ETV Bharat / sports

#20YearsOfMithaliRaj: மகளிர் கிரிக்கெட்டின் கதவுகளைத் தகர்த்த மிதாலி!

author img

By

Published : Jun 29, 2019, 4:56 PM IST

Updated : Jun 29, 2019, 7:51 PM IST

சில நாட்களுக்கு முன்னாள் ஒரு ஹேஷ்டேக் ட்விட்டரில் சில மணி நேரங்கள் மட்டும் ட்ரெண்டிங்கில் இருந்தது. அந்த ட்ரெண்டிங் ஹேஷ்டேக் என்னவென்றால், #20YearsOfMithaliRaj . ஆம் இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட்டில் 20 வருடங்களாக விளையாடி வருகிறார்.

மிதாலி ராஜ்

14 வயது சிறுமி ஒருவர் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார். அவரது பயிற்சியை பார்த்த அனைவருக்கும் ஆச்சரியம். சிறுமி எவ்வாறு அதிக வேகத்தில் வரும் பந்துகளை எளிதாக விரட்டியடிக்க முடியும் என... அப்போது அவர்களுக்கு ஒரு செய்தி தெரிவிக்கப்படுகிறது. உலகக்கோப்பையில் ஆடும் வீராங்கனைகளுக்கான பயிற்சி முகாமில் பயிற்சி பெறுவதற்கு இந்த சிறுமியும் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என... அந்த சிறுமிதான் தற்போது இருபது வருடங்களாக இந்திய அணிக்கு ஆடி பல சாதனைகளைப் படைத்துள்ள மிதாலி ராஜ்.

இந்தியாவில் கிரிக்கெட் மதம் தான்.. ஆனால் அந்த மதத்தில் பெரும்பாலானவர்கள் ஆடவர் கிரிக்கெட்டைதான் ரசிக்கிறார்கள். ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 1975ஆம் ஆண்டு தொடங்கியது. ஆனால் அதற்கு முன்னதாகவே உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் 1973ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளது.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மட்டுமே இதுவரை உலகக்கோப்பையை வென்று வந்துள்ளனர். முதன்முறையாக 1978க்கு பிறகு, 1997ஆம் ஆண்டுதான் மகளிர் உலகக்கோப்பையை இந்தியா நடத்துவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதற்கான பயிற்சிகளில் இந்திய சீனியர் வீராங்கனைகள் ஈடுபடுகையில், 14 வயது சிறுமி ஒருவர் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அவரது பயிற்சியை பார்த்த அனைவருக்கும் ஆச்சரியம். சிறுமி எவ்வாறு அதிக வேகத்தில் வரும் பந்துகளை எளிதாக விரட்டியடிக்க முடியும் என... அப்போது அவர்களுக்கு ஒரு செய்தி தெரிவிக்கப்படுகிறது. உலகக்கோப்பையில் ஆடும் வீராங்கனைகளுக்கான பயிற்சி முகாமில் பயிற்சி பெறுவதற்கு இந்த சிறுமியும் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என...

மிதாலி ராஜ்
மிதாலி ராஜ்
அந்த சிறுமி தான் தற்போது இருபது வருடங்களாக இந்திய அணிக்கு ஆடி பல சாதனைகளைப் படைத்துள்ள மிதாலி ராஜ்.

சிறுவயதில் அதிகமாக தூங்கும் பழக்கமுடைய மிதாலியை அவரது தந்தை, கிரிக்கெட் மீது ஆர்வம்கொண்ட மிதாலியின் அண்ணன் மிதுன் விளையாடும் மைதானத்துக்கு அழைத்துச் சென்று வீட்டுப் பாடம் செய்ய வைத்திருக்கிறார். வீட்டுப் பாடத்தை வேகமாக முடித்த அந்த தூங்குமூஞ்சி சிறுமி சிறிது நேரம் கிரிக்கெட் விளையாடுகிறார். தினுமும் விளையாட விளையாட கிரிக்கெட் பிடிக்கிறது. இதனைப் பார்த்த மிதுனின் பயிற்சியாளர் ஜோதி பிரசாத், மிதாலியின் ட்ரைவ்களையும், பந்துகளுக்கு ஏற்றவாறு கால்களை சரியாக நகர்த்துவதையும், ஃப்ரெண்ட் ஃபூட்டில் தடுத்து ஆடும் திறனையும் கண்டபோது பெரும் ஆச்சரியத்துக்குள்ளானார். மிதாலியின் தந்தையிடம் பேசி சம்பத் குமார் என்னும் பயிற்சியாளரிடம் கிரிக்கெட் பயிற்சி செய்ய பரிந்துரை செய்கிறார்.

