ETV Bharat / sitara

தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அலுவலர் நியமனம்!

author img

By

Published : Nov 8, 2019, 9:22 AM IST

Updated : Nov 8, 2019, 3:04 PM IST

பெரும் பரபரப்புக்கு இடையே நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படாத நிலையில், சங்கத்தின் விவகாரங்களை நிர்வகிக்க சிறப்பு அலுவலராக பி.வி. கீதா நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்னிந்திய நடிகர்கள் சங்கம்

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலின் தீர்ப்பு வரும்வரை, சங்கத்தின் விவகாரங்களை நிர்வகிக்க சிறப்பு அலுவலர் ஒருவரை அரசு நியமித்துள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் கடந்த ஜூன் மாதம் பெரும் பரபரப்புக்கு இடையே நடைபெற்றது. தேர்தலின் முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

இதையடுத்து தற்போது நடிகர் சங்க விவகாரங்களை நிர்வகிக்க சிறப்பு அலுவலர் ஒருவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்துள்ளார். அதன்படி பதிவுத் துறையின் உதவி ஐ.ஜி.யாக பணியாற்றிவரும் பி.வி. கீதா சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இவர் நடிகர் சங்கத் தேர்தலின் தீர்ப்பு வெளியாகும் வரையில் அல்லது நவம்பர் 6ஆம் தேதியிலிருந்து ஒரு வருட காலம்வரை மட்டுமே இந்தப் பணியை மேற்கொள்வார் என்றும் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலின் தீர்ப்பு வரும்வரை, சங்கத்தின் விவகாரங்களை நிர்வகிக்க சிறப்பு அலுவலர் ஒருவரை அரசு நியமித்துள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் கடந்த ஜூன் மாதம் பெரும் பரபரப்புக்கு இடையே நடைபெற்றது. தேர்தலின் முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

இதையடுத்து தற்போது நடிகர் சங்க விவகாரங்களை நிர்வகிக்க சிறப்பு அலுவலர் ஒருவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்துள்ளார். அதன்படி பதிவுத் துறையின் உதவி ஐ.ஜி.யாக பணியாற்றிவரும் பி.வி. கீதா சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இவர் நடிகர் சங்கத் தேர்தலின் தீர்ப்பு வெளியாகும் வரையில் அல்லது நவம்பர் 6ஆம் தேதியிலிருந்து ஒரு வருட காலம்வரை மட்டுமே இந்தப் பணியை மேற்கொள்வார் என்றும் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:Body:தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் தீர்ப்பு வரும்வரை சங்கத்தின் விவகாரங்களை நிர்வகிக்க சிறப்பு அதிகாரி ஒருவரை அரசு நியமித்துள்ளது.

நடிகர் சங்க தேர்தல் கடந்த ஜுன் மாதம் பெரும் பரபரப்புக்கு இடையே நடைபெற்றது. தேர்தலின் முடிவுகளை வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த நிலையில் தற்போது நடிகர் சங்க விவகாரங்களை நிர்வகிக்க சிறப்பு அதிகாரி ஒருவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்துள்ளார். அதன்படி பதிவுத்துறையின் துணை ஆய்வாளராக பணியாற்றி வரும் பி.வி.கீதா சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 
 
மேலும் இவர் நடிகர் சங்க தேர்தலின் தீர்ப்பு வெளியாகும் வரையில் அல்லது நவம்பர் 6 ஆம் தேதியிலிருந்து ஒரு வருட காலம்வரை மட்டுமே இந்த பணியை மேற்கொள்வார் என்றும் இது சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Conclusion:
Last Updated : Nov 8, 2019, 3:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.