ETV Bharat / sitara

ராத்திரி பன்னிரெண்டு மணிக்குத் தோன்றிய 'கைதி' இரண்டாம் பாகம் ஐடியா - 'தம்பி' விழாவில் கார்த்தி பேச்சு

author img

By

Published : Dec 1, 2019, 1:12 PM IST

அண்ணி கூட நடித்தது எனக்கு ஸ்பெஷல். சத்யராஜ் இல்லை என்றால் இந்தப் படமே வேண்டாம் என்று சொன்னேன் என நடிகர் கார்த்தி தம்பி பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நிலையில், ரஜினிகாந்திடம் இணைந்து நடித்தபோது இருந்த ஃபீலிங் கார்த்தியுடன் இணைந்து நடித்தபோது இருந்ததாக நடிகை ஜோதிகா அவரைப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

'தம்பி' விழாவில் கார்த்தி பேச்சு
ctor karthi speech in Thambi audio launch

சென்னை: கார்த்தி - ஜோதிகா முதல் முறையாக இணைந்து நடித்துள்ள தம்பி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

கார்த்தி - ஜோதிகா நடிக்கும் தம்பி படத்தின் இசை வெளியீட்டு விழா
Suriya, Jyothika and Karthi in Thambi audio launch

வயாகம்18 ஸ்டுடியோஸ் மற்றும் பாரலல் மைண்ட்ஸ் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் 'தம்பி'. இந்தப் படத்தை 'பாபநாசம்' படப் புகழ் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். அக்கா - தம்பி சென்டிமென்டை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள படத்தில் ஜோதிகா, கார்த்தி, சத்யராஜ், சீதா, நிகிலா விமல், இளவரசு, சௌகார் ஜானகி, அம்மு அபிராமி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கார்த்தி - ஜோதிகா நடிக்கும் தம்பி படத்தின் இசை வெளியீட்டு விழா
Karthi - Jyothika starer Thambi audio launch event

கடந்த இரு நாட்களுக்கு முன் இப்படத்தின் டீஸர் வெளியாகிய நிலையில், இதன் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சூர்யா, சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கார்த்தி - ஜோதிகா நடிக்கும் தம்பி படத்தின் இசை வெளியீட்டு விழா
Karthi - Jyothika starer Thambi audio launch event

நடிகர் கார்த்தி பேசியதாவது, ' இரண்டு வருட உழைப்பு இந்தப் படத்துக்கு பின்னாடி இருக்கு. இயக்குநர் ஏற்கெனவே மோகன்லால், கமல்ஹாசன் ஆகியோரை வைத்து படம் பண்ணிட்டு வந்திருக்கார். அவர் தனக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். அண்ணி கூட நடிச்சது எனக்கு ஸ்பெஷல். அவங்க ஒரு கேரக்டருக்கு எடுக்கிற சிரத்தை, உழைப்பு பிரமிப்பைத் தருது. இப்படி அண்ணி கூட ஒரு படம் நடிப்பேன்னு நான் நினைக்கவே இல்ல.

ctor karthi speech in Thambi audio launch

சத்யராஜ் இல்லை என்றால் இந்தப் படமே வேண்டாம் என்று சொன்னேன். அவ்வளவு முக்கியமான கேரக்டர். இளவரசு, ரமேஷ் திலக் ரெண்டு பேரையும் நீங்க ரசிப்பீங்க. கைதிக்கு அப்புறம் இந்தப் படம் வர்றது எனக்கு சந்தோஷம். குடும்பத்தோட எல்லாரும் ரசிக்கிற மாதிரியான படம். கைதி இரண்டாம் பாகம் விரைவில் வெளிவரும்' என்றார்.

ctor karthi speech in Thambi audio launch

நடிகை ஜோதிகா பேசியதாவது, '' தம்பி எனக்கு படம் இல்ல, ஒரு சென்டிமென்ட். என் தம்பியோட நடிக்கிற முதல் படம். கார்த்தி, தன்னுடன் இணைந்து நடிக்கிற கேரக்டர்களுக்குச் சமமான இடம் கொடுப்பார். அப்படித்தான் இந்தப் படத்தில் எனக்கும் முக்கியத்துவம் உள்ளது .

