ETV Bharat / sitara

இந்தியன் 2 விபத்து: குற்றப்பிரிவு அதிகாரிகள் முன் கமல் ஆஜர்

author img

By

Published : Mar 3, 2020, 12:15 PM IST

சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பான விசாரணைக்காக நடிகர் கமல்ஹாசன் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

குற்றப்பிரிவு போலீஸ் முன் நேரில் ஆஜரான கமல்
குற்றப்பிரிவு போலீஸ் முன் நேரில் ஆஜரான கமல்

சென்னையை அடுத்துள்ள பூந்தமல்லியில் கமல்ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி படப்பிடிப்பு தளத்தில் இருந்த ராட்சத கிரேன் அறுந்து விழுந்ததில் உதவி இயக்குநர் கிருஷ்ணா உள்ளிட்ட மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக நசரத்பேட்டை காவல் துறையினர் லைகா நிறுவனம் மற்றும் கிரேன் ஆபரேட்டர் ராஜன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தனர். இவ்விபத்து தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரிக்க காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதையடுத்து லைகா நிறுவனம், இயக்குநர் ஷங்கர், கிரேன் உரிமையாளர் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் விசாரணை மேற்கொள்ள மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் சம்மன் அனுப்பியிருந்தனர்.

குற்றப்பிரிவு காவல் துறையினர் முன் கமல் ஆஜர்

அதனடிப்படையில் கடந்த 25ஆம் தேதி படப்பிடிப்பிற்கு செட் அமைத்த மேலாளர், கிரேன் உரிமையாளர், கிரேன் ஆபரேட்டர் உள்ளிட்ட ஆறு பேரை துணை ஆணையர் நாகஜோதி தனித்தனியாக ஐந்து மணி நேரம் விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில் விபத்து தொடர்பான பல்வேறு தகவல்கள் கிடைத்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், விபத்து குறித்த விசாரணைக்காக 'இந்தியன் 2' படத்தின் இயக்குநர் ஷங்கர், மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் இன்று காலை ஆஜரானார். அதில் அவரிடம் விபத்து எப்படி நிகழ்ந்தது, எவ்வளவு நாள்கள் செட் அமைக்கப்பட்டது, இந்த செட் அமைக்க எத்தனை பேர் பயன்படுத்தப்பட்டனர் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை துணை ஆணையர் நாகஜோதி முன் வைத்ததாகத் தெரிகிறது.

அவரைத்தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனும் இன்று காலை காலை 10:30 மணியளவில் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி விபத்து குறித்து விளக்கம் அளித்துவருகிறார்.

சென்னையை அடுத்துள்ள பூந்தமல்லியில் கமல்ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி படப்பிடிப்பு தளத்தில் இருந்த ராட்சத கிரேன் அறுந்து விழுந்ததில் உதவி இயக்குநர் கிருஷ்ணா உள்ளிட்ட மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக நசரத்பேட்டை காவல் துறையினர் லைகா நிறுவனம் மற்றும் கிரேன் ஆபரேட்டர் ராஜன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தனர். இவ்விபத்து தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரிக்க காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதையடுத்து லைகா நிறுவனம், இயக்குநர் ஷங்கர், கிரேன் உரிமையாளர் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் விசாரணை மேற்கொள்ள மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் சம்மன் அனுப்பியிருந்தனர்.

குற்றப்பிரிவு காவல் துறையினர் முன் கமல் ஆஜர்

அதனடிப்படையில் கடந்த 25ஆம் தேதி படப்பிடிப்பிற்கு செட் அமைத்த மேலாளர், கிரேன் உரிமையாளர், கிரேன் ஆபரேட்டர் உள்ளிட்ட ஆறு பேரை துணை ஆணையர் நாகஜோதி தனித்தனியாக ஐந்து மணி நேரம் விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில் விபத்து தொடர்பான பல்வேறு தகவல்கள் கிடைத்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், விபத்து குறித்த விசாரணைக்காக 'இந்தியன் 2' படத்தின் இயக்குநர் ஷங்கர், மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் இன்று காலை ஆஜரானார். அதில் அவரிடம் விபத்து எப்படி நிகழ்ந்தது, எவ்வளவு நாள்கள் செட் அமைக்கப்பட்டது, இந்த செட் அமைக்க எத்தனை பேர் பயன்படுத்தப்பட்டனர் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை துணை ஆணையர் நாகஜோதி முன் வைத்ததாகத் தெரிகிறது.

அவரைத்தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனும் இன்று காலை காலை 10:30 மணியளவில் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி விபத்து குறித்து விளக்கம் அளித்துவருகிறார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.