ETV Bharat / sports

டக் அவுட்டில் புதிய சாதனைப் படைத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்

author img

By

Published : Aug 26, 2019, 11:43 PM IST

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட் ஆன முதல் வீரர் என்ற மோசமான சாதனையை வெஸ்ட் இண்டீஸ் வீரர் மிகுவேல் கம்மின்ஸ் படைத்துள்ளார்.

Miguel Cummins

டெஸ்ட் கிரிக்கெட் என்றாலே, பெரும்பான்மையான வீரர்கள் பொறுமையாக விளையாடுவார்கள். இதில், ஒரு சில பேட்ஸ்மேன்கள் டிஃபென்ஸில் மட்டுமே அதிக கவனம் செலுத்துவார்கள். அவர்கள் அதிகமான பந்துகளை எடுத்துகொண்டுதான் ரன்களையும் எடுப்பார்கள். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்திய வீரர் ராகுல் டிராவிட்தான். இவரது தடுப்பாட்டத்திற்காகவே டிராவிட்டுக்கு கிரிக்கெட்டின் பெருஞ்சுவர் என்ற பெயர் உண்டு. அதேசமயம், அவர் முதல் ரன் எடுப்பதில் மட்டும் அதிக பந்துகளை எடுத்துக்கொள்ள மாட்டார்.

ஆனால், வெஸ்ட் இண்டீஸ் வீரர் மிகுவேல் கம்மின்ஸ் முதல் ரன் எடுப்பதற்கு டிராவிட்டைவிடவும் அதிக பந்துகளை எடுத்துகொள்கிறார்.

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் முதல் இன்னிங்ஸில் மிகுவேல் கம்மின்ஸ் 10ஆவது வீரராக களமிறங்கினார். இவருடன் 41 ரன்கள் பார்ட்னர்ஷிப் வைத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹோல்டர் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்தப் பார்டனர்ஷிப்பில் கம்மின்ஸ் ஒரு ரன்னும் அடிக்காமல் தொடர்ந்து டிஃபென்ஸ் செய்வதில் குறிகோளாக இருந்தார்.

இறுதியில், அவர் ஜடேஜாவின் பந்துவீச்சில் போல்ட் ஆனதால், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 222 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில், 45 பந்துகளை எதிர்கொண்டு பேட்டை சுழற்றியபோது காற்றுதான் வந்ததே தவிர, அவரிடமிருந்து ஒரு ரன்னும் வராததுதான் பரிதாபத்திலும் பரிதாபம். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட் ஆன முதல் வீரர் என்ற மோசமான சாதனையை அவர் படைத்துள்ளார்.

இதனால், இதற்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் கெய்த் அர்தர்டனின் இச்சாதனை (42 பந்துகள்) முறியடிக்கப்பட்டது. இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய மிகுவேல் கம்மின்ஸ் ஆறுமுறை டக் அவுட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் கிரிக்கெட் என்றாலே, பெரும்பான்மையான வீரர்கள் பொறுமையாக விளையாடுவார்கள். இதில், ஒரு சில பேட்ஸ்மேன்கள் டிஃபென்ஸில் மட்டுமே அதிக கவனம் செலுத்துவார்கள். அவர்கள் அதிகமான பந்துகளை எடுத்துகொண்டுதான் ரன்களையும் எடுப்பார்கள். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்திய வீரர் ராகுல் டிராவிட்தான். இவரது தடுப்பாட்டத்திற்காகவே டிராவிட்டுக்கு கிரிக்கெட்டின் பெருஞ்சுவர் என்ற பெயர் உண்டு. அதேசமயம், அவர் முதல் ரன் எடுப்பதில் மட்டும் அதிக பந்துகளை எடுத்துக்கொள்ள மாட்டார்.

ஆனால், வெஸ்ட் இண்டீஸ் வீரர் மிகுவேல் கம்மின்ஸ் முதல் ரன் எடுப்பதற்கு டிராவிட்டைவிடவும் அதிக பந்துகளை எடுத்துகொள்கிறார்.

