ETV Bharat / sports

உலககோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டம் இன்று தொடக்கம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 29, 2023, 9:13 AM IST

2023 Cricket World Cup: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி போட்டிகள் இன்று தொடங்கும் நிலையில், ஹைதராபாத்தில் நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன.

Etv Bharat
Etv Bharat

ஹைதராபாத்: 13வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 5-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடபெறுகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக் கோப்பை தொடர் ரவுண்ட் ராபின் முறையில் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் ஒரு முறை மோத வேண்டும். அதில் நான்கு அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில் உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் பயிற்சி போட்டிகள் இன்று தொடங்கப்படுகிறது. ஒவ்வொரு அணிகளும் 2 பயிற்சி போட்டிகள் விளையாடும் முறையில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கும் முதல் பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி நியூஸிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி ஹைதராபாத்தில் நடக்கிறது.

கணேஷ் விசர்ஜனம் மற்றும் மிலாடி நபி ஏற்பாடு காரணமாக இன்றைய போட்டிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க இயலாது என ஹைதராபாத் காவல்துறை கூறியுள்ளனர். இதனால் இன்றைய போட்டிக்கு ரசிகர்களுக்கு அனுமதியில்லை. இந்நிலையில் ஹைதராபாத்தில் நடைபெறும் இரண்டாவது பயிற்சி போட்டி மற்றும் அக்டோபர் 6, 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் உலகக் கோப்பை லீக் போட்டிகளுக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவர் என ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று மொத்தம் மூன்று பயிற்சி போட்டிகள் நடைபெறுகிறது. 2வது போட்டியில் தென் ஆப்ரிக்க அணி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. 3வது போட்டியில் வங்கதேச அணி இலங்கை அணியை எதிர்கொள்கிறது. இந்திய அணி நாளை தனது முதல் பயிற்சி போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

3ஆம் தேதி நடைபெறும் 2வது பயிற்சி போட்டியில் நெதர்லாந்து அணியுடன் விளையாடுகிறது. உலகக் கோப்பை பயிற்சி போட்டி முக்கியமானதாக கருதப்படுகிறது. இதில் சிறிய அணிகளிடம் பலம் வாய்ந்த அணிகள் தோல்வி அடையும் பட்சத்தில் அது லீக் போட்டியில் அணியின் உத்வேகத்தை பாதிக்கும். இதனால் அனைத்து அணிகளும் உலகக் கோப்பை பயிற்சி போட்டியை சீரியஸான மனநிலையில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஐசிசி உலகக் போப்பை இந்திய அணியில் அதிரடி மாற்றம்.. அக்சருக்கு பதிலாக களமிறங்கும் அஸ்வின்!

ஹைதராபாத்: 13வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 5-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடபெறுகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக் கோப்பை தொடர் ரவுண்ட் ராபின் முறையில் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் ஒரு முறை மோத வேண்டும். அதில் நான்கு அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில் உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் பயிற்சி போட்டிகள் இன்று தொடங்கப்படுகிறது. ஒவ்வொரு அணிகளும் 2 பயிற்சி போட்டிகள் விளையாடும் முறையில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கும் முதல் பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி நியூஸிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி ஹைதராபாத்தில் நடக்கிறது.

கணேஷ் விசர்ஜனம் மற்றும் மிலாடி நபி ஏற்பாடு காரணமாக இன்றைய போட்டிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க இயலாது என ஹைதராபாத் காவல்துறை கூறியுள்ளனர். இதனால் இன்றைய போட்டிக்கு ரசிகர்களுக்கு அனுமதியில்லை. இந்நிலையில் ஹைதராபாத்தில் நடைபெறும் இரண்டாவது பயிற்சி போட்டி மற்றும் அக்டோபர் 6, 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் உலகக் கோப்பை லீக் போட்டிகளுக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவர் என ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று மொத்தம் மூன்று பயிற்சி போட்டிகள் நடைபெறுகிறது. 2வது போட்டியில் தென் ஆப்ரிக்க அணி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. 3வது போட்டியில் வங்கதேச அணி இலங்கை அணியை எதிர்கொள்கிறது. இந்திய அணி நாளை தனது முதல் பயிற்சி போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

3ஆம் தேதி நடைபெறும் 2வது பயிற்சி போட்டியில் நெதர்லாந்து அணியுடன் விளையாடுகிறது. உலகக் கோப்பை பயிற்சி போட்டி முக்கியமானதாக கருதப்படுகிறது. இதில் சிறிய அணிகளிடம் பலம் வாய்ந்த அணிகள் தோல்வி அடையும் பட்சத்தில் அது லீக் போட்டியில் அணியின் உத்வேகத்தை பாதிக்கும். இதனால் அனைத்து அணிகளும் உலகக் கோப்பை பயிற்சி போட்டியை சீரியஸான மனநிலையில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஐசிசி உலகக் போப்பை இந்திய அணியில் அதிரடி மாற்றம்.. அக்சருக்கு பதிலாக களமிறங்கும் அஸ்வின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.