இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகிவரும் திரைப்படம் ‘மாநாடு’. சிம்பு ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தின் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதனையடுத்து இயக்குநர் வெங்கட் பிரபு தனது 10ஆவது திரைப்படத்தின் அப்டேட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ராக்போர்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு கரோனா ஊரடங்கிற்கு முன்னதே தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. விரைவில் படத்தின் கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.