மிதாலி ராஜ்
மிதாலி ராஜ்

அங்கிருந்துதான் மிதாலியின் கனவு தொடங்குகிறது. மிதாலியின் ஆட்டத்தைப் பார்த்த பயிற்சியாளர் சம்பத், இந்திய அணிக்காக மிதாலி நிச்சயம் ஆடுவார் என உறுதியளிக்கிறார். அப்போது மிதாலியின் வயது 14 மட்டுமே. அதனையடுத்து தான் கற்றுவந்த பரதநாட்டியத்திற்கு குட் பை சொல்லிவிட்டு, முழுக்க முழுக்க பந்தயத்திற்கு தயாராகும் குதிரைபோல கிரிக்கெட் பயிற்சியில் முழுமூச்சுடன் மிதாலி ஈடுபட்டுள்ளார். பின்னர், உலகக்கோப்பை தொடருக்கு வயதின் காரணமாக மிதாலி தேர்வு செய்யப்படவில்லை.

பின்னர் தொடர்ந்து பயிற்சியில் மட்டுமே ஈடுபட்டு வந்தார். காலை, நண்பகல், மாலை மட்டுமல்ல இரவு நேரங்களிலும் பயிற்சி தொடர்கிறது. இரவு நேரங்களில் என்ன பயிற்சி என அம்மா கேட்டபோது, இரவு நேரங்களில் பந்தை சிறப்பாக அடிக்க தொடங்கினால் பகல் நேரத்தில் எப்படி அடிக்கலாம் என பதில் கூறியுள்ளார்.

1997ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரை ஆஸ்திரேலியா வென்றது. இதனையடுத்து இந்திய அணி அடுத்த சர்வதேச போட்டியை ஒரு வருடத்திற்கும் மேல் ஆடவில்லை. சீனியர் வீராங்கனைகள் வெளியேறுகிறார்கள், நிர்வாகத்தின் பணப்பிரச்னை என ஒவ்வொரு பிரச்னையாக எழுகிறது.

அப்போதுதான் இந்திய அணிக்கு 16 வயதே ஆகும் மிதாலி ராஜ் தேர்வு செய்யப்படுகிறார். 1999 ஜூன் 26, அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டி. மிதாலி ராஜ் - ரேஷ்மா காந்தி இணையர் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்குகின்றனர். முதல் போட்டியிலேயே இறுதிவரை ஆட்டமிழக்காமல் சதம் விளாசி 114 ரன்கள் சேர்க்கிறார். சீனியர் வீராங்கனைகளுக்கு தெரிந்துவிட்டது, இந்திய மகளிர் கிரிக்கெட்டின் எதிர்காலம் கண்முன் ’கெத்து’காட்டிக் கொண்டிருக்கிறது என...

மிதாலி ராஜ்
இங்கிலாந்து போட்டியில் இரட்டை சதம் விளாசிய மிதாலி ராஜ்

தொடர்ந்து நியூசிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடர்களில் எல்லாம் மிதாலியின் ருத்ரதாண்டவம். மூன்று போட்டிகளில் இரண்டு அரைசதம் என அதிரடியாக கலக்கியபோது, திடீரென மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு நாடு திரும்பினார். மிதாலி இல்லாமல் சமாளிக்க முடியாத இந்திய அணி, உலகக்கோப்பை தொடரைவிட்டு வெளியேறியது. மிதாலியின் ஆட்டத்தைப் பார்த்து முதன்முறையாக இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லப் போகிறது என எண்ணியவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

முதல் ஒருநாள் போட்டியிலேயே சதம் விளாசியதால், முதல் டெஸ்ட் போட்டியில் மிதாலி மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு உயர்கிறது. ஆனால் முதல் போட்டியிலேயே டக் அவுட்.

