ETV Bharat / sitara

அனுஷ்காவில் 48ஆவது படம் என்ன தெரியுமா?

author img

By

Published : Nov 7, 2021, 12:01 PM IST

Updated : Nov 8, 2021, 11:27 AM IST

அனுஷ்காவின் பிறந்தநாளான இன்று அவரது 48ஆவது படத்தை அறிவித்தது யூவி கிரியேஷன்ஸ். இப்படத்தை மகேஷ் பாபு இயக்குகிறார்.

#Anushka48:
#Anushka48:

நடிகை அனுஷ்கா ஷெட்டியின் பிறந்தநாளான இன்று (நவ.07), யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தனது மூன்றாவது திரைப்படத்தை அறிவித்தது.

இந்த அறிவிப்பை அந்நிறுவனம் காணொலி வாயிலாக அறிவித்தது. அதில், ”2013ஆம் ஆண்டு மிர்ச்சி திரைப்படத்தில் “அழகு ராணி”-யாக நமது உள்ளங்களைக் கொள்ளை கொண்டார் அனுஷ்கா. 2018-ல் பாகமதியில் “அச்சமில்லா அரசி”-யாக நம்மை ஆட்கொண்டார்.

அனுஷ்காவில் 48ஆவது படம்

தற்போது, “அரசி” அனுஷ்கா ஷெட்டியும் யூவி கிரியேஷன்ஸும் மூன்றாவது முறையாக இணைகின்றனர். அனுஷ்காவின் 48ஆவது படமான இந்த நவீனக் கால பொழுதுபோக்கு சித்திரத்தை மகேஷ் பாபு பி எழுதி இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், ஸ்வீட்டி ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுஷ்கா
அனுஷ்கா

இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மாடர்ன் மங்கையாக புதிய தோற்றத்தில் இப்படத்தில் அனுஷ்கா தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், மகேஷ் பாபு பி இயக்கத்தில் உருவாகவுள்ள இத்திரைப்படத்தின் தலைப்பு, இதர நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

மேலும், அனுஷ்காவின் பிறந்தநாளான இன்று திரையுலக பிரபலங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : சி.வி.சண்முகத்திற்கு நீண்ட காலமாக வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ்

நடிகை அனுஷ்கா ஷெட்டியின் பிறந்தநாளான இன்று (நவ.07), யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தனது மூன்றாவது திரைப்படத்தை அறிவித்தது.

இந்த அறிவிப்பை அந்நிறுவனம் காணொலி வாயிலாக அறிவித்தது. அதில், ”2013ஆம் ஆண்டு மிர்ச்சி திரைப்படத்தில் “அழகு ராணி”-யாக நமது உள்ளங்களைக் கொள்ளை கொண்டார் அனுஷ்கா. 2018-ல் பாகமதியில் “அச்சமில்லா அரசி”-யாக நம்மை ஆட்கொண்டார்.

அனுஷ்காவில் 48ஆவது படம்

தற்போது, “அரசி” அனுஷ்கா ஷெட்டியும் யூவி கிரியேஷன்ஸும் மூன்றாவது முறையாக இணைகின்றனர். அனுஷ்காவின் 48ஆவது படமான இந்த நவீனக் கால பொழுதுபோக்கு சித்திரத்தை மகேஷ் பாபு பி எழுதி இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், ஸ்வீட்டி ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுஷ்கா
அனுஷ்கா

இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மாடர்ன் மங்கையாக புதிய தோற்றத்தில் இப்படத்தில் அனுஷ்கா தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், மகேஷ் பாபு பி இயக்கத்தில் உருவாகவுள்ள இத்திரைப்படத்தின் தலைப்பு, இதர நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

மேலும், அனுஷ்காவின் பிறந்தநாளான இன்று திரையுலக பிரபலங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : சி.வி.சண்முகத்திற்கு நீண்ட காலமாக வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ்

Last Updated : Nov 8, 2021, 11:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.