பரிசுத் தொகையில் உள்ள முரண்பாடுகள், அதனை விநியோகிப்பது குறித்து பொது மக்களுக்கு எதுவும் தெரியாது. மேலும், முன்னணி வீரர்களுக்கு மட்டுமே பரிசுத் தொகை வழங்காமல் தொடர்களில் பங்கேற்கும் அனைவருக்கும் வழங்க வேண்டும்.

அவ்வாறு செய்யாததால் என்னைப் போன்ற தரவரிசை பட்டியலில் பின்தங்கி இருக்கும் வீரர்களுக்கு பணம் கிடைக்கவில்லை. எனவே தரவரிசை பட்டியலில் 100 ஆவது இடத்திலுள்ள வீரர்களுக்கும் உதவும் வகையில் சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் செயல்பட வேண்டும். குறிப்பாக தரவரிசைப் பட்டியலில் 300ஆவது இடத்தில் இருக்கும் வீரருக்கும் வருமானம் ஈட்டுவதற்கு ஒரு அமைப்பு எங்களுக்கு தேவை என நான் நினைக்கிறேன்.

தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் நீண்ட நாட்களாக இருந்த ஃபெடரர், நடால், நோவக் ஜோகோவிச் ஆகியோர் தாங்கள் எந்த அளவிற்கு கஷ்டப்படுகிறோம் என்பதை மறந்துவிடுகிறார்கள்.

குறிப்பாக தரவரிசை பட்டியலில் பின்தங்கியிருக்கும் வீரர்களுக்கும் பரிசு பணம் கிடைக்கிறதா என்பதைப் பற்றி ரோஜர் ஃபெடரருக்கு கவலை அடைந்ததே இல்லை. ஆனால் வெளி உலகில் தரவரிசை பட்டியலில் பின்தங்கியிருக்கும் வீரர்கள் மீது அக்கறை கொள்ளும் போல் தன்னைக் காட்டிக் கொள்கிறார்.

இவர்கள் மூவரில், ஜோகோவிச்தான் அதிகளவு எங்களுக்கு நிதி உதவி செய்து வருகிறார். ஆனால் இந்த கடினமான சூழலில் வருமானமின்றி தவிக்கும் வீரர்களுக்கு உதவி செய்ய ரோஜர் ஃபெடரர் போன்ற முன்னணி வீரர்கள் யாரும் முன்வரவில்லை" என்றார்.

முன்னதாக கரோனா வைரஸால் வருவாய் பாதிக்கப்பட்டு தரவரிசையில் 501 முதல் 700 இடங்களில் உள்ள வீரர்களுக்கும், இரட்டையர் பிரிவில் 176 முதல் 300 இடங்கள்வரை இடம் பிடித்துள்ள வீரர்களுக்கும் உதவும் வகையில் சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் 3 லட்சத்து 50 ஆயிரம் டாலர்கள் ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.

கரோனா வைரஸால் கடந்த மூன்று மாதங்களாக எந்த ஒரு சர்வதேச டென்னிஸ் தொடர் போட்டிகளும் நடைபெறவில்லை. இதனால் தரவரிசை பட்டியலில் இருக்கும் வீரர்களின் வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்பெருந்தொற்றால் வருமானம் பாதிக்கப்பட்டுள்ள வீரர்களுக்கு உதவி செய்ய ரோஜர் ஃபெடரர் போன்ற முன்னணி வீரர்கள் யாரும் முன்வரவில்லை என ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூவ் ஹாரிஸ் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "டென்னிஸ் போட்டியில் பரிசுத் தொகையில் உள்ள முரண்பாடுகள், அதனை விநியோகிப்பது குறித்து பொது மக்களுக்கு எதுவும் தெரியாது. மேலும், முன்னணி வீரர்களுக்கு மட்டுமே பரிசுத் தொகை வழங்காமல் தொடர்களில் பங்கேற்கும் அனைவருக்கும் வழங்க வேண்டும்.

அவ்வாறு செய்யாததால் என்னைப் போன்ற தரவரிசை பட்டியலில் பின்தங்கி இருக்கும் வீரர்களுக்கு பணம் கிடைக்கவில்லை. எனவே தரவரிசை பட்டியலில் 100 ஆவது இடத்திலுள்ள வீரர்களுக்கும் உதவும் வகையில் சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் செயல்பட வேண்டும். குறிப்பாக தரவரிசைப் பட்டியலில் 300ஆவது இடத்தில் இருக்கும் வீரருக்கும் வருமானம் ஈட்டுவதற்கு ஒரு அமைப்பு எங்களுக்கு தேவை என நான் நினைக்கிறேன்.

தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் நீண்ட நாட்களாக இருந்த ஃபெடரர், நடால், நோவக் ஜோகோவிச் ஆகியோர் தாங்கள் எந்த அளவிற்கு கஷ்டப்படுகிறோம் என்பதை மறந்துவிடுகிறார்கள்.

குறிப்பாக தரவரிசை பட்டியலில் பின்தங்கியிருக்கும் வீரர்களுக்கும் பரிசு பணம் கிடைக்கிறதா என்பதைப் பற்றி ரோஜர் ஃபெடரருக்கு கவலை அடைந்ததே இல்லை. ஆனால் வெளி உலகில் தரவரிசை பட்டியலில் பின்தங்கியிருக்கும் வீரர்கள் மீது அக்கறை கொள்ளும் போல் தன்னைக் காட்டிக் கொள்கிறார்.

இவர்கள் மூவரில், ஜோகோவிச்தான் அதிகளவு எங்களுக்கு நிதி உதவி செய்து வருகிறார். ஆனால் இந்த கடினமான சூழலில் வருமானமின்றி தவிக்கும் வீரர்களுக்கு உதவி செய்ய ரோஜர் ஃபெடரர் போன்ற முன்னணி வீரர்கள் யாரும் முன்வரவில்லை" என்றார்.

முன்னதாக கரோனா வைரஸால் வருவாய் பாதிக்கப்பட்டு தரவரிசையில் 501 முதல் 700 இடங்களில் உள்ள வீரர்களுக்கும், இரட்டையர் பிரிவில் 176 முதல் 300 இடங்கள்வரை இடம் பிடித்துள்ள வீரர்களுக்கும் உதவும் வகையில் சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் 3 லட்சத்து 50 ஆயிரம் டாலர்கள் ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.