பின்னர் இரண்டாவது போட்டியில் அரைசதம் அடித்தாலும், மூன்றாவது போட்டியில்தான் மிதாலியின் விஸ்வரூபம் வெளிப்பட்டது. எவள் என்று நினைத்தாய்.. எதைக் கண்டு சிரித்தாய் என கேட்கும் விதமாய் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச தனிநபர் ரன்னான கரண் ரோல்டனின் சாதனையை அடித்து நொறுக்குகிறார். இங்கிலாந்து அணிக்கு எதிராக 214 ரன்கள் எடுத்தப்போது, உலகமே திரும்பிப் பார்த்தது.

மிதாலி ராஜ்
மிதாலி ராஜ்

214 ரன்கள் அடித்தார் என்பதால் அல்ல. உலக மகளிர் கிரிக்கெட்டை ஆளும் அணியான இங்கிலாந்து அணிக்கு எதிராக அவர் ஆடிய ஆட்டம், வெளிப்படுத்திய நிதானம், ஆடிய விதம் என மிரட்டலாய் அமைகிறது மிதாலியின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை. அங்கேதான் இந்திய மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கான நெருப்பு பற்ற வைக்கப்பட்டது.

இந்த இன்னிங்ஸ் குறித்து ஒருமுறை மிதாலி பேசுகையில், உலகக்கோப்பைத் தொடருக்கான பயிற்சி முகாம் செல்வதற்கு முன் என் பயிற்சியாளர் சம்பத் குமார் விபத்தில் உயிரிழந்தார். அப்போது என் கிரிக்கெட் வாழ்க்கை தொடங்குவதற்கு முன்னதாகவே முடிந்துவிட்டதாக நினைத்தேன். அப்போது என்னுடன் நான் அதிக நேரம் செலவிட்டேன். நம்முடன் நாம் அதிக நேரம் செலவிடும்போதுதான் நம்மை நாம் அறிந்துகொள்ள முடியும். நான் அறிந்துகொண்டேன். அதனால்தான் இங்கிலாந்து அணிக்கு எதிராக சிறப்பாக ஆட முடிந்தது என்றார்.

மிதாலி ராஜ்
மிதாலி ராஜ்

அதன்பிறகு மிதாலி ரயில்வே அணியில் இடம்பிடித்தார். அங்கேதான் மிதாலி களமிறங்கும் இடம் நிர்ணயிக்கப்பட்டது. முக்கியமான வீராங்கனைகள் ஆடும் மூன்றாவது இடத்தில் மிதாலி களமிறக்கப்பட்டார்.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிதாலி ராஜ், இந்திய மகளிர் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்படுகிறார். 2005ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் முதன்முறையாக இந்திய அணி அரையிறுதி வரை செல்கிறது. அரையிறுதியில் வலிமை மிகுந்த நியூசிலாந்து அணியை மிதாலியின் துணையோடு வென்று உலகக்கோப்பை போட்டியின் இறுதிப் போட்டிக்கு முதன்முறையாக இந்திய மகளிர் அணி முன்னேறுகிறது. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் மைதானத்தில் குவிகின்றனர். இந்திய மகளிர் அணிக்கு அதிக பிரஷர் அந்த ஆட்டத்தில்.

பலரும் எதிர்பார்த்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் இந்திய அணி தோற்கிறது. ஆனால் தாங்கள் யார் என்பதை இந்திய மகளிர் அணி அனைவருக்கும் ஆணித்தரமாக உணர்த்தியது. அங்கிருந்து இந்திய மகளிர் அணிக்கு புதிய ரத்தம் பாய்ச்சப்படுகிறது.

மிதாலி ராஜ்
மிதாலி ராஜ்

மிதாலி, ஜுலன் கோஸ்வாமி போன்ற சிறந்த வீராங்கனைகளால் இந்திய மகளிர் கிரிக்கெட் பற்றி அனைவருக்கும் தெரிகிறது. மிதாலியை தொடர்ந்து வேதா கிருஷ்ணமூர்த்தி, ஸ்மிருதி மந்தனா, ஹர்மன் ப்ரீத் கவுர் என மிகச்சிறந்த வீராங்கனைகளை இந்தியா கண்டடைகிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிராக மிதாலி - ஹர்மன் ப்ரீத் கவுர் இருவரும் ஆடிய ஆட்டம், 2014ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மிதாலி - மந்தனா இணை இலக்கை விரட்டி சாதனை படைத்தது எல்லாம் மிதாலியின் மேஜிக்.

