ETV Bharat / sports

#KoreaOpen: அசத்திய காஷ்யப்... காலிறுதிக்கு முன்னேற்றம்!

author img

By

Published : Sep 26, 2019, 1:40 PM IST

கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய பேட்மிண்டன் வீரர் பாருப்பள்ளி காஷ்யப் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

#KoreaOpen

கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடர் கொரிய நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பாருப்பள்ளி காஷ்யப் மலேசியாவின் லீவ் டேரனை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பான இந்தப் போட்டியில் இந்தியாவின் காஷ்யப் 21-17 என்ற புள்ளிகள் அடிப்படையில் கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேரன் இரண்டாவது செட் கணக்கை 21-11 என்ற புள்ளிகள் அடிப்படையில் கைப்பற்ற ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

  • Badminton: Parupalli Kashyap, India's lone survivor at 2019 Korean Open Badminton stormed into quarter finals winning his 2nd round match in three sets 21-17, 11-21, 21-12 against Liew D of Malaysia pic.twitter.com/mqzwbYzf93

    — Doordarshan Sports (@ddsportschannel) September 26, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
அதன்பின் அதிரடி ஆட்டத்தில் களமிறங்கிய காஷ்யப் மூன்றாவது செட் கணக்கை 21-12 என்ற புள்ளிகள் அடிப்படையில் டேரனை வீழ்த்தினார். இதன்மூலம் இந்தியாவின் பாருப்பள்ளி காஷ்யப் கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய ஆட்டத்தை 21-17, 11-21, 21-12 என்ற செட் கணக்கில் மலேசியாவின் லீவ் டேரனை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இதையும் படிங்க: #KoreaOpen: முதல் சுற்றிலேயே வெளியேறிய சிந்து , சாய்னா - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடர் கொரிய நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பாருப்பள்ளி காஷ்யப் மலேசியாவின் லீவ் டேரனை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பான இந்தப் போட்டியில் இந்தியாவின் காஷ்யப் 21-17 என்ற புள்ளிகள் அடிப்படையில் கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேரன் இரண்டாவது செட் கணக்கை 21-11 என்ற புள்ளிகள் அடிப்படையில் கைப்பற்ற ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

  • Badminton: Parupalli Kashyap, India's lone survivor at 2019 Korean Open Badminton stormed into quarter finals winning his 2nd round match in three sets 21-17, 11-21, 21-12 against Liew D of Malaysia pic.twitter.com/mqzwbYzf93

    — Doordarshan Sports (@ddsportschannel) September 26, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
அதன்பின் அதிரடி ஆட்டத்தில் களமிறங்கிய காஷ்யப் மூன்றாவது செட் கணக்கை 21-12 என்ற புள்ளிகள் அடிப்படையில் டேரனை வீழ்த்தினார். இதன்மூலம் இந்தியாவின் பாருப்பள்ளி காஷ்யப் கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய ஆட்டத்தை 21-17, 11-21, 21-12 என்ற செட் கணக்கில் மலேசியாவின் லீவ் டேரனை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இதையும் படிங்க: #KoreaOpen: முதல் சுற்றிலேயே வெளியேறிய சிந்து , சாய்னா - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.