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் முதல் இன்னிங்ஸில் மிகுவேல் கம்மின்ஸ் 10ஆவது வீரராக களமிறங்கினார். இவருடன் 41 ரன்கள் பார்ட்னர்ஷிப் வைத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹோல்டர் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்தப் பார்டனர்ஷிப்பில் கம்மின்ஸ் ஒரு ரன்னும் அடிக்காமல் தொடர்ந்து டிஃபென்ஸ் செய்வதில் குறிகோளாக இருந்தார்.

இறுதியில், அவர் ஜடேஜாவின் பந்துவீச்சில் போல்ட் ஆனதால், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 222 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில், 45 பந்துகளை எதிர்கொண்டு பேட்டை சுழற்றியபோது காற்றுதான் வந்ததே தவிர, அவரிடமிருந்து ஒரு ரன்னும் வராததுதான் பரிதாபத்திலும் பரிதாபம். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட் ஆன முதல் வீரர் என்ற மோசமான சாதனையை அவர் படைத்துள்ளார்.

இதனால், இதற்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் கெய்த் அர்தர்டனின் இச்சாதனை (42 பந்துகள்) முறியடிக்கப்பட்டது. இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய மிகுவேல் கம்மின்ஸ் ஆறுமுறை டக் அவுட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:
ஆம்பூர் அருகே விஜயகாந்த் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கண்டுகொண்ட விஜய பிரபாகரன் தன் தந்தை உடல்நிலை குறித்து அவதூறு பரப்பி வருவதாக கண்ணீர் மல்க பேசினார்
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உமராபாத் பகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்த விழாவில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு கேக் வெட்டினார். அதை எடுத்து ஏழை எளிய பெண்களுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான தையல் இயந்திரங்கள், சலவைப் பெட்டிகள் வழங்கினார்.
பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மிக சீரான உடல் நிலை கொண்டுள்ளார்.தன்னுடைய பிறந்த நாளில் தன்னை பார்க்க வந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் அனைவரையும் சந்தித்து வாழ்த்து பெற்றார். அனைவருக்கும் வெற்றி தோல்வி என்பது 5 ஆண்டுகள் தான். 2020ஆம் ஆண்டு தை மாதத்திற்கு பின்னர் கேப்டன் எப்படி மீண்டு வருகிறார் என்பதைப் பாருங்கள் என்று கூறினார். பின்னர் பேசமுடியாமல் மேடையில் தொண்டர்களுக்கு மத்தியில் கண்ணீர்விட்டு அழுத படியே விஜயகாந்த் உடல்நிலை சீராகவும் சிறப்பாகவும் உள்ளது. ஆனால் அனைவரும் அவருடைய உடல்நிலை குறித்து அவதூராக பேசிவருகிறார்கள். அவை அனைத்தையும் தாங்கிக்கொண்டு தன்னுடைய தாயார் பிரேமலதா கட்சியை வழி நடத்தி வருகிறார். எனவே தொண்டர்கள் யாரும் கலங்க வேண்டாம். மக்கள் அவரை தூக்கி எறிந்தாலும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெற்றியாக இருந்தாலும் தோல்வியாக இருந்தாலும்தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் சுவற்றில் எறிந்த பந்தை போன்று மக்கள் சேவை செய்ய மக்களை தேடி வருகிறார்.விரைவில் குணமடைந்து வருவார் என்று கண்ணீர் விட்டு அழுதவாறு தொண்டர்கள் மத்தியில் பேசினார். அவர் அப்போது மேடையில் அமர்ந்திருந்த தேமுதிக அவரை வேண்டாம் என்று சமாதானப்படுத்தினார்.இச்சம்பவம் மேடைக்கு அருகாமையில் அமர்ந்து இருந்த தொண்டர்கள் மத்தியில் ஒரு சோகத்தை ஏற்படுத்தியது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.