மிதாலி ராஜ்
மிதாலி ராஜ்

மிதாலி தலைமையில் தொடர்ந்து ஆறாவது முறையாக ஆசியக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது. 2017ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரோடு ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டபோது, தொடர்ந்து டி20 கிரிக்கெட்டிலும் ஒரு கை பார்த்தது எல்லாம் சிறப்பான சம்பவம்.

இன்றுவரை இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளில் யாரைக் கேட்டாலும் அவர்களின் ரோல் மாடல் மிதாலிதான். இதுவரை 200க்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகளில் விளையாடி சாதனை, ஆறாயிரம் ரன்கள் குவித்த முதல் வீராங்கனை என்ற சாதனை, டி20 போட்டிகளில் இந்திய ஆடவர் அணி வீரர்களின் ரன்களையும் கடந்து முதல் இடம்பிடித்து சாதனை என மிதாலியின் சாதனைகள் நீள்கின்றன.

மிதாலி ராஜ்
உலகக்கோப்பை தொடரில் போட்டியின்போது புத்தகம் படித்த மிதாலி ராஜ்

பவுண்டரி லைனில் இருந்து பாடம் படித்த அதே மிதாலிதான், அதே பவுண்டரி லைனில் இருந்து புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறார். அன்றிலிருந்து இன்றுவரை எதுவும் மாறவில்லை. மிதாலிக்கு தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்று தான் ... பேட்டை எடுத்து எதிரில் வரும் பந்தை யாரும் அடிக்க முடியாத அளவிற்கு அடிக்கத் தெரியும். கிரிக்கெட்டில் இவர் படைத்த சாதனைகள் அனைத்தையும் தாண்டி, மகளிர் கிரிக்கெட்டை ஒவ்வொரு கிராமத்துக்கும் கொண்டு சென்று மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு வித்திட்டவர் என்ற பெயர் வரலாற்றில் இடம்பெறும். இன்னும் நிறைய ஆண்டுகள் விளையாடி பல மிதாலிகளுக்கு உத்வேகம் அளிக்க வாழ்த்துகள்..!

14 வயது சிறுமி ஒருவர் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார். அவரது பயிற்சியை பார்த்த அனைவருக்கும் ஆச்சரியம். சிறுமி எவ்வாறு அதிக வேகத்தில் வரும் பந்துகளை எளிதாக விரட்டியடிக்க முடியும் என... அப்போது அவர்களுக்கு ஒரு செய்தி தெரிவிக்கப்படுகிறது. உலகக்கோப்பையில் ஆடும் வீராங்கனைகளுக்கான பயிற்சி முகாமில் பயிற்சி பெறுவதற்கு இந்த சிறுமியும் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என... அந்த சிறுமிதான் தற்போது இருபது வருடங்களாக இந்திய அணிக்கு ஆடி பல சாதனைகளைப் படைத்துள்ள மிதாலி ராஜ்.

இந்தியாவில் கிரிக்கெட் மதம் தான்.. ஆனால் அந்த மதத்தில் பெரும்பாலானவர்கள் ஆடவர் கிரிக்கெட்டைதான் ரசிக்கிறார்கள். ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 1975ஆம் ஆண்டு தொடங்கியது. ஆனால் அதற்கு முன்னதாகவே உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் 1973ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளது.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மட்டுமே இதுவரை உலகக்கோப்பையை வென்று வந்துள்ளனர். முதன்முறையாக 1978க்கு பிறகு, 1997ஆம் ஆண்டுதான் மகளிர் உலகக்கோப்பையை இந்தியா நடத்துவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதற்கான பயிற்சிகளில் இந்திய சீனியர் வீராங்கனைகள் ஈடுபடுகையில், 14 வயது சிறுமி ஒருவர் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அவரது பயிற்சியை பார்த்த அனைவருக்கும் ஆச்சரியம். சிறுமி எவ்வாறு அதிக வேகத்தில் வரும் பந்துகளை எளிதாக விரட்டியடிக்க முடியும் என... அப்போது அவர்களுக்கு ஒரு செய்தி தெரிவிக்கப்படுகிறது. உலகக்கோப்பையில் ஆடும் வீராங்கனைகளுக்கான பயிற்சி முகாமில் பயிற்சி பெறுவதற்கு இந்த சிறுமியும் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என...

