ETV Bharat / sports

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாள்வீச்சு வீராங்கனை நன்றி!

ஒலிம்பிக் பயிற்சிக்காக ஐந்து லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

author img

By

Published : Jun 21, 2021, 1:03 PM IST

வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி வெளியிட்ட வீடியோ
வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி வெளியிட்ட வீடியோ

தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி, தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலையான வாள்வீச்சில் பயிற்சி பெற்று உலக அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, பல பதக்கங்களை வென்றுள்ளார்.

அவரின் ஊக்கத்தையும் , விடாமுயற்சியையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் ’விளையாட்டு அலுவலர்’ பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

பயிற்சியில் பவானி தேவி:

பவானிதேவி தற்போது ஐப்பான் நாட்டின், டோக்கியோ மாநகரில் நடைபெற உள்ள சர்வதேச ஒலிம்பிக் போட்டியில் விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இந்தியாவிலிருந்து ஒலிம்பிக் வாள்வீச்சுப் போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார்.

வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி வெளியிட்ட வீடியோ

தற்போது இப்போட்டிக்காக அவர் இத்தாலி நாட்டில் பயிற்சி பெற்று வருகிறார். சில பயிற்சிகள் பெற பவானி தேவி தமிழ்நாடு அரசிடம் ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவி கோரியிருந்தார்.

பவானி தேவியின் தாயாரிடத்தில்  காசோலை வழங்கிய முதலமைச்சர்
பவானி தேவியின் தாயாரிடத்தில் காசோலை வழங்கிய முதலமைச்சர்

முதலமைச்சருக்கு நன்றி:

இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசீலித்து, அவரை ஊக்குவிக்கும் வகையில், நேற்று (ஜூன்.20) தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஐந்து லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவரது தாயாரிடம் வழங்கினார்.

வாள்வீச்சு வீராங்கனை
வாள்வீச்சு வீராங்கனை

இதற்கு நன்றி தெரிவித்து பவானி தேவி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "முதலமைச்சருக்கு நன்றி. நாட்டிற்கு நாட்டு மக்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் ஒலிம்பிக்கில் எங்களுடைய பங்கேற்பு இருக்கும்" என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: வாள்வீச்சில் ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்ற முதல் இந்திய வீரர்

தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி, தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலையான வாள்வீச்சில் பயிற்சி பெற்று உலக அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, பல பதக்கங்களை வென்றுள்ளார்.

அவரின் ஊக்கத்தையும் , விடாமுயற்சியையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் ’விளையாட்டு அலுவலர்’ பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

பயிற்சியில் பவானி தேவி:

பவானிதேவி தற்போது ஐப்பான் நாட்டின், டோக்கியோ மாநகரில் நடைபெற உள்ள சர்வதேச ஒலிம்பிக் போட்டியில் விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இந்தியாவிலிருந்து ஒலிம்பிக் வாள்வீச்சுப் போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார்.

வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி வெளியிட்ட வீடியோ

தற்போது இப்போட்டிக்காக அவர் இத்தாலி நாட்டில் பயிற்சி பெற்று வருகிறார். சில பயிற்சிகள் பெற பவானி தேவி தமிழ்நாடு அரசிடம் ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவி கோரியிருந்தார்.

பவானி தேவியின் தாயாரிடத்தில்  காசோலை வழங்கிய முதலமைச்சர்
பவானி தேவியின் தாயாரிடத்தில் காசோலை வழங்கிய முதலமைச்சர்

முதலமைச்சருக்கு நன்றி:

இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசீலித்து, அவரை ஊக்குவிக்கும் வகையில், நேற்று (ஜூன்.20) தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஐந்து லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவரது தாயாரிடம் வழங்கினார்.

வாள்வீச்சு வீராங்கனை
வாள்வீச்சு வீராங்கனை

இதற்கு நன்றி தெரிவித்து பவானி தேவி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "முதலமைச்சருக்கு நன்றி. நாட்டிற்கு நாட்டு மக்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் ஒலிம்பிக்கில் எங்களுடைய பங்கேற்பு இருக்கும்" என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: வாள்வீச்சில் ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்ற முதல் இந்திய வீரர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.