ETV Bharat / sitara

43 ஆண்டுகள், 32 தேசிய விருதுகள், ஒரு ஆஸ்கர் - சத்யஜித் ரே சில சுவாரஸ்யக் குறிப்புகள்

author img

By

Published : Apr 23, 2020, 2:10 PM IST

1992ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி திரைத்துறையினரால் பெரிதும் போற்றப்படும் ஆஸ்கர் விருதினை இந்தியாவின் பெரும் இயக்குநரான சத்யஜித் ரே பெற்றார். தன் கலைப் படைப்புகளின் மூலம் உலகம் முழுவதுமுள்ள பல கலைஞர்களையும் பார்வையாளர்களையும் இன்றளவும் ஈர்த்து வரும் கலைஞரான சத்யஜித் ரே அவர் வாழ்நாளில் ஒருமுறைகூட ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சத்யஜித் ரே
சத்யஜித் ரே

இந்தியாவின் புகழ்பெற்ற முதுபெரும் இயக்குநர்களில் ஒருவரான சத்யஜித் ரே திரைத்துறையில் தான் ஆற்றிய சாதனைகளுக்கான மணிமகுடமாக அவரது இறுதிகாலத்தில் வாழ்நாள் சாதனைக்காக சிறப்பு ஆஸ்கர் விருதினைப் பெற்றார். உலகம் முழுவதுமுள்ள திரைத்துறை கலைஞர்களின் பல்கலைக்கழகமாகத் திகழும் ரேவின் படங்கள், அவரது வாழ்நாளில் ஆஸ்கருக்கு ஒரு முறைகூட பரிந்துரைக்கப்படவில்லை. ஆனால் தன் திரைவாழ்வின் க்ளைமேக்ஸில் தான் பெற்ற ஆஸ்கரை பெரும் கௌரவமாகக் கருதுவதாக ரே தெரிவித்தார்.

கண்புரை அறுவை சிகிச்சை முடிந்தும், நீண்டநாள் இருதய நோயிலிருந்தும் தேறிவந்த நேரத்தில் அவருக்கு வழங்கப்பட்ட ஆஸ்கர் பெரும் ஊக்களிக்கும் வகையில் அமைந்தது. ரேவுக்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கொல்கத்தாவிலுள்ள அவரது வீடு பெரும் பார்வையாளர் கூட்டத்தாலும், வாழ்த்து மழையாலும் நிரம்பி வழிந்தது.

ஆனால் அந்த நேரத்திலும் ரே, தன் 31ஆவது திரைப்படத்திற்கான திரைக்கதை எழுதும் பணியில் ஈடுபட்டிருந்தார். அத்தனை வயதில், தன் திரை வாழ்வின் இறுதி காலத்தில் அங்கீகாரங்களின் மீதான ஈர்ப்பு வற்றிப்போய் இருந்தாலும், ஆஸ்கர் விருதளித்து கௌரவப்படுத்தப்பட்டது குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது, ”இது என் திரை வாழ்வின் நல்லதொரு க்ளைமேக்ஸ்” எனத் தெரிவித்தார்.

சத்யஜித் ரே
சத்யஜித் ரே

”விருதுகள் எல்லாம் ஒன்றுமில்லை என்னும் இடத்தை நான் தற்போது அடைந்துவிட்டேன். ஆனால் இது நான் முற்றிலும் எதிர்பார்க்காதது. ஏனென்றால் ஒரு இயக்குநருக்கு வழங்கப்படும் ஆஸ்கர், ஓர் எழுத்தாளருக்கு வழங்கப்படும் நோபல் பரிசுக்கு ஒப்பானது. அதனால் இந்த விருதிற்காக மிகவும் சந்தோஷப்படுகிறேன். இதைவிட மதிப்புமிக்க ஒன்றை நான் இனியும் என் வாழ்நாளில் எதிர்ப்பார்க்க முடியாது” என 1992ஆம் ஆண்டின் நேர்காணல் ஒன்றில் ரே தெரிவித்தார்.

ஆஸ்கருக்கு முன்னதாக 1987ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான லிஜியன் டி ஹானர் விருதினை அந்நாட்டு அதிபரிடமிருந்து பெற்ற ரே, சார்லி சாப்ளினை அடுத்து, திரைத்துறையிலிருந்து ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆவார்.

பல படைப்பாளிகளைப் போலவே ரேவும் விமர்சனங்களை உணர்வுப்பூர்வமாகவே கருதினார். ”நம் நாட்டில் விமர்சனங்கள் அவ்வளவு கடுமையானவையாக அல்ல” எனத் தெரிவித்த ரே, சினிமா குறித்த நல்ல புரிதலுடன் கூடிய விமர்சனங்கள் இங்கே இல்லாததே தன்னை வருத்தத்திற்கு உள்ளாக்கி, விமர்சனங்களின் மீதான வெறுப்பிற்கு ஆளாக்கியது என்றும் தெரிவித்தார்.