மிதாலி ராஜ்
மிதாலி ராஜ்
அந்த சிறுமி தான் தற்போது இருபது வருடங்களாக இந்திய அணிக்கு ஆடி பல சாதனைகளைப் படைத்துள்ள மிதாலி ராஜ்.

சிறுவயதில் அதிகமாக தூங்கும் பழக்கமுடைய மிதாலியை அவரது தந்தை, கிரிக்கெட் மீது ஆர்வம்கொண்ட மிதாலியின் அண்ணன் மிதுன் விளையாடும் மைதானத்துக்கு அழைத்துச் சென்று வீட்டுப் பாடம் செய்ய வைத்திருக்கிறார். வீட்டுப் பாடத்தை வேகமாக முடித்த அந்த தூங்குமூஞ்சி சிறுமி சிறிது நேரம் கிரிக்கெட் விளையாடுகிறார். தினுமும் விளையாட விளையாட கிரிக்கெட் பிடிக்கிறது. இதனைப் பார்த்த மிதுனின் பயிற்சியாளர் ஜோதி பிரசாத், மிதாலியின் ட்ரைவ்களையும், பந்துகளுக்கு ஏற்றவாறு கால்களை சரியாக நகர்த்துவதையும், ஃப்ரெண்ட் ஃபூட்டில் தடுத்து ஆடும் திறனையும் கண்டபோது பெரும் ஆச்சரியத்துக்குள்ளானார். மிதாலியின் தந்தையிடம் பேசி சம்பத் குமார் என்னும் பயிற்சியாளரிடம் கிரிக்கெட் பயிற்சி செய்ய பரிந்துரை செய்கிறார்.

மிதாலி ராஜ்
மிதாலி ராஜ்

அங்கிருந்துதான் மிதாலியின் கனவு தொடங்குகிறது. மிதாலியின் ஆட்டத்தைப் பார்த்த பயிற்சியாளர் சம்பத், இந்திய அணிக்காக மிதாலி நிச்சயம் ஆடுவார் என உறுதியளிக்கிறார். அப்போது மிதாலியின் வயது 14 மட்டுமே. அதனையடுத்து தான் கற்றுவந்த பரதநாட்டியத்திற்கு குட் பை சொல்லிவிட்டு, முழுக்க முழுக்க பந்தயத்திற்கு தயாராகும் குதிரைபோல கிரிக்கெட் பயிற்சியில் முழுமூச்சுடன் மிதாலி ஈடுபட்டுள்ளார். பின்னர், உலகக்கோப்பை தொடருக்கு வயதின் காரணமாக மிதாலி தேர்வு செய்யப்படவில்லை.

பின்னர் தொடர்ந்து பயிற்சியில் மட்டுமே ஈடுபட்டு வந்தார். காலை, நண்பகல், மாலை மட்டுமல்ல இரவு நேரங்களிலும் பயிற்சி தொடர்கிறது. இரவு நேரங்களில் என்ன பயிற்சி என அம்மா கேட்டபோது, இரவு நேரங்களில் பந்தை சிறப்பாக அடிக்க தொடங்கினால் பகல் நேரத்தில் எப்படி அடிக்கலாம் என பதில் கூறியுள்ளார்.

1997ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரை ஆஸ்திரேலியா வென்றது. இதனையடுத்து இந்திய அணி அடுத்த சர்வதேச போட்டியை ஒரு வருடத்திற்கும் மேல் ஆடவில்லை. சீனியர் வீராங்கனைகள் வெளியேறுகிறார்கள், நிர்வாகத்தின் பணப்பிரச்னை என ஒவ்வொரு பிரச்னையாக எழுகிறது.

