ETV Bharat / sports

இந்தியாவுக்கு 162 ரன்கள் இலக்கு

author img

By

Published : Aug 20, 2022, 5:11 PM IST

இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி வீரர்கள் 161 ரன்களை எடுத்துள்ளனர்.

Zimbabwe all out at 161 against India in 2nd ODI
Zimbabwe all out at 161 against India in 2nd ODI

ஹராரே: இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதன் பின் 2ஆவது ஒருநாள் போட்டி ஹராரோவில் இன்று (ஆக. 19) தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிங்கிய ஜிம்பாப்வே வீரர்கள் 38.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை எடுத்தனர்.

அதிகபட்சமாக சியேன் வில்லியம்ஸ் 42 பந்துகளுக்கு 42 ரன்களை எடுத்தார். அதேபோல ரியான் பர்ல் 47 பந்துகளுக்கு 39 ரன்களையும், சிக்கந்தர் ராசா, இன்னசென்ட் கையா இருவரும் தலா 16 ரன்களையும் எடுத்தனர். மறுப்புறம் பந்துவீச்சில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், அக்சர் படேல், தீபக் ஹூடா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினர்.

அந்த வகையில் 162 ரன்கள் இலக்குடன் இந்திய வீரர்கள் பேட்டிங்கை தொடங்கி உள்ளனர். முதலில் தொடக்க ஆட்டகாரரான ஷிகர் தவான் 21 பந்துகளுக்கு 33 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். கேப்டன் கேஎல் ராகுல் 5 பந்துகளில் ரன்களின்றி விக்கெட்டை இழந்தார். இதற்கடுத்து சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் பேட்டிங் செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க: இந்திய கிளப் அணிகளுக்கு திட்டமிட்ட போட்டிகளில் பங்கேற்க அனுமதி வேண்டும்... ஃபிஃபாவிடம் மத்திய அரசு கோரிக்கை...

ஹராரே: இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதன் பின் 2ஆவது ஒருநாள் போட்டி ஹராரோவில் இன்று (ஆக. 19) தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிங்கிய ஜிம்பாப்வே வீரர்கள் 38.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை எடுத்தனர்.

அதிகபட்சமாக சியேன் வில்லியம்ஸ் 42 பந்துகளுக்கு 42 ரன்களை எடுத்தார். அதேபோல ரியான் பர்ல் 47 பந்துகளுக்கு 39 ரன்களையும், சிக்கந்தர் ராசா, இன்னசென்ட் கையா இருவரும் தலா 16 ரன்களையும் எடுத்தனர். மறுப்புறம் பந்துவீச்சில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், அக்சர் படேல், தீபக் ஹூடா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினர்.

அந்த வகையில் 162 ரன்கள் இலக்குடன் இந்திய வீரர்கள் பேட்டிங்கை தொடங்கி உள்ளனர். முதலில் தொடக்க ஆட்டகாரரான ஷிகர் தவான் 21 பந்துகளுக்கு 33 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். கேப்டன் கேஎல் ராகுல் 5 பந்துகளில் ரன்களின்றி விக்கெட்டை இழந்தார். இதற்கடுத்து சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் பேட்டிங் செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க: இந்திய கிளப் அணிகளுக்கு திட்டமிட்ட போட்டிகளில் பங்கேற்க அனுமதி வேண்டும்... ஃபிஃபாவிடம் மத்திய அரசு கோரிக்கை...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.