உலகம் முழுவதுமுள்ள திரைக் கல்லூரிகளில் சத்யஜித் ரேவின் செல்லுலாய்ட் காவியங்கள் இன்று பாடங்களாக உள்ளன. சர்வதேச அங்கீகாரங்கள் தவிர்த்து தன்னுடைய 43 ஆண்டு கால திரைத்துறை பயணத்தில் 32 தேசிய விருதுகளைக் குவித்து ரே சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க: #67YearsOfParasakthi - பகுத்தறிவு பேசிய 'பராசக்தி'

இந்தியாவின் புகழ்பெற்ற முதுபெரும் இயக்குநர்களில் ஒருவரான சத்யஜித் ரே திரைத்துறையில் தான் ஆற்றிய சாதனைகளுக்கான மணிமகுடமாக அவரது இறுதிகாலத்தில் வாழ்நாள் சாதனைக்காக சிறப்பு ஆஸ்கர் விருதினைப் பெற்றார். உலகம் முழுவதுமுள்ள திரைத்துறை கலைஞர்களின் பல்கலைக்கழகமாகத் திகழும் ரேவின் படங்கள், அவரது வாழ்நாளில் ஆஸ்கருக்கு ஒரு முறைகூட பரிந்துரைக்கப்படவில்லை. ஆனால் தன் திரைவாழ்வின் க்ளைமேக்ஸில் தான் பெற்ற ஆஸ்கரை பெரும் கௌரவமாகக் கருதுவதாக ரே தெரிவித்தார்.

கண்புரை அறுவை சிகிச்சை முடிந்தும், நீண்டநாள் இருதய நோயிலிருந்தும் தேறிவந்த நேரத்தில் அவருக்கு வழங்கப்பட்ட ஆஸ்கர் பெரும் ஊக்களிக்கும் வகையில் அமைந்தது. ரேவுக்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கொல்கத்தாவிலுள்ள அவரது வீடு பெரும் பார்வையாளர் கூட்டத்தாலும், வாழ்த்து மழையாலும் நிரம்பி வழிந்தது.

ஆனால் அந்த நேரத்திலும் ரே, தன் 31ஆவது திரைப்படத்திற்கான திரைக்கதை எழுதும் பணியில் ஈடுபட்டிருந்தார். அத்தனை வயதில், தன் திரை வாழ்வின் இறுதி காலத்தில் அங்கீகாரங்களின் மீதான ஈர்ப்பு வற்றிப்போய் இருந்தாலும், ஆஸ்கர் விருதளித்து கௌரவப்படுத்தப்பட்டது குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது, ”இது என் திரை வாழ்வின் நல்லதொரு க்ளைமேக்ஸ்” எனத் தெரிவித்தார்.

சத்யஜித் ரே
சத்யஜித் ரே

”விருதுகள் எல்லாம் ஒன்றுமில்லை என்னும் இடத்தை நான் தற்போது அடைந்துவிட்டேன். ஆனால் இது நான் முற்றிலும் எதிர்பார்க்காதது. ஏனென்றால் ஒரு இயக்குநருக்கு வழங்கப்படும் ஆஸ்கர், ஓர் எழுத்தாளருக்கு வழங்கப்படும் நோபல் பரிசுக்கு ஒப்பானது. அதனால் இந்த விருதிற்காக மிகவும் சந்தோஷப்படுகிறேன். இதைவிட மதிப்புமிக்க ஒன்றை நான் இனியும் என் வாழ்நாளில் எதிர்ப்பார்க்க முடியாது” என 1992ஆம் ஆண்டின் நேர்காணல் ஒன்றில் ரே தெரிவித்தார்.

ஆஸ்கருக்கு முன்னதாக 1987ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான லிஜியன் டி ஹானர் விருதினை அந்நாட்டு அதிபரிடமிருந்து பெற்ற ரே, சார்லி சாப்ளினை அடுத்து, திரைத்துறையிலிருந்து ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆவார்.

பல படைப்பாளிகளைப் போலவே ரேவும் விமர்சனங்களை உணர்வுப்பூர்வமாகவே கருதினார். ”நம் நாட்டில் விமர்சனங்கள் அவ்வளவு கடுமையானவையாக அல்ல” எனத் தெரிவித்த ரே, சினிமா குறித்த நல்ல புரிதலுடன் கூடிய விமர்சனங்கள் இங்கே இல்லாததே தன்னை வருத்தத்திற்கு உள்ளாக்கி, விமர்சனங்களின் மீதான வெறுப்பிற்கு ஆளாக்கியது என்றும் தெரிவித்தார்.

உலகம் முழுவதுமுள்ள திரைக் கல்லூரிகளில் சத்யஜித் ரேவின் செல்லுலாய்ட் காவியங்கள் இன்று பாடங்களாக உள்ளன. சர்வதேச அங்கீகாரங்கள் தவிர்த்து தன்னுடைய 43 ஆண்டு கால திரைத்துறை பயணத்தில் 32 தேசிய விருதுகளைக் குவித்து ரே சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க: #67YearsOfParasakthi - பகுத்தறிவு பேசிய 'பராசக்தி'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.