ETV Bharat / sports

உடல் சோர்வால்தான் ஓய்வை அறிவித்தேன்: மனம் திறக்கும் ஆமிர்!

author img

By

Published : Mar 17, 2020, 10:46 AM IST

கராச்சி: தொடர்ந்து மூன்று வருடங்கள் சர்வதேச கிரிக்கெட் ஆடிய பின் ஏற்பட்ட உடல் சோர்வு காரணமாகதான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தேன் என பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஆமிர் தெரிவித்துள்ளார்.

fatigue-was-bound-to-happen-amir-on-test-retirement
fatigue-was-bound-to-happen-amir-on-test-retirement

2016ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது. அந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர். சர்வதேச போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக வலம்வந்த ஆமிர், கடந்த வருடம் திடீரென டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்தார்.

இவரது ஓய்வுக்கு பல கிரிக்கெட் வீரர்களால் பல காரணங்கள் கூறப்பட்டது. தற்போது இதுகுறித்து ஆமீர் மனம் திறந்துள்ளார்.

அதில், ''எனது ஓய்வு பற்றி ஒவ்வொருக்கும் ஒரு கருத்து இருக்கும். ஆனால் எனது உடல் பற்றி எனக்கு நன்றாக தெரியும். எனது உடல் அதிகப்படியான பழுவினை சுமப்பது போல் உணர்ந்தேன். அதனை சரியாக என்னால் நிர்வகிக்க முடியவில்லை. கிரிக்கெட் வாழ்க்கையை சிறப்பாக தொடர வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு அது. அந்த முடிவால் எனது உடலிலும், மனதிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதன் முடிவுகள் விரைவில் அனைவருக்கும் தெரியவரும்.

கிரிக்கெட்டிலிருந்து 5 வருடங்கள் தடை செய்யப்பட்டேன். மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டைத் தொடங்கியபோது 3 வருடங்கள் தொடர்ந்து அனைத்து வகையான கிரிக்கெட்டையும் ஆடினேன். அதனால் உடல் சோர்வடைந்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் விரைவிலேயே அதனை உணர்வார்கள். ஓய்வுக்கு பிறகு இப்போது மிகவும் உறுதியாக இருக்கிறேன்.

உலகக் கோப்பை டி20 தொடரைப் பற்றி இதுவரை சிந்திக்கவில்லை. எனது கவனம் முழுக்க பிஎஸ்எல் தொடரில்தான் உள்ளது. அதில் சிறப்பாக செயல்படவேண்டும்'' என்றார்.


இதையும் படிங்க:
தற்கால வாசிம் அக்ரமை மிஸ் செய்தது டெஸ்ட் கிரிக்கெ
ட்

2016ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது. அந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர். சர்வதேச போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக வலம்வந்த ஆமிர், கடந்த வருடம் திடீரென டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்தார்.

இவரது ஓய்வுக்கு பல கிரிக்கெட் வீரர்களால் பல காரணங்கள் கூறப்பட்டது. தற்போது இதுகுறித்து ஆமீர் மனம் திறந்துள்ளார்.

அதில், ''எனது ஓய்வு பற்றி ஒவ்வொருக்கும் ஒரு கருத்து இருக்கும். ஆனால் எனது உடல் பற்றி எனக்கு நன்றாக தெரியும். எனது உடல் அதிகப்படியான பழுவினை சுமப்பது போல் உணர்ந்தேன். அதனை சரியாக என்னால் நிர்வகிக்க முடியவில்லை. கிரிக்கெட் வாழ்க்கையை சிறப்பாக தொடர வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு அது. அந்த முடிவால் எனது உடலிலும், மனதிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதன் முடிவுகள் விரைவில் அனைவருக்கும் தெரியவரும்.

கிரிக்கெட்டிலிருந்து 5 வருடங்கள் தடை செய்யப்பட்டேன். மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டைத் தொடங்கியபோது 3 வருடங்கள் தொடர்ந்து அனைத்து வகையான கிரிக்கெட்டையும் ஆடினேன். அதனால் உடல் சோர்வடைந்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் விரைவிலேயே அதனை உணர்வார்கள். ஓய்வுக்கு பிறகு இப்போது மிகவும் உறுதியாக இருக்கிறேன்.

உலகக் கோப்பை டி20 தொடரைப் பற்றி இதுவரை சிந்திக்கவில்லை. எனது கவனம் முழுக்க பிஎஸ்எல் தொடரில்தான் உள்ளது. அதில் சிறப்பாக செயல்படவேண்டும்'' என்றார்.


இதையும் படிங்க:
தற்கால வாசிம் அக்ரமை மிஸ் செய்தது டெஸ்ட் கிரிக்கெ
ட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.