2019ஆம் ஆண்டுக்கான சீன ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாம் சுற்றில் இந்தியாவின் பிவி சிந்துவை எதிர்த்து தாய்லாந்தின் சோசுவாங் ஆடினார்.
ஆட்டத்தின் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய சிந்து முதல் செட்டை 12-21 எனக் கைப்பற்ரியதால், இரண்டாம் செட் ஆட்டத்தையும் அவரே கைப்பற்றுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் விஸ்வரூபம் எடுத்த தாய்லாந்து வீராங்கனை சோசுவாங், இரண்டாவது செட்டை 21-13 என்ற கணக்கில் வென்று பதிலடி கொடுத்தார்.
இதனால் மூன்றாவது செட்டை கைப்பற்றி யார் வெற்றியாளராக வருவார் என ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. இதையடுத்து நடைபெற்ற மூன்றாவது சுற்று ஆட்டத்தில் இருவரும் சரிக்கு சமமாக போட்டியிட்டனர்.
-
P.V Sindhu bows out of #ChinaOpen losing to Pornpawee Chochuwong 21-12, 13-21, 19-21 in second round#ChinaOpenSuper1000 pic.twitter.com/2S94m2oCcq
— Doordarshan Sports (@ddsportschannel) September 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">P.V Sindhu bows out of #ChinaOpen losing to Pornpawee Chochuwong 21-12, 13-21, 19-21 in second round#ChinaOpenSuper1000 pic.twitter.com/2S94m2oCcq
— Doordarshan Sports (@ddsportschannel) September 19, 2019P.V Sindhu bows out of #ChinaOpen losing to Pornpawee Chochuwong 21-12, 13-21, 19-21 in second round#ChinaOpenSuper1000 pic.twitter.com/2S94m2oCcq
— Doordarshan Sports (@ddsportschannel) September 19, 2019
ஒரு கட்டத்தில் இருவரும் அதிரடியாக ஆட, இறுதியாக தாய்லாந்து வீராங்கனை சோசுவாங் 21-19 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
உலக சாம்பியனான சில நாட்களிலேயே இந்திய வீராங்கனை பி.வி. சிந்து சீன ஓபன் பேட்மிண்டன் தொடரிலிருந்து வெளியெறியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 63 ஆண்டுகால வரலாற்றை மாற்றி எழுதிய தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்!