நடிகர் ரஜினி காந்துடன் இணைந்து சந்திரமுகி படத்தில் நடித்தபோது முதல் நாள், அவர் வந்து இது உன்னோட படம் நல்லா பண்ணு, சந்திரமுகின்னு பேரே உன்ன வச்சுதான்னு சொன்னார். அப்போ அவருக்கு எவ்வளவு பெரிய மனசுன்னு தோணுச்சு. அதே ஃபீல் கார்த்தியிடம் உள்ளது.

சத்யராஜுடன் இணைந்து நடித்தது மிகப்பெரிய சந்தோஷம். என் குழந்தைகள் நீங்க கட்டப்பா கூடய்யா நடிக்கிறீங்கன்னு கேட்டாங்க. இயக்குநர் ஜீத்து ஜோசப் வீட்டில் இருந்து அவரோட பெண்கள் உதவி இயக்குநரா வேலை பார்த்தாங்க. அவங்களை பார்க்க அவ்வளவு சந்தோஷமா இருந்தது. 'தம்பி' எனக்கு ரொம்ப முக்கியமான படம் '' என்று பேசினார்.

ctor karthi speech in Thambi audio launch

நடிகர் சத்யராஜ் பேசியதாவது, 'ஒரு குடும்பம் தொடர்ந்து என்ன பயமுறுத்திட்டு இருக்குனா அது சிவகுமார் குடும்பம் தான். அவர் மாதிரி ஒரு நல்ல நடிகனா இருக்க முடியுமா, அவர் மாதிரி பிள்ளைகள் வளர்க்க முடியுமா என்கிற பயம் தான். இப்படி தொடர்ந்து அவரது குடும்பம் பயமுறுத்திட்டு இருக்கிறார்கள்.

இயக்குநர் ஜீத்து ஜோசப்போட பாபநாசம் மூணு மொழில பார்த்தேன், ரசித்தேன். அவர் இயக்கத்தில் நடிக்க முடியுமானு நினைச்சேன். இப்போது அவர் இயக்கத்தில் நடிப்பது மகிழ்ச்சி. இந்தப் படத்தில் எனக்கு ஒரு வித்தியாசமான கதாபாத்திரம். சராசரி கேரக்டர் பண்றதுல எனக்கு விருப்பம் இல்ல. ஆனா, இந்தப் படத்துல பாகுபலி மாதிரி ஒரு வித்தியாசமான, நடிப்புக்கு வாய்ப்புள்ள கேரக்டரில் நடித்துள்ளேன்.

நான் அதிகமா இன்வால்வாகி கொஞ்சம் ஓவரா நடிச்சுடுவேன். ஆனா, இயக்குநர் அதெல்லாம் வேணாம்னு ஒரே வார்த்தையில் சொல்லிடுவார். இப்படிதான், படத்த கெடுக்கிற எல்லா வேலையையும் பார்ப்பேன். அதைக் கட்டுபடுத்தி, என்ன இந்தப் படத்துல நடிக்க வச்சிருக்காங்க.

ctor karthi speech in Thambi audio launch

நடிகர் ரமேஷ் திலக் பேசியதாவது,

'இந்தப் படத்தில் நடிச்சதே எனக்குப் பெருமை. கார்த்தி நடிப்பதை நேரில் பார்த்து ரசித்தேன். ஒவ்வொரு காட்சிக்கும் அவர் எடுக்கும் சிரத்தை பார்த்து பிரமித்தேன்.

பொதுவாக படங்களை விமர்சனம் செய்பவர்கள், கொஞ்சம் தரம் தாழாமல் விமர்சனம் செய்யவேண்டும் என்று வேண்டுகொள் வைக்கிறேன். ஒரு திரைப்படம் பார்த்து தற்கொலை செய்துகொண்டவர்கள் யாரும் கிடையாது. ஆனால், படம் எடுத்து தற்கொலை செய்து கொண்டவர்கள் உள்ளனர். அதை மனதில் வைத்து விமர்சனம் செய்யுங்கள்' என்றார்.

