ETV Bharat / sports

ஐஎஸ்எல் 7 : சென்னையின் எஃப்சி vs ஜாம்ஷெட்பூர் எஃப்சி! - இந்தியன் சூப்பர் லீக்

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணி - ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

ISL 7: Chennaiyin FC face old mastermind's challenge in Jamshedpur colours
ISL 7: Chennaiyin FC face old mastermind's challenge in Jamshedpur colours
author img

By

Published : Nov 24, 2020, 2:58 PM IST

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் கோலாகலமாக நடைபெற்றுவருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஒடிசா எஃப்சியை வீழ்த்தி, இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறும் ஐந்தாவது லீக் போட்டியில் சென்னையின் எஃப்சி அணி - ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. வாஸ்கோவிலுள்ள திலக் மைதன் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

சென்னையின் எஃப்சி:

ஐஎஸ்எல் தொடர் வரலாற்றில் சென்னையின் எஃப்சி அணி இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது. மேலும் கடந்த ஐஎஸ்எல் சீசனில் சென்னையின் எஃப்சி அணி இறுதிப்போட்டி வரை முன்னேறி, நூலிழையில் கோப்பையை தவறவிட்டிருந்தது.

இதனால் இந்த சீசனில் கோப்பையை வெல்லும் முனைப்போடு சென்னை அணி செயல்படும் என்பதால், இன்றைய ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஜாம்ஷெட்பூர் எஃப்சி:

2019-20 ஆம் ஆண்டிற்கான சீசனில் ஜாம்ஷெட்பூர் அணி மோசமான தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் எட்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் நடப்பு சீசனில் ஜாம்ஷெட்பூர் அணி பெரும் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.

அதிலும் குறிப்பாக கடந்த சீசனில் அதிக கோல்களை எடுத்த சென்னை அணியின் வால்ஸ்கீஸை ஜாம்ஷெட்பூர் அணி தன்வசம் இழுத்துள்ளது. இதனால் இன்றைய போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க:ஹைதராபாத் எஃப்சி அணியை வழிநடத்துகிறார் அதில் கான்!

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் கோலாகலமாக நடைபெற்றுவருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஒடிசா எஃப்சியை வீழ்த்தி, இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறும் ஐந்தாவது லீக் போட்டியில் சென்னையின் எஃப்சி அணி - ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. வாஸ்கோவிலுள்ள திலக் மைதன் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

சென்னையின் எஃப்சி:

ஐஎஸ்எல் தொடர் வரலாற்றில் சென்னையின் எஃப்சி அணி இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது. மேலும் கடந்த ஐஎஸ்எல் சீசனில் சென்னையின் எஃப்சி அணி இறுதிப்போட்டி வரை முன்னேறி, நூலிழையில் கோப்பையை தவறவிட்டிருந்தது.

இதனால் இந்த சீசனில் கோப்பையை வெல்லும் முனைப்போடு சென்னை அணி செயல்படும் என்பதால், இன்றைய ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஜாம்ஷெட்பூர் எஃப்சி:

2019-20 ஆம் ஆண்டிற்கான சீசனில் ஜாம்ஷெட்பூர் அணி மோசமான தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் எட்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் நடப்பு சீசனில் ஜாம்ஷெட்பூர் அணி பெரும் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.

அதிலும் குறிப்பாக கடந்த சீசனில் அதிக கோல்களை எடுத்த சென்னை அணியின் வால்ஸ்கீஸை ஜாம்ஷெட்பூர் அணி தன்வசம் இழுத்துள்ளது. இதனால் இன்றைய போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க:ஹைதராபாத் எஃப்சி அணியை வழிநடத்துகிறார் அதில் கான்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.