ETV Bharat / sports

டி20 போட்டியில் 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது ஆஸ்திரேலியா..!

IND W VS AUS W: இந்திய மகளிர் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

author img

By PTI

Published : Jan 10, 2024, 12:15 PM IST

IND W VS AUS W
டி20 போட்டியில் 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது ஆஸ்திரேலியா..!

மும்பை: ஆஸ்திரேலிய மகளிர் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இவ்விரு அணிகளுக்கும் எதிரான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கும் எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி கடந்த ஜன.7ஆம் தேதி நடைபெற்றது. அதில், 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணி இந்தியாவை வீழ்த்தி, 1-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், நேற்று (ஜன.9) மூன்றாவது போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் இந்திய மகளிர் அணியின் தொடக்க வீரர்களாக ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா ஜோடி களமிறங்கியது. முதல் ஓவரில் ஷஃபாலி வர்மா, தனது முதல் பவுண்டரியை பதிவு செய்தார். முதல் ஓவர் முடிவில், இந்திய மகளிர் அணி 7-0 என்ற கணக்கில் இருந்தது.

அதன்பின், இருவரும் சிறப்பாக விளையாடிய நேரத்தில், ஸ்மிருதி மந்தனா 3வது ஓவரில் தனது முதல் பவுண்டரியை பதிவு செய்தார். ஷஃபாலி வர்மா 4வது ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசி, இந்திய அணிக்கு ரன்களை குவித்தார். 4 ஓவர் முடிவில் இந்திய அணி 32 ரன்கள் எடுத்திருந்தது.

களத்தில் சிறப்பாக விளையாடிய ஷஃபாலி வர்மா, ஆஸ்திரேலிய அணி வீரர் ஹீலியிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 5 ஓவர் முடிவில் இந்திய அணி 39-1 என்ற கணக்கில் விளையாடிக் கொண்டிருந்தது. அதன்பின் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள், சொற்ப ரன்கள் எடுத்து தங்களது ஆட்டத்தை இழந்தனர். பின் ரிச்சா கோஷ் - தீப்தி சர்மா ஜோடி களமிறங்கி, சிறப்பாக விளையாடி தங்களது ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 13வது ஓவரில் ரிச்சா கோஷ் தனது முதல் சிக்ஸை பதிவு செய்தார்.

இந்திய அணி 13 ஓவர் முடிவில், 91-4 என்ற கணக்கில் இருந்தது. சிறப்பாக விளையாடிய தீப்தி சர்மா 18 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து 14.4வது ஓவரில் ஆட்டமிழந்தார். பின்னர், சிறப்பாக விளையாடி அணிக்கு ரன்களை குவித்த ரிச்சா கோஷ் 19.1வது ஓவரில் கார்ட்னர் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் போல்ட் ஆனார். (ரிச்சா கோஷ் 28 பந்துகளில், 1 சிக்ஸ், 2 பவுண்டரிகள் வீதம் 29 ரன்கள் எடுத்தார்) இறுதியாக 20 ஓவர் முடிவில், இந்திய அணி 147-6 என்ற கணக்கில் இருந்தது.

இதில், ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர் சதர்லேண்ட், வேர்ஹாம் 2 விக்கெட்டுகளையும், கார்ட்னர் மற்றும் மேகன் ஷட் தலா 1 விக்கெட்டையும் எடுத்தனர். இந்நிலையில் 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், இரண்டாவதாக ஆஸ்திரேலிய மகளிர் அணி களம் இறங்கியது.

இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக அலீசா ஹீலி - பெத் மூனி ஜோடி களமிறங்கியது. பெத் மூனி தனது முதல் பந்தில், இன்னிங்ஸின் முதல் பவுண்டரியை பதிவு செய்தார். சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி கேப்டன் 4வது ஓவரில் அடுத்தடுத்து 3 பவுண்டரிகளை விளாசினார். 4 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 32-0 என்ற கணக்கில் இருந்தது.

அதன்பின், களத்தில் இருந்த ஹீலி 9வது ஓவரில் இந்தியாவிற்கு எதிரான T20 5வது போட்டியில் தனது அரை சதத்தைப் பதிவு செய்தார். ஆஸ்திரேலிய அணி, 9 ஓவர் முடிவில் 80-0 என்ற கணக்கில் இருந்தது. இந்நிலையில் தீப்தி சர்மா வீசிய பந்தில் 9.5வது ஓவரில் LBW ஆனார், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஹீலி.

தொடர்ந்து களத்தில் மூனி- தஹ்லியா மெக்ராத் ஜோடி ஆட்டமிழக்காமல் விளையாடிக் கொண்டிருந்தனர். 15 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 117-1 என்ற கணக்கில் இருந்தது. இதனிடையே, தஹ்லியா மெக்ராத் 15 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பிச் சென்றார்.

தொடர்ந்து களத்தில் நின்ற மூனியுடன், ஃபோப் லிட்ச்ஃபீல்ட் களம் கண்டார். இருவரும் சிறப்பாக விளையாடி, தங்களது அணிக்கு ரன்களைக் குவித்தனர். இறுதியாக, 19வது ஓவரில் இரு பவுண்டரிகளை விளாசி தனது அரை சதத்தைப் பதிவு செய்து, அணிக்கு வெற்றியைத் தேடி தந்தார், பெத் மூனி.

இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி ஆஸ்திரேலிய அணி த்ரில் வெற்றி பெற்றது. இதில், இந்திய அணியின் பந்து வீச்சாளர்களான பூஜா வஸ்த்ரகர் 2 விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அர்ஜூனா விருதை பெற்ற தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி!

மும்பை: ஆஸ்திரேலிய மகளிர் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இவ்விரு அணிகளுக்கும் எதிரான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கும் எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி கடந்த ஜன.7ஆம் தேதி நடைபெற்றது. அதில், 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணி இந்தியாவை வீழ்த்தி, 1-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், நேற்று (ஜன.9) மூன்றாவது போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் இந்திய மகளிர் அணியின் தொடக்க வீரர்களாக ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா ஜோடி களமிறங்கியது. முதல் ஓவரில் ஷஃபாலி வர்மா, தனது முதல் பவுண்டரியை பதிவு செய்தார். முதல் ஓவர் முடிவில், இந்திய மகளிர் அணி 7-0 என்ற கணக்கில் இருந்தது.

அதன்பின், இருவரும் சிறப்பாக விளையாடிய நேரத்தில், ஸ்மிருதி மந்தனா 3வது ஓவரில் தனது முதல் பவுண்டரியை பதிவு செய்தார். ஷஃபாலி வர்மா 4வது ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசி, இந்திய அணிக்கு ரன்களை குவித்தார். 4 ஓவர் முடிவில் இந்திய அணி 32 ரன்கள் எடுத்திருந்தது.

களத்தில் சிறப்பாக விளையாடிய ஷஃபாலி வர்மா, ஆஸ்திரேலிய அணி வீரர் ஹீலியிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 5 ஓவர் முடிவில் இந்திய அணி 39-1 என்ற கணக்கில் விளையாடிக் கொண்டிருந்தது. அதன்பின் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள், சொற்ப ரன்கள் எடுத்து தங்களது ஆட்டத்தை இழந்தனர். பின் ரிச்சா கோஷ் - தீப்தி சர்மா ஜோடி களமிறங்கி, சிறப்பாக விளையாடி தங்களது ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 13வது ஓவரில் ரிச்சா கோஷ் தனது முதல் சிக்ஸை பதிவு செய்தார்.

இந்திய அணி 13 ஓவர் முடிவில், 91-4 என்ற கணக்கில் இருந்தது. சிறப்பாக விளையாடிய தீப்தி சர்மா 18 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து 14.4வது ஓவரில் ஆட்டமிழந்தார். பின்னர், சிறப்பாக விளையாடி அணிக்கு ரன்களை குவித்த ரிச்சா கோஷ் 19.1வது ஓவரில் கார்ட்னர் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் போல்ட் ஆனார். (ரிச்சா கோஷ் 28 பந்துகளில், 1 சிக்ஸ், 2 பவுண்டரிகள் வீதம் 29 ரன்கள் எடுத்தார்) இறுதியாக 20 ஓவர் முடிவில், இந்திய அணி 147-6 என்ற கணக்கில் இருந்தது.

இதில், ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர் சதர்லேண்ட், வேர்ஹாம் 2 விக்கெட்டுகளையும், கார்ட்னர் மற்றும் மேகன் ஷட் தலா 1 விக்கெட்டையும் எடுத்தனர். இந்நிலையில் 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், இரண்டாவதாக ஆஸ்திரேலிய மகளிர் அணி களம் இறங்கியது.

இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக அலீசா ஹீலி - பெத் மூனி ஜோடி களமிறங்கியது. பெத் மூனி தனது முதல் பந்தில், இன்னிங்ஸின் முதல் பவுண்டரியை பதிவு செய்தார். சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி கேப்டன் 4வது ஓவரில் அடுத்தடுத்து 3 பவுண்டரிகளை விளாசினார். 4 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 32-0 என்ற கணக்கில் இருந்தது.

அதன்பின், களத்தில் இருந்த ஹீலி 9வது ஓவரில் இந்தியாவிற்கு எதிரான T20 5வது போட்டியில் தனது அரை சதத்தைப் பதிவு செய்தார். ஆஸ்திரேலிய அணி, 9 ஓவர் முடிவில் 80-0 என்ற கணக்கில் இருந்தது. இந்நிலையில் தீப்தி சர்மா வீசிய பந்தில் 9.5வது ஓவரில் LBW ஆனார், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஹீலி.

தொடர்ந்து களத்தில் மூனி- தஹ்லியா மெக்ராத் ஜோடி ஆட்டமிழக்காமல் விளையாடிக் கொண்டிருந்தனர். 15 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 117-1 என்ற கணக்கில் இருந்தது. இதனிடையே, தஹ்லியா மெக்ராத் 15 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பிச் சென்றார்.

தொடர்ந்து களத்தில் நின்ற மூனியுடன், ஃபோப் லிட்ச்ஃபீல்ட் களம் கண்டார். இருவரும் சிறப்பாக விளையாடி, தங்களது அணிக்கு ரன்களைக் குவித்தனர். இறுதியாக, 19வது ஓவரில் இரு பவுண்டரிகளை விளாசி தனது அரை சதத்தைப் பதிவு செய்து, அணிக்கு வெற்றியைத் தேடி தந்தார், பெத் மூனி.

இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி ஆஸ்திரேலிய அணி த்ரில் வெற்றி பெற்றது. இதில், இந்திய அணியின் பந்து வீச்சாளர்களான பூஜா வஸ்த்ரகர் 2 விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அர்ஜூனா விருதை பெற்ற தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.