அப்போதுதான் இந்திய அணிக்கு 16 வயதே ஆகும் மிதாலி ராஜ் தேர்வு செய்யப்படுகிறார். 1999 ஜூன் 26, அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டி. மிதாலி ராஜ் - ரேஷ்மா காந்தி இணையர் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்குகின்றனர். முதல் போட்டியிலேயே இறுதிவரை ஆட்டமிழக்காமல் சதம் விளாசி 114 ரன்கள் சேர்க்கிறார். சீனியர் வீராங்கனைகளுக்கு தெரிந்துவிட்டது, இந்திய மகளிர் கிரிக்கெட்டின் எதிர்காலம் கண்முன் ’கெத்து’காட்டிக் கொண்டிருக்கிறது என...

மிதாலி ராஜ்
இங்கிலாந்து போட்டியில் இரட்டை சதம் விளாசிய மிதாலி ராஜ்

தொடர்ந்து நியூசிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடர்களில் எல்லாம் மிதாலியின் ருத்ரதாண்டவம். மூன்று போட்டிகளில் இரண்டு அரைசதம் என அதிரடியாக கலக்கியபோது, திடீரென மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு நாடு திரும்பினார். மிதாலி இல்லாமல் சமாளிக்க முடியாத இந்திய அணி, உலகக்கோப்பை தொடரைவிட்டு வெளியேறியது. மிதாலியின் ஆட்டத்தைப் பார்த்து முதன்முறையாக இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லப் போகிறது என எண்ணியவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

முதல் ஒருநாள் போட்டியிலேயே சதம் விளாசியதால், முதல் டெஸ்ட் போட்டியில் மிதாலி மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு உயர்கிறது. ஆனால் முதல் போட்டியிலேயே டக் அவுட்.

பின்னர் இரண்டாவது போட்டியில் அரைசதம் அடித்தாலும், மூன்றாவது போட்டியில்தான் மிதாலியின் விஸ்வரூபம் வெளிப்பட்டது. எவள் என்று நினைத்தாய்.. எதைக் கண்டு சிரித்தாய் என கேட்கும் விதமாய் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச தனிநபர் ரன்னான கரண் ரோல்டனின் சாதனையை அடித்து நொறுக்குகிறார். இங்கிலாந்து அணிக்கு எதிராக 214 ரன்கள் எடுத்தப்போது, உலகமே திரும்பிப் பார்த்தது.

மிதாலி ராஜ்
மிதாலி ராஜ்

214 ரன்கள் அடித்தார் என்பதால் அல்ல. உலக மகளிர் கிரிக்கெட்டை ஆளும் அணியான இங்கிலாந்து அணிக்கு எதிராக அவர் ஆடிய ஆட்டம், வெளிப்படுத்திய நிதானம், ஆடிய விதம் என மிரட்டலாய் அமைகிறது மிதாலியின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை. அங்கேதான் இந்திய மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கான நெருப்பு பற்ற வைக்கப்பட்டது.

இந்த இன்னிங்ஸ் குறித்து ஒருமுறை மிதாலி பேசுகையில், உலகக்கோப்பைத் தொடருக்கான பயிற்சி முகாம் செல்வதற்கு முன் என் பயிற்சியாளர் சம்பத் குமார் விபத்தில் உயிரிழந்தார். அப்போது என் கிரிக்கெட் வாழ்க்கை தொடங்குவதற்கு முன்னதாகவே முடிந்துவிட்டதாக நினைத்தேன். அப்போது என்னுடன் நான் அதிக நேரம் செலவிட்டேன். நம்முடன் நாம் அதிக நேரம் செலவிடும்போதுதான் நம்மை நாம் அறிந்துகொள்ள முடியும். நான் அறிந்துகொண்டேன். அதனால்தான் இங்கிலாந்து அணிக்கு எதிராக சிறப்பாக ஆட முடிந்தது என்றார்.