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா பேசியதாவது, ' 'உறியடி' படத்துக்கு பின்னணி இசை பண்ணினதுக்கு அப்புறம், நடிகர் சூர்யா ஒரு லேப்டாப் கிஃப்ட் கொடுத்தார். அதுதான் எனக்கு சினிமாவில கிடைச்ச முதல் கிஃப்ட். அந்த லேப்டாப்லதான் ’தம்பி' பட மியூஸிக் பணிகளை பண்ணினேன். கார்த்தி ஒரு ஜீனியஸ். மெட்ராஸ் படத்துக்கு அப்புறம் நான் அவரோட பெரிய ஃபேன்' என்று கூறினார்

படத்தின் இயக்குநர் ஜீது ஜோசப் பேசியதாவது, ' 'பாபநாசம்' என்னோட முதல் தமிழ்ப்படம். அதுக்கு அப்புறம் நல்ல கதைக்காக காத்திருந்தேன். ஜோதிகா - கார்த்தி ஆகியோர் அக்கா - தம்பியாக நடிக்க வைக்கிற ஐடியா இருக்குனு சூரஜ் சொன்னார். இதை மிஸ் பண்ணக்கூடாதுனு உடனே ஒப்புக்கொண்டேன். சத்யராஜ், சௌகார் ஜானகி இந்தப் படத்துக்கு மிகப்பெரிய பலம். குடும்பங்கள் ரசிக்கிற கமர்ஷியல் படமாக இருக்கும்' என்று கூறினார்.

Thambi movie audio launch

சென்னை: கார்த்தி - ஜோதிகா முதல் முறையாக இணைந்து நடித்துள்ள தம்பி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

கார்த்தி - ஜோதிகா நடிக்கும் தம்பி படத்தின் இசை வெளியீட்டு விழா
Suriya, Jyothika and Karthi in Thambi audio launch

வயாகம்18 ஸ்டுடியோஸ் மற்றும் பாரலல் மைண்ட்ஸ் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் 'தம்பி'. இந்தப் படத்தை 'பாபநாசம்' படப் புகழ் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். அக்கா - தம்பி சென்டிமென்டை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள படத்தில் ஜோதிகா, கார்த்தி, சத்யராஜ், சீதா, நிகிலா விமல், இளவரசு, சௌகார் ஜானகி, அம்மு அபிராமி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கார்த்தி - ஜோதிகா நடிக்கும் தம்பி படத்தின் இசை வெளியீட்டு விழா
Karthi - Jyothika starer Thambi audio launch event

கடந்த இரு நாட்களுக்கு முன் இப்படத்தின் டீஸர் வெளியாகிய நிலையில், இதன் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சூர்யா, சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கார்த்தி - ஜோதிகா நடிக்கும் தம்பி படத்தின் இசை வெளியீட்டு விழா
Karthi - Jyothika starer Thambi audio launch event

நடிகர் கார்த்தி பேசியதாவது, ' இரண்டு வருட உழைப்பு இந்தப் படத்துக்கு பின்னாடி இருக்கு. இயக்குநர் ஏற்கெனவே மோகன்லால், கமல்ஹாசன் ஆகியோரை வைத்து படம் பண்ணிட்டு வந்திருக்கார். அவர் தனக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். அண்ணி கூட நடிச்சது எனக்கு ஸ்பெஷல். அவங்க ஒரு கேரக்டருக்கு எடுக்கிற சிரத்தை, உழைப்பு பிரமிப்பைத் தருது. இப்படி அண்ணி கூட ஒரு படம் நடிப்பேன்னு நான் நினைக்கவே இல்ல.

ctor karthi speech in Thambi audio launch

சத்யராஜ் இல்லை என்றால் இந்தப் படமே வேண்டாம் என்று சொன்னேன். அவ்வளவு முக்கியமான கேரக்டர். இளவரசு, ரமேஷ் திலக் ரெண்டு பேரையும் நீங்க ரசிப்பீங்க. கைதிக்கு அப்புறம் இந்தப் படம் வர்றது எனக்கு சந்தோஷம். குடும்பத்தோட எல்லாரும் ரசிக்கிற மாதிரியான படம். கைதி இரண்டாