ETV Bharat / sitara

சற்குணம் கூறுவது சுத்தப் பொய் - தயாரிப்பாளர் சிங்காரவேலன்

author img

By

Published : May 11, 2019, 10:03 PM IST

சென்னை: களவானி -2 படத்தின் இயக்குநர் சற்குணம் தங்கள் மீது அளித்துள்ள குற்றச்சாட்டு பொய்யானது, அதை சட்டத்தின் முன்பு நிரூபிப்போம் என தயாரிப்பாளர் சிங்காரவேலன் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் சிங்காரவேலன்

களவாணி-2 பட விவகாரத்தில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக இயக்குநர் சற்குணம் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். அதன்படி இன்று சென்னை பெருநகர் காவல் ஆணையத்திற்கு வந்த தயாரிப்பாளர் சிங்காரவேலன், தன் மீது அளித்த புகாருக்கு நேரில் விளக்கம் அளித்தார்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'முன்னதாக களவாணி-2 படத்தை விமல் தயாரிக்க இருப்பதாகத் தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் அனைத்து பத்திரிகைகளிலும் செய்தியாக வந்தது. இதனைத்தொடர்ந்து நடிகர் விமல், களவாணி-2 படத்தை வாங்கிக்கொள்ளுமாறு தன்னிடம் கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில், அக்டோபர் 14, 2017ஆம் ஆண்டு இருவரும் ஒப்பந்தம் செய்துகொண்டோம். அப்போது அவரிடம் 1.50 கோடி ரூபாய் பணம் கொடுத்தேன்.

தயாரிப்பாளர் சிங்காரவேலன்

ஆனால், அவர் எங்கள் பணத்தில் படத்தை ஆரம்பிக்காமல், திடீரென்று ஏப்ரல் மாதம் இயக்குநர் சற்குணமே இந்த படத்தை தயாரிக்கிறார் என்று அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து பணத்தை திரும்பித் தருமாறு கேட்டோம். ஆனால், அவர் பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்தார். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி, களவாணி-2 படத்திற்கு தடை உத்தரவு வாங்கினோம். இதை திசைதிருப்ப எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் வைத்து காவல் ஆணையரிடம் இயக்குநர் சற்குணம் பொய் புகார் அளித்துள்ளார். இதை எதிர்த்து நாங்கள் நீதிமன்றத்தில் முறையீடு செய்து சட்டப்படி நீதியை வெல்வோம்' என தெரிவித்தார்.

களவாணி-2 பட விவகாரத்தில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக இயக்குநர் சற்குணம் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். அதன்படி இன்று சென்னை பெருநகர் காவல் ஆணையத்திற்கு வந்த தயாரிப்பாளர் சிங்காரவேலன், தன் மீது அளித்த புகாருக்கு நேரில் விளக்கம் அளித்தார்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'முன்னதாக களவாணி-2 படத்தை விமல் தயாரிக்க இருப்பதாகத் தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் அனைத்து பத்திரிகைகளிலும் செய்தியாக வந்தது. இதனைத்தொடர்ந்து நடிகர் விமல், களவாணி-2 படத்தை வாங்கிக்கொள்ளுமாறு தன்னிடம் கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில், அக்டோபர் 14, 2017ஆம் ஆண்டு இருவரும் ஒப்பந்தம் செய்துகொண்டோம். அப்போது அவரிடம் 1.50 கோடி ரூபாய் பணம் கொடுத்தேன்.

தயாரிப்பாளர் சிங்காரவேலன்

ஆனால், அவர் எங்கள் பணத்தில் படத்தை ஆரம்பிக்காமல், திடீரென்று ஏப்ரல் மாதம் இயக்குநர் சற்குணமே இந்த படத்தை தயாரிக்கிறார் என்று அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து பணத்தை திரும்பித் தருமாறு கேட்டோம். ஆனால், அவர் பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்தார். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி, களவாணி-2 படத்திற்கு தடை உத்தரவு வாங்கினோம். இதை திசைதிருப்ப எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் வைத்து காவல் ஆணையரிடம் இயக்குநர் சற்குணம் பொய் புகார் அளித்துள்ளார். இதை எதிர்த்து நாங்கள் நீதிமன்றத்தில் முறையீடு செய்து சட்டப்படி நீதியை வெல்வோம்' என தெரிவித்தார்.

களவானி இரண்டாம் பாகம் படத்தின் இயக்குனர் சற்குனத்தை வழக்கில் மீண்டும் இணைக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்ய உள்ளோம் என தயாரிப்பாளர் சிங்காரவேலன் பேட்டி 

களவாணி 2 படத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து படத்தின் இயக்குனர் சற்குணம் தாக்கல் செய்த மனுவின் படி அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் படத்திற்கு தடை தொடரும் என உயர்நீதிமன்றம் கூறியிருந்தது. இந்நிலையில் இயக்குனர் சற்குணம் தயாரிப்பாளர் சிங்காரவேலன் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். 

அதன் படி இன்று தயாரிப்பாளர் சிங்காரவேலன் சென்னை பெருநகர் காவல் ஆணையத்திற்கு வந்து நேரில் விளக்கம் அளித்தார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், களவாணி 2 படத்தை சற்குணம் இயக்க நான் தயாரிக்க உள்ளேன் என விமல் கூறியிருந்தார். இது அனைத்து பத்திரிகையிலும் செய்தியாக வந்தது. அதன் பிறகு என்னை விமல் அணுகி களவாணி 2 படத்தை என்னை வாங்கவேண்டும் என கூறினார். அதன் படி அக்டோபர் 14 ஆம் தேதி 2017 ஆண்டு ஒப்பந்தம் செய்துகொண்டோம்.

அதற்கு பிறகு எங்கள் பணத்தில் படத்தை ஆரம்பிக்காமல் திடீரென்று ஏப்ரல் மாதம் இயக்குனர் சற்குணமே இந்த படத்தை தயாரிக்கிறார் என்று அறிவிப்பு வெளியானது. 

இதை தொடர்ந்து நாங்கள் எங்கள் பணத்தை திரும்ப கேட்டால் ஏதாவது காரணம் காட்டி காலம் தாழ்த்தி வந்தனர். தற்போது இந்த படத்திற்கும் எனக்கும் எந்த சமந்தமும் இல்லையென்று கூறுகின்றனர். பிறகு நாங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி களவாணி 2 படதிற்கு தடை உத்தரவு வாங்கி உள்ளோஇதை திசைதிருப்ப எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் வைத்து காவல் ஆணையரரிடம் புகார் அளித்துள்ளனர். அதை தொடர்ந்து தற்போது எங்களிடம் உள்ள ஆதாரங்களை சமர்ப்பித்து விளக்கம் அளித்துள்ளோம்.

சற்குணம் தாக்கல் செய்த மனுவின் படி அவர் களவாணி 2 பட வழக்கில் இருந்தது விடுவிக்கப்பட்டுள்ளார். அதை எதிர்த்து நாங்கள் நீதிமன்றத்தில் முறையீடு  செய்ய உள்ளோம். அனைத்தையும் நாங்கள் சட்டப்படி சந்திப்போம் என கூறினார். 
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.