ETV Bharat / sitara

கணவரிடமிருந்து கொலை மிரட்டல்: சீரியல் நடிகை போலீஸில் புகார்

author img

By

Published : Dec 3, 2019, 3:01 PM IST

தனது கணவர் அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறி சீரியல் நடிகை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

tamil-serial-actress-jayashree
tamil-serial-actress-jayashree

பிரபல தனியார் தொலைக்காட்சியில் சீரியல் நடிகையாக இருப்பவர் ஜெயஸ்ரீ(32). சென்னை அடையாறு எல்பி ரோட்டில் உள்ள தி எம்ப்ரஸ் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இதேபோல், டிவி சீரியலில் வில்லன் கேரக்டரில் 12க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்து வருபவர் ஈஸ்வர்(34). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

tamil-serial-actress-jayashree
ஈஸ்வர்-ஜெயஸ்ரீ தம்பதி

இவ்விருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில், ஜெயஸ்ரீ சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது சொத்து ஆவணங்களை திருடி தனக்கு தெரியாமல் அவற்றை வைத்து வெளியில் லட்சக்கணக்கில் வட்டிக்கு கடன் வாங்கியதாகவும், அதுகுறித்து தான் கேட்டபோது மேலும் பணம் கேட்டு அடித்து துன்புறுத்தியதாகவும் புகாரில் ஜெயஸ்ரீ கூறியுள்ளார்.

மேலும், ஈஸ்வருக்கு பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவருடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், அவரை ஈஸ்வர் திருமணம் செய்ய முயல்வதாகவும் அதற்கு ஈஸ்வரின் தாய் சந்திராவும் உடந்தையாக இருப்பதாகவும் ஜெயஸ்ரீ அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அடையாறு மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதில் ஈஸ்வர் ஜெயஸ்ரீயிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததும், மேலும் அவரை அடிக்கடி அடித்து உதைப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 498 ஏ (வரதட்சணைக் கொடுமை), 420 (நம்பிக்கை மோசடி), 506 (1) உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் ஈஸ்வரை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

tamil-serial-actress-jayashree
ஈஸ்வர்-ஜெயஸ்ரீ தம்பதி

இந்நிலையில், இன்று நடிகை ஜெயஸ்ரீ சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயஸ்ரீ, 'நான் அளித்த புகாரின் பேரில், எனது கணவர் ஈஸ்வர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர். எனக்கு அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் வருகிறது. எனது மகளுக்கும் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுக்கப்பட்டது.

நடிகை ஒருவருடன் ஈஸ்வர் தகாத உறவு வைத்திருந்தார். திருமணத்திற்குப் பிறகு ஈஸ்வர் குடிப்பழக்கம், கஞ்சா போன்ற போதைப் பழக்கம் மற்றும் சூதாட்டம் ஆகியவற்றில் மூழ்கிவிட்டார்.

சீரியல் நடிகை ஜெயஸ்ரீ போலீஸில் புகார்

மேலும் தன்னை மிரட்டி பணம் மற்றும் நகையை பறித்து சூதாட்டத்தில் ஈஸ்வர் அவற்றை இழந்திருக்கிறார். என்னிடம் இருந்து பறித்த பணத்தை பெற்று தருமாறு காவல் ஆணையரிடம் புகார் அளித்திருக்கிறேன்' என்று கூறினார்.

இதையும் படிங்க...

முதலமைச்சருக்கு அச்சுறுத்தல்; எச்சரித்த உளவுத்துறை!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் சீரியல் நடிகையாக இருப்பவர் ஜெயஸ்ரீ(32). சென்னை அடையாறு எல்பி ரோட்டில் உள்ள தி எம்ப்ரஸ் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இதேபோல், டிவி சீரியலில் வில்லன் கேரக்டரில் 12க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்து வருபவர் ஈஸ்வர்(34). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

tamil-serial-actress-jayashree
ஈஸ்வர்-ஜெயஸ்ரீ தம்பதி

இவ்விருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில், ஜெயஸ்ரீ சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது சொத்து ஆவணங்களை திருடி தனக்கு தெரியாமல் அவற்றை வைத்து வெளியில் லட்சக்கணக்கில் வட்டிக்கு கடன் வாங்கியதாகவும், அதுகுறித்து தான் கேட்டபோது மேலும் பணம் கேட்டு அடித்து துன்புறுத்தியதாகவும் புகாரில் ஜெயஸ்ரீ கூறியுள்ளார்.

