ETV Bharat / sports

Pak vs SA: பாபர், ரிஸ்வான் அதிரடியில் தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான்!

author img

By

Published : Feb 15, 2021, 10:13 AM IST

தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-1 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றியது.

Pak vs SA: Miller magic not enough as hosts clinch T20I series
Pak vs SA: Miller magic not enough as hosts clinch T20I series

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவந்த தென் ஆப்பிரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி, இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியும் வெற்றிபெற்று சமநிலையில் இருந்தன.

தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி நேற்று (பிப். 14) லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.

இதைத்தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் டேவிட் மில்லர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 45 பந்துகளில் 85 ரன்களைக் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை எடுத்தது.

பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் இணை அதிரடியான தொடக்கத்தை தந்து, அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டது.

இறுதியில் ஹசன் அலி சில பவுண்டரிகளைப் பறக்கவிட்டு அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதனால் 18.4 ஓவர்களிலேயே பாகிஸ்தான் அணி வெற்றி இலக்கை எட்டி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றி அசத்தியது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது நவாஸ் ஆட்டநாயகனாகவும், முகமது ரிஸ்வான் தொடர் நாயகனாகவும் தேர்வுசெய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: 2ஆவது டெஸ்ட்: அஸ்வின் அபாரம்; 134 ரன்களுக்கு சுருண்ட இங்கிலாந்து - மீண்டும் மிரட்டும் ரோஹித்!

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவந்த தென் ஆப்பிரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி, இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியும் வெற்றிபெற்று சமநிலையில் இருந்தன.

தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி நேற்று (பிப். 14) லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.

இதைத்தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் டேவிட் மில்லர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 45 பந்துகளில் 85 ரன்களைக் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை எடுத்தது.

பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் இணை அதிரடியான தொடக்கத்தை தந்து, அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டது.

இறுதியில் ஹசன் அலி சில பவுண்டரிகளைப் பறக்கவிட்டு அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதனால் 18.4 ஓவர்களிலேயே பாகிஸ்தான் அணி வெற்றி இலக்கை எட்டி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றி அசத்தியது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது நவாஸ் ஆட்டநாயகனாகவும், முகமது ரிஸ்வான் தொடர் நாயகனாகவும் தேர்வுசெய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: 2ஆவது டெஸ்ட்: அஸ்வின் அபாரம்; 134 ரன்களுக்கு சுருண்ட இங்கிலாந்து - மீண்டும் மிரட்டும் ரோஹித்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.