ETV Bharat / sports

TNPL 2021 FINALS: ஜெகதீசன் அதிரடி; சென்னை 183 ரன்கள் குவிப்பு!

author img

By

Published : Aug 15, 2021, 10:49 PM IST

டிஎன்பிஎல் இறுதிப்போட்டியில் சென்னை அணி, திருச்சி அணிக்கு 184 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

TNPL 2021 FINALS
TNPL 2021 FINALS

சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) தொடரின் ஐந்தாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் நடைபெற்ற 28 லீக் போட்டிகளில் ரூபி திருச்சி வாரியர்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், லைகா கோவை கிங்ஸ் ஆகிய அணிகள் ப்ளோ-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றது.

இதையடுத்து, ரூபி திருச்சி வாரியர்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இப்போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (ஆக. 15) நடைபெற்று வருகிறது.

ஜெகதீசன் 90

டாஸ் வென்ற திருச்சி அணி, சென்னை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு, கௌசிக் காந்தி, ஜெகதீசன் இணை சிறப்பான தொடக்கத்தை அளித்ததனர். கேப்டன் கௌசிக் காந்தி 26 ரன்களில் பொய்யாமொழி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, களமிறங்கிய ராதாகிருஷ்ணன் 3 ரன்களில் வெளியேறினார்.

மறுமுனையில், ஜெகதீசன் 37 பந்துகளில் அரை சதம் அடித்தார். இருப்பினும், அவருடன் இணைந்து வேறு யாரும் பெரிய அளவில் ரன்கள் சேர்க்கவில்லை. சசிதேவ், ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, சதத்தை நெருங்கி வந்த ஜெகதீசன் 90 ரன்களில் பொய்யாமொழி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

தொடக்கமே அதிரடி

இதன்மூலம், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களை குவித்தது. திருச்சி தரப்பில் கேப்டன் ரஹில் ஷா, பொய்யாமொழி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து, களமிறங்கியுள்ள திருச்சி அணி 15 ஓவர்களில் 119/6 என்ற நிலையில் தொடர்ந்து விளையாடி வருகிறது.

இதையும் படிங்க: LORDS TEST: இங்கிலாந்து தாக்குதலை சமாளித்த புஜாரா, ரஹானே இணை!

சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) தொடரின் ஐந்தாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் நடைபெற்ற 28 லீக் போட்டிகளில் ரூபி திருச்சி வாரியர்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், லைகா கோவை கிங்ஸ் ஆகிய அணிகள் ப்ளோ-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றது.

இதையடுத்து, ரூபி திருச்சி வாரியர்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இப்போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (ஆக. 15) நடைபெற்று வருகிறது.

ஜெகதீசன் 90

டாஸ் வென்ற திருச்சி அணி, சென்னை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு, கௌசிக் காந்தி, ஜெகதீசன் இணை சிறப்பான தொடக்கத்தை அளித்ததனர். கேப்டன் கௌசிக் காந்தி 26 ரன்களில் பொய்யாமொழி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, களமிறங்கிய ராதாகிருஷ்ணன் 3 ரன்களில் வெளியேறினார்.

மறுமுனையில், ஜெகதீசன் 37 பந்துகளில் அரை சதம் அடித்தார். இருப்பினும், அவருடன் இணைந்து வேறு யாரும் பெரிய அளவில் ரன்கள் சேர்க்கவில்லை. சசிதேவ், ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, சதத்தை நெருங்கி வந்த ஜெகதீசன் 90 ரன்களில் பொய்யாமொழி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

தொடக்கமே அதிரடி

இதன்மூலம், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களை குவித்தது. திருச்சி தரப்பில் கேப்டன் ரஹில் ஷா, பொய்யாமொழி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து, களமிறங்கியுள்ள திருச்சி அணி 15 ஓவர்களில் 119/6 என்ற நிலையில் தொடர்ந்து விளையாடி வருகிறது.

இதையும் படிங்க: LORDS TEST: இங்கிலாந்து தாக்குதலை சமாளித்த புஜாரா, ரஹானே இணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.