ETV Bharat / sports

'அப்செட்' என்பதைவிட, வங்கதேசத்தால் அனைவரையும் எளிதாக வெல்ல முடியும்: ரோஹித் சர்மா!

author img

By

Published : Nov 3, 2019, 10:11 AM IST

டெல்லி: உலகின் தலைசிறந்த அணிகளையும் வெல்லக்கூடிய அணியாக வங்கதேச கிரிக்கெட் அணி முன்னேறியுள்ளது என இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

ரோஹித் ஷர்மா

இந்தியா - வங்கதேசம் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று டெல்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இதனிடையே நேற்றைய பயிற்சிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "டி20 போட்டிகளைப் பொறுத்தவரையில் எதிரணிக்கு எதிராக நமது அணியின் யுக்தி, திட்டம் மற்றும் நமது அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களால் என்ன செய்ய முடியும் என்பதை தெளிவாக தெரிந்து வைத்துக் கொள்ளவேண்டும். இதுதான் ஒரு கேப்டனின் முக்கிய வேலை.

ஒரு அணியில் கேப்டன் என்றுமே முக்கிய வீரராக இருக்கக்கூடாது. மற்ற 10 வீரர்கள் தான் முக்கிய வீரர்களாக இருக்கவேண்டும். ஏனென்றால், மற்ற பத்து பேரிடம் இருந்தும் கேப்டன் சிறந்த விளையாட்டை வெளிக்கொண்டு வரவேண்டும். அதைதான் நான் மும்பை இந்தியன்ஸ் அணியில் செய்தேன். இந்திய அணிக்கு தலைமை தாங்கும்போதும் செய்கிறேன்.

ரிஷப் பந்திற்கு இந்தத் தொடர் முக்கிய தொடராக இருக்கும். அணியில் பல இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமான வாய்ப்புகள் கிடைக்காது. கிடைக்கும் வாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

ரோஹித் ஷர்மா
ரோஹித் சர்மா

வங்கதேச அணியைப் பொறுத்தவரையில் தமீம் இக்பால், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் இல்லாமல் இருக்கிறது. ஆனாலும் வங்கதேசம் சிறந்த அணியே. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவிற்கு, வங்கதேச அணி பல்வேறு கடினமான சூழல்களை ஏற்படுத்தியுள்ளது. அவர்களால் உலகின் அனைத்து அணிகளையும் 'அப்செட்' செய்யமுடியும் என்பதை கடந்து, எளிதாக வெல்ல முடியும் என்றே கூறுவேன். ஏனென்றால் வங்கதேசம் கிரிக்கெட்டில் முதிர்ச்சியடைந்த அணியாக வலம்வருகிறது" என்றார்.

இதையும் படிங்க: வயிறுவலி காரணமாக தொடரிலிருந்து விலகினார் நடால் - ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்தியா - வங்கதேசம் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று டெல்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இதனிடையே நேற்றைய பயிற்சிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "டி20 போட்டிகளைப் பொறுத்தவரையில் எதிரணிக்கு எதிராக நமது அணியின் யுக்தி, திட்டம் மற்றும் நமது அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களால் என்ன செய்ய முடியும் என்பதை தெளிவாக தெரிந்து வைத்துக் கொள்ளவேண்டும். இதுதான் ஒரு கேப்டனின் முக்கிய வேலை.

ஒரு அணியில் கேப்டன் என்றுமே முக்கிய வீரராக இருக்கக்கூடாது. மற்ற 10 வீரர்கள் தான் முக்கிய வீரர்களாக இருக்கவேண்டும். ஏனென்றால், மற்ற பத்து பேரிடம் இருந்தும் கேப்டன் சிறந்த விளையாட்டை வெளிக்கொண்டு வரவேண்டும். அதைதான் நான் மும்பை இந்தியன்ஸ் அணியில் செய்தேன். இந்திய அணிக்கு தலைமை தாங்கும்போதும் செய்கிறேன்.

ரிஷப் பந்திற்கு இந்தத் தொடர் முக்கிய தொடராக இருக்கும். அணியில் பல இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமான வாய்ப்புகள் கிடைக்காது. கிடைக்கும் வாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

ரோஹித் ஷர்மா
ரோஹித் சர்மா

வங்கதேச அணியைப் பொறுத்தவரையில் தமீம் இக்பால், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் இல்லாமல் இருக்கிறது. ஆனாலும் வங்கதேசம் சிறந்த அணியே. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவிற்கு, வங்கதேச அணி பல்வேறு கடினமான சூழல்களை ஏற்படுத்தியுள்ளது. அவர்களால் உலகின் அனைத்து அணிகளையும் 'அப்செட்' செய்யமுடியும் என்பதை கடந்து, எளிதாக வெல்ல முடியும் என்றே கூறுவேன். ஏனென்றால் வங்கதேசம் கிரிக்கெட்டில் முதிர்ச்சியடைந்த அணியாக வலம்வருகிறது" என்றார்.

இதையும் படிங்க: வயிறுவலி காரணமாக தொடரிலிருந்து விலகினார் நடால் - ரசிகர்கள் அதிர்ச்சி!

Intro:Body:

Rohit Sharma all set to surpass MS Dhoni in Delhi T20I


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.