மிதாலி ராஜ்
மிதாலி ராஜ்

அதன்பிறகு மிதாலி ரயில்வே அணியில் இடம்பிடித்தார். அங்கேதான் மிதாலி களமிறங்கும் இடம் நிர்ணயிக்கப்பட்டது. முக்கியமான வீராங்கனைகள் ஆடும் மூன்றாவது இடத்தில் மிதாலி களமிறக்கப்பட்டார்.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிதாலி ராஜ், இந்திய மகளிர் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்படுகிறார். 2005ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் முதன்முறையாக இந்திய அணி அரையிறுதி வரை செல்கிறது. அரையிறுதியில் வலிமை மிகுந்த நியூசிலாந்து அணியை மிதாலியின் துணையோடு வென்று உலகக்கோப்பை போட்டியின் இறுதிப் போட்டிக்கு முதன்முறையாக இந்திய மகளிர் அணி முன்னேறுகிறது. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் மைதானத்தில் குவிகின்றனர். இந்திய மகளிர் அணிக்கு அதிக பிரஷர் அந்த ஆட்டத்தில்.

பலரும் எதிர்பார்த்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் இந்திய அணி தோற்கிறது. ஆனால் தாங்கள் யார் என்பதை இந்திய மகளிர் அணி அனைவருக்கும் ஆணித்தரமாக உணர்த்தியது. அங்கிருந்து இந்திய மகளிர் அணிக்கு புதிய ரத்தம் பாய்ச்சப்படுகிறது.

மிதாலி ராஜ்
மிதாலி ராஜ்

மிதாலி, ஜுலன் கோஸ்வாமி போன்ற சிறந்த வீராங்கனைகளால் இந்திய மகளிர் கிரிக்கெட் பற்றி அனைவருக்கும் தெரிகிறது. மிதாலியை தொடர்ந்து வேதா கிருஷ்ணமூர்த்தி, ஸ்மிருதி மந்தனா, ஹர்மன் ப்ரீத் கவுர் என மிகச்சிறந்த வீராங்கனைகளை இந்தியா கண்டடைகிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிராக மிதாலி - ஹர்மன் ப்ரீத் கவுர் இருவரும் ஆடிய ஆட்டம், 2014ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மிதாலி - மந்தனா இணை இலக்கை விரட்டி சாதனை படைத்தது எல்லாம் மிதாலியின் மேஜிக்.

மிதாலி ராஜ்
மிதாலி ராஜ்

மிதாலி தலைமையில் தொடர்ந்து ஆறாவது முறையாக ஆசியக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது. 2017ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரோடு ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டபோது, தொடர்ந்து டி20 கிரிக்கெட்டிலும் ஒரு கை பார்த்தது எல்லாம் சிறப்பான சம்பவம்.

இன்றுவரை இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளில் யாரைக் கேட்டாலும் அவர்களின் ரோல் மாடல் மிதாலிதான். இதுவரை 200க்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகளில் விளையாடி சாதனை, ஆறாயிரம் ரன்கள் குவித்த முதல் வீராங்கனை என்ற சாதனை, டி20 போட்டிகளில் இந்திய ஆடவர் அணி வீரர்களின் ரன்களையும் கடந்து முதல் இடம்பிடித்து சாதனை என மிதாலியின் சாதனைகள் நீள்கின்றன.

மிதாலி ராஜ்
உலகக்கோப்பை தொடரில் போட்டியின்போது புத்தகம் படித்த மிதாலி ராஜ்

பவுண்டரி லைனில் இருந்து பாடம் படித்த அதே மிதாலிதான், அதே பவுண்டரி லைனில் இருந்து புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறார். அன்றிலிருந்து இன்றுவரை எதுவும் மாறவில்லை. மிதாலிக்கு தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்று தான் ... பேட்டை எடுத்து எதிரில் வரும் பந்தை யாரும் அடிக்க முடியாத அளவிற்கு அடிக்கத் தெரியும். கிரிக்கெட்டில் இவர் படைத்த சாதனைகள் அனைத்தையும் தாண்டி, மகளிர் கிரிக்கெட்டை ஒவ்வொரு கிராமத்துக்கும் கொண்டு சென்று மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு வித்திட்டவர் என்ற பெயர் வரலாற்றில் இடம்பெறும். இன்னும் நிறைய ஆண்டுகள் விளையாடி பல மிதாலிகளுக்கு உத்வேகம் அளிக்க வாழ்த்துகள்..!

Intro:Body:Conclusion:
Last Updated : Jun 29, 2019, 7:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.