ETV Bharat / sports

வந்துட்டேன்னு சொல்லு... கேப்டனா நான் வந்துட்டேன்னு சொல்லு - பொல்லார்டு ரிட்டன்ஸ்

author img

By

Published : Sep 10, 2019, 7:38 AM IST

ஒருநாள், டி20 போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக ஆல்ரவுண்டர் பொல்லார்டு நியமிக்கப்பட்டுள்ளார்.

Pollard

ஜேசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த சில ஆண்டுகளாக மோசமான ஆட்டத்திறனை வெளிப்படுத்திவருகிறது. குறிப்பாக, இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில், அந்த அணி விளையாடிய ஒன்பது போட்டிகளில் இரண்டு வெற்றிகளை மட்டுமே பதிவு செய்து ஒன்பதாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இந்திய அணிக்கு எதிரான தொடரையும் 0-2 என இழந்தது. 2015 முதல் 2019 வரை ஜேசன் ஹோல்டர் 86 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். அதில், 24 வெற்றி 54 தோல்விகளைப் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், ஒருநாள் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக ஜேசன் ஹோல்டர், டி20 போட்டியின் கேப்டன் பிராத்வொயிட் ஆகியோரை கேப்டன் பொறுப்பிலிருந்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் நீக்கியது. டி20, ஒருநாள் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியின் புதிய கேப்டனாக பொல்லார்டு இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 உலகக்கோப்பை கருத்தில் கொண்டுதான் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Pollard
பொல்லார்டு

அதேசமயம், வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான பொல்லார்டு கடந்த மூன்று ஆண்டுகளாக ஒருநாள் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பிடிக்காமல் இருந்தார். அவர் இறுதியாக, 2016இல் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில்தான் விளையாடினார். இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 62 டி20, 101 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அவர் மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜேசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த சில ஆண்டுகளாக மோசமான ஆட்டத்திறனை வெளிப்படுத்திவருகிறது. குறிப்பாக, இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில், அந்த அணி விளையாடிய ஒன்பது போட்டிகளில் இரண்டு வெற்றிகளை மட்டுமே பதிவு செய்து ஒன்பதாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இந்திய அணிக்கு எதிரான தொடரையும் 0-2 என இழந்தது. 2015 முதல் 2019 வரை ஜேசன் ஹோல்டர் 86 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். அதில், 24 வெற்றி 54 தோல்விகளைப் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், ஒருநாள் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக ஜேசன் ஹோல்டர், டி20 போட்டியின் கேப்டன் பிராத்வொயிட் ஆகியோரை கேப்டன் பொறுப்பிலிருந்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் நீக்கியது. டி20, ஒருநாள் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியின் புதிய கேப்டனாக பொல்லார்டு இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 உலகக்கோப்பை கருத்தில் கொண்டுதான் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Pollard
பொல்லார்டு

அதேசமயம், வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான பொல்லார்டு கடந்த மூன்று ஆண்டுகளாக ஒருநாள் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பிடிக்காமல் இருந்தார். அவர் இறுதியாக, 2016இல் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில்தான் விளையாடினார். இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 62 டி20, 101 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அவர் மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:ஆசிரியர்கள் சம்பளபிரச்சினைக்கு தீர்வு


Body:19,427 ஆசிரியர் அரசு ஊழியர் பணியிடங்கள் நிரந்தரமாக மாற்றும்
ஆசிரியர்கள் சம்பளபிரச்சினைக்கு தீர்வு
சென்னை,

பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களாக பணிபுரிந்துவரும் 19 ஆயிரத்து 427 பணியிடங்களை நிரந்தரமாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் ஆண்டுதோறும் புதிதாக தொடக்கப் பள்ளிகளும், தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன.

புதிதாக பள்ளிகள் துவக்கப்பட்டாலும், பள்ளிகளை தரம் உயர்த்தும் போதும் அதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும். அவ்வாறு பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கும் பொழுது அங்கு பணிபுரிவதற்கு தேவையான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பணி இடத்திற்கும் தற்காலிகமாக அரசு அனுமதி அளித்து அந்த ஆண்டிற்கு மட்டும் நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி வழங்கும்.

அதனடிப்படையில் புதிதாக பள்ளிகள் துவங்கப்பட்ட பின்னர் ஆண்டுதோறும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு உரிய சம்பளத்தைப் பெறுவதற்கு பள்ளிகல்வித்துறை அரசிற்கு கடிதம் எழுதி அனுமதி கேட்கும். இது போன்ற அனுமதிகளை அரசு தருவதில் சிறிது காலதாமதம் ஆனாலும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் கால தாமதம் ஏற்படும்.

ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட கூடாது என்பதை கருத்தில் கொண்டு பள்ளி கல்வித்துறை 19,427 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத தற்காலிக பணியிடங்களை நிரந்தரம் செய்து அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாளர்களை நியமனம் செய்வதற்கு அரசாணை 1997 ம் ஆண்டு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 ன் படி மாணவர் ஆசிரியர் எண்ணிக்கை அடிப்படையில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாளர் நியமனம் செய்ய நெறிமுறைகள் வகுக்கப்பட்டு அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில் 15. 6. 2017 அன்று நடைபெற்ற பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையில், பள்ளிக்கல்வித்துறையில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாகவும் , தற்காலிக பணியிடங்களாகவும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் தற்காலிக பணியிடங்களுக்கு பணியிட தொடர் நீட்டிப்பு வழங்குவதில் ஏற்படும் கால தாமதத்தை தவிர்க்கும் வகையில் முதல் கட்டமாக 17 ஆயிரம் தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் பள்ளிக்கல்வித்துறையில் தற்போதுவரை தற்காலிக பணியிடங்களாக உள்ள 19427 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றி பள்ளிக்கல்வித்துறை அரசாணை பிறப்பித்துள்ளது.

இதனால் தற்காலிக பணியிடங்களாக அனுமதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதில் ஏற்பட்டு வந்த காலதாமதம் இனிமேல் தவிர்க்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.