ETV Bharat / sitara

'இந்த பூமி எவனுக்கும் அப்பன் வீட்டு சொத்து கிடையாது' - கார்த்திக் சுப்பராஜ் காட்டம் - இந்த பூமி எவனுக்கும் அப்பன் வீட்டு சொத்து கிடையாது

குடியுரிமை சட்ட விவகாரம் குறித்து ட்வீட் செய்துள்ள இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், 'இந்த பூமி எவனுக்கும் அப்பன் வீட்டு சொத்து கிடையாது' என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

karthik-subbaraj
karthik-subbaraj
author img

By

Published : Dec 17, 2019, 4:31 PM IST

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்பு வரை இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் பல்வேறு கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதற்குபின் இம்மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் வழங்கப்பட்டது. இந்த மசோதாவிற்கு எதிராக அஸ்ஸாம், திரிபுரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

இந்தச் சட்டத்தை பெரும்பாலான எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்த்துவரும் நிலையில், தங்கள் மாநிலங்களில் இதை அமல்படுத்தமாட்டோம் என கேரளா, பஞ்சாப், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.

  • Citizenship Amendment Act - Sounds seriously wrong & against Secularism..

    Let's keep India Secular
    Say NO to CAA
    Say NO to NRC
    Say NO to Police Violence on Students

    இந்த பூமி எவனுக்கும் , அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது..... #IndiansAgainstCAB #JamiaProtests

    — karthik subbaraj (@karthiksubbaraj) December 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில் இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், 'இந்தியாவை மதச்சார்பற்றதாக வைத்திருப்போம், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு மறுப்பு தெரிவிப்போம், அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிர்ப்பு தெரிவிப்போம், இந்த பூமி எவனுக்கும் அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது' என்று காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க...

போலீஸ் வேடம் எனக்கு பிடிக்காது - ரஜினிகாந்த்

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்பு வரை இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் பல்வேறு கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதற்குபின் இம்மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் வழங்கப்பட்டது. இந்த மசோதாவிற்கு எதிராக அஸ்ஸாம், திரிபுரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

இந்தச் சட்டத்தை பெரும்பாலான எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்த்துவரும் நிலையில், தங்கள் மாநிலங்களில் இதை அமல்படுத்தமாட்டோம் என கேரளா, பஞ்சாப், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.

  • Citizenship Amendment Act - Sounds seriously wrong & against Secularism..

    Let's keep India Secular
    Say NO to CAA
    Say NO to NRC
    Say NO to Police Violence on Students

    இந்த பூமி எவனுக்கும் , அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது..... #IndiansAgainstCAB #JamiaProtests

    — karthik subbaraj (@karthiksubbaraj) December 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில் இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், 'இந்தியாவை மதச்சார்பற்றதாக வைத்திருப்போம், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு மறுப்பு தெரிவிப்போம், அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிர்ப்பு தெரிவிப்போம், இந்த பூமி எவனுக்கும் அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது' என்று காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க...

போலீஸ் வேடம் எனக்கு பிடிக்காது - ரஜினிகாந்த்

Intro:Body:

Karthik subburaj about CAB


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.