ETV Bharat / sitara

மீண்டும் பாலிவுட் ஸ்டார் சல்மான் கானை வைத்து இயக்கும் பிரபுதேவா

author img

By

Published : Apr 2, 2019, 11:12 AM IST

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் பிரபு தேவா சல்மான்கான் நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார்.

பிரபுதேவா

தமிழ் சினிமாவில் நடனம் என்றதும் நம் நினைவுக்கு வருவது பிரபுதேவாதான். நடன இயக்குநராக இருந்த பிரபுதேவா இயக்குநர் ஷங்கர் இயக்கிய 'காதலன்' படத்தின் மூலம் நடிகரானார். இதனைத்தொடர்ந்து முன்னணி நடிகராக வலம்வந்தார். நடிகர் விஜயை வைத்து 'போக்கிரி' படத்தை இயக்கினார். இதுதமிழில் வெற்றிப்படமாக அமைந்தது.

தமிழ், தெலுங்கு படங்களை இயக்கிவந்த பிரபுதேவா முதன்முறையாக பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து 'வான்டட்' என்ற பெயரில் போக்கிரி படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்தார். அப்படம் இந்தியில் மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

மேலும், இயக்குநர் பணிக்கு முழுக்கு போட்ட பிரபுதேவா, ஏ.எல்.விஜய் இயக்கிய 'தேவி' படத்தின் மூலம் மீண்டும் நடிகரானார். தேவி திரைப்படத்தைத் தொடர்ந்து 'குலேபகாவலி', 'தேவி-2', 'பொன்மாணிக்கவேல்' ஆகிய படங்களில் நடித்தார்.

இந்நிலையில், சல்மான் கான் நடிக்கும் 'டபாங்-3' படத்தை இயக்க இருக்கிறார். பத்து வருடங்கள் கழித்து சல்மான் கான் -பிரபுதேவா கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர். 'டபாங் -3' படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது.

இதனிடையே ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.தற்போது, இவர் நடித்துள்ள பொன்மாணிக்கவேல் திரைப்படம் திரைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் நடனம் என்றதும் நம் நினைவுக்கு வருவது பிரபுதேவாதான். நடன இயக்குநராக இருந்த பிரபுதேவா இயக்குநர் ஷங்கர் இயக்கிய 'காதலன்' படத்தின் மூலம் நடிகரானார். இதனைத்தொடர்ந்து முன்னணி நடிகராக வலம்வந்தார். நடிகர் விஜயை வைத்து 'போக்கிரி' படத்தை இயக்கினார். இதுதமிழில் வெற்றிப்படமாக அமைந்தது.

தமிழ், தெலுங்கு படங்களை இயக்கிவந்த பிரபுதேவா முதன்முறையாக பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து 'வான்டட்' என்ற பெயரில் போக்கிரி படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்தார். அப்படம் இந்தியில் மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

மேலும், இயக்குநர் பணிக்கு முழுக்கு போட்ட பிரபுதேவா, ஏ.எல்.விஜய் இயக்கிய 'தேவி' படத்தின் மூலம் மீண்டும் நடிகரானார். தேவி திரைப்படத்தைத் தொடர்ந்து 'குலேபகாவலி', 'தேவி-2', 'பொன்மாணிக்கவேல்' ஆகிய படங்களில் நடித்தார்.

இந்நிலையில், சல்மான் கான் நடிக்கும் 'டபாங்-3' படத்தை இயக்க இருக்கிறார். பத்து வருடங்கள் கழித்து சல்மான் கான் -பிரபுதேவா கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர். 'டபாங் -3' படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது.

இதனிடையே ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.தற்போது, இவர் நடித்துள்ள பொன்மாணிக்கவேல் திரைப்படம் திரைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.