மலையாள எழுத்தாளர் பெனியமின் எழுதிய புதினம் 'ஆடு ஜீவிதம்’ (Goat days). மலையாளத்தில் உருவான இந்தப் புதினம், ஆங்கிலம், அரபி, தமிழ், கன்னடம், இந்தி எனப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இந்தப் புதினத்தை அடிப்படையாகk கொண்டு பிரித்விராஜ் நடிப்பில் இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கத்தில் ஆடு ஜீவிதம் படம் உருவாகிவருகிறது.
ஆடு ஜீவிதம் படத்திற்காக 20 கிலோ எடை குறைந்து, அதிக தாடியுடன் காணப்படுகிறார் பிரித்விராஜ். வாசகர்களுக்குப் படிக்க படிக்க ஆவலை அதிகரித்த கதை என்பதால், அதன் தன்மை மாறாமல் எடுக்க விரும்புகிறது இதன் படக்குழு. அதனால் முக்கியமான தொழில்நுட்பக் கலைஞர்களைக் கொண்டு படம் உருவாகிவருகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஜோர்டன் நாட்டில் உள்ள பாலைவனப் பகுதிகளில் நடைபெற்றுவருகிறது. தற்போது உலகப் பெருந்தொற்றான கரோனா காரணமாக படப்பிடிப்பை நிறுத்திவைக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
படப்பிடிப்பு தற்போது ரத்தானதால் அங்கு சிக்கியுள்ள 58 பேரை இந்தியாவிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறு இயக்குநர் பிளெஸ்ஸி கேரள திரைப்படச் சங்கத்திற்கு கோரிக்கைவிடுத்திருந்தார்.
-
#Aadujeevitham Schedule pack up! 😊❤️ pic.twitter.com/OrZjjf4yF5
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) May 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#Aadujeevitham Schedule pack up! 😊❤️ pic.twitter.com/OrZjjf4yF5
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) May 17, 2020#Aadujeevitham Schedule pack up! 😊❤️ pic.twitter.com/OrZjjf4yF5
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) May 17, 2020
அதுமட்டுமல்லாது பிரித்விராஜ் தனது சமூக வலைதளப்பக்கத்தில் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், சரியான நேரம் வரும்போது இந்தியா திரும்புவோம் எனவும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து தற்போது படக்குழுவினர் அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்ப தயாராக உள்ளதாக பிரித்விராஜ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சரியான நேரம் வரும்போது இந்தியா திரும்புவோம் - 'ஆடு ஜீவிதம்' பிரித்விராஜ் ட்வீட்