மேலும், ஈஸ்வருக்கு பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவருடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், அவரை ஈஸ்வர் திருமணம் செய்ய முயல்வதாகவும் அதற்கு ஈஸ்வரின் தாய் சந்திராவும் உடந்தையாக இருப்பதாகவும் ஜெயஸ்ரீ அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அடையாறு மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதில் ஈஸ்வர் ஜெயஸ்ரீயிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததும், மேலும் அவரை அடிக்கடி அடித்து உதைப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 498 ஏ (வரதட்சணைக் கொடுமை), 420 (நம்பிக்கை மோசடி), 506 (1) உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் ஈஸ்வரை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

tamil-serial-actress-jayashree
ஈஸ்வர்-ஜெயஸ்ரீ தம்பதி

இந்நிலையில், இன்று நடிகை ஜெயஸ்ரீ சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயஸ்ரீ, 'நான் அளித்த புகாரின் பேரில், எனது கணவர் ஈஸ்வர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர். எனக்கு அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் வருகிறது. எனது மகளுக்கும் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுக்கப்பட்டது.

நடிகை ஒருவருடன் ஈஸ்வர் தகாத உறவு வைத்திருந்தார். திருமணத்திற்குப் பிறகு ஈஸ்வர் குடிப்பழக்கம், கஞ்சா போன்ற போதைப் பழக்கம் மற்றும் சூதாட்டம் ஆகியவற்றில் மூழ்கிவிட்டார்.

சீரியல் நடிகை ஜெயஸ்ரீ போலீஸில் புகார்

மேலும் தன்னை மிரட்டி பணம் மற்றும் நகையை பறித்து சூதாட்டத்தில் ஈஸ்வர் அவற்றை இழந்திருக்கிறார். என்னிடம் இருந்து பறித்த பணத்தை பெற்று தருமாறு காவல் ஆணையரிடம் புகார் அளித்திருக்கிறேன்' என்று கூறினார்.

இதையும் படிங்க...

முதலமைச்சருக்கு அச்சுறுத்தல்; எச்சரித்த உளவுத்துறை!

Intro:Body:தனது கணவர் அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுவதாக கூறி சீரியல் நடிகை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரப்பரப்பு புகார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் சீரியல் நடிகையாக இருப்பவர் ஜெயஸ்ரீ (வயது 32). சென்னை அடையாறு எல்பி ரோட்டில் உள்ள தி எம்ப்ரஸ் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். டிவி சீரியலில் வில்லன் கேரக்டரில் 12க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்து வருபவர் ஈஸ்வர் (வயது 34). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.மேலும் இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் ஜெயஸ்ரீ சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். தனது சொத்து ஆவணங்களை திருடி தனக்கு தெரியாமல் அவற்றை வைத்து வெளியில் லட்சக்கணக்கில் வட்டிக்கு கடன் வாங்கியதாகவும், அதுகுறித்து தான் கேட்ட போது மேலும் பணம் கேட்டு அடித்து துன்புறுத்தியதாகவும் அந்த புகாரில் ஜெயஸ்ரீ கூறியுள்ளார். மேலும் ஈஸ்வருக்கு பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவருடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், அவரை ஈஸ்வர் திருமணம் செய்ய முயல்வதாகவும் அதற்கு ஈஸ்வரின் தாய் சந்திராவும் உடந்தையாக இருப்பதாக ஜெயஸ்ரீ அளித்த புகாரில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அடையாறு மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஈஸ்வர் ஜெயஸ்ரீயிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததும், மேலும் அவரை அடிக்கடி அடித்து உதைப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 498 ஏ (வரதட்சணைக் கொடுமை), 420 (நம்பிக்கை மோசடி), 506 (1) உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் ஈஸ்வரை ஞாயிறு அன்று போலிசார் புழல் சிறையில் அடைத்தனர்..

இந்நிலையில் இன்று நடிகை ஜெயஸ்ரீ சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பரப்பரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயஸ்ரீ

நேற்று முன்தினம் நடிகை ஜெயஸ்ரீ தனது கணவர் ஈஸ்வர் கொடுமைப்படுத்துவதாக அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து நாடக நடிகரான ஈஸ்வரை கைது செய்தனர்.இதனை தொடர்ந்து தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக நடிகை ஜெயஸ்ரீ கூறினார்.மேலும் தனது மகளுக்கும் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக அவர் கூறினார்.பின்னர் நடிகை மகாலட்சுமியுடம் கள்ள தொடர்பில் இருந்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் திருமணத்திற்குப் பிறகு ஈஸ்வர் குடிப்பழக்கம்,கஞ்சா போன்ற போதைப் பழக்கம் மற்றும் சூதாட்டம் ஆகியவைகளில் அதிகமாக ஈடுபட்டதாக நடிகை ஜெயஸ்ரீ குற்றச்சாட்டினார்.

மேலும் தொடர்ந்து குடிபோதையில் தன்னை தாக்கி கொடுமைப்படுத்தியதாகவும் கூறினார்.மேலும் குடிப்போதையில்
தனது குழந்தையிடம் பாலியல் ரீதியான தொந்தரவு அளித்ததாகவும் அவர் கூறினார்.

மேலும் தன்னை மிரட்டி பணம் மற்றும் நகையை பறித்து சூதாட்டத்தில் ஈஸ்வர் இழந்ததாகவும்,என்னிடம் இருந்து பறித்த பணத்தை பெற்று தருமாறு காவல் ஆணையரிடம் புகார் அளித்ததாக அவர் கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.