ETV Bharat / sports

நீண்ட இடைவெளிக்குப் பின் பாகிஸ்தான் அணிக்குத் திரும்புகிறாரா முன்னாள் கேப்டன்?

author img

By

Published : Jun 14, 2020, 11:48 PM IST

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் வீரர்களுக்கு, பிசிபி அறிக்கை அனுப்பியுள்ளதாக, அந்த அணியின் முன்னாள் கேப்டன் சப்ராஸ் அகமது தெரிவித்துள்ளார்.

pcb-let-us-take-the-final-call-on-travelling-to-england-sarfaraz-ahmed
pcb-let-us-take-the-final-call-on-travelling-to-england-sarfaraz-ahmed

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட், மூன்று டி20 ஆகியப் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. இதற்காக 29 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான சப்ராஸ் அகமது, இங்கிலாந்து தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம் பெறும் வீரர்களுக்கு பிசிபி சார்பில் அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், 'பிசிபி தலைமை நிர்வாக அதிகாரி வாசிம் கான், தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு வீரரிடமும் தனித்தனியாக கலந்து ஆலோசித்தார். கோவிட் -19 சூழ்நிலையில் இங்கிலாந்து செல்வது குறித்து எங்களுக்கு ஏதேனும் இட ஒதுக்கீடு இருந்தால், அவருக்கு எந்தப் பயமும் இல்லாமல் தெரியப்படுத்த வேண்டும் என்றும் தெளிவுபடுத்தினார்.

மேலும் அவர் எங்களிடம், வெளிப்படையாக வீரர்கள் அனைவரும், இங்கிலாந்து செல்ல முடிவு செய்வதற்கு முன்பு, எங்கள் குடும்பத்தினருடன் பேசியிருக்க வேண்டும் என்பதையும் கூறியுள்ளார்' என்றார்.

இதையடுத்து அவர் மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு திரும்பியது குறித்து கேட்டபோது,'நீங்கள் ஒரு முறை அணியின் வழக்கமான உறுப்பினராக இருந்து, பின்னர் கைவிடப்பட்ட பிறகு மீண்டும் வருவது கடினம். ஆனால், நான் கைவிடப்பட்ட உடனேயே நல்ல விஷயம் என்னவென்றால், உள்நாட்டு கிரிக்கெட்டிலும், பாகிஸ்தான் சூப்பர் லீக்கிலும் விளையாடுவதில் நான் பிஸியாக இருந்துவிட்டேன். இது கிரிக்கெட்டில் என் கவனத்தை வைத்திருக்கவும், என் மனதில் எதிர்மறை எண்ணங்களை நுழைய விடாமல் இருக்கவும் எனக்கு உதவியது' என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் மூன்று வடிவங்களுக்கான போட்டியிலும் கேப்டனாக செயல்பட்ட சப்ராஸ் அகமது, இதுவரை 200க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்று ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட், மூன்று டி20 ஆகியப் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. இதற்காக 29 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான சப்ராஸ் அகமது, இங்கிலாந்து தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம் பெறும் வீரர்களுக்கு பிசிபி சார்பில் அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், 'பிசிபி தலைமை நிர்வாக அதிகாரி வாசிம் கான், தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு வீரரிடமும் தனித்தனியாக கலந்து ஆலோசித்தார். கோவிட் -19 சூழ்நிலையில் இங்கிலாந்து செல்வது குறித்து எங்களுக்கு ஏதேனும் இட ஒதுக்கீடு இருந்தால், அவருக்கு எந்தப் பயமும் இல்லாமல் தெரியப்படுத்த வேண்டும் என்றும் தெளிவுபடுத்தினார்.

மேலும் அவர் எங்களிடம், வெளிப்படையாக வீரர்கள் அனைவரும், இங்கிலாந்து செல்ல முடிவு செய்வதற்கு முன்பு, எங்கள் குடும்பத்தினருடன் பேசியிருக்க வேண்டும் என்பதையும் கூறியுள்ளார்' என்றார்.

இதையடுத்து அவர் மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு திரும்பியது குறித்து கேட்டபோது,'நீங்கள் ஒரு முறை அணியின் வழக்கமான உறுப்பினராக இருந்து, பின்னர் கைவிடப்பட்ட பிறகு மீண்டும் வருவது கடினம். ஆனால், நான் கைவிடப்பட்ட உடனேயே நல்ல விஷயம் என்னவென்றால், உள்நாட்டு கிரிக்கெட்டிலும், பாகிஸ்தான் சூப்பர் லீக்கிலும் விளையாடுவதில் நான் பிஸியாக இருந்துவிட்டேன். இது கிரிக்கெட்டில் என் கவனத்தை வைத்திருக்கவும், என் மனதில் எதிர்மறை எண்ணங்களை நுழைய விடாமல் இருக்கவும் எனக்கு உதவியது' என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் மூன்று வடிவங்களுக்கான போட்டியிலும் கேப்டனாக செயல்பட்ட சப்ராஸ் அகமது, இதுவரை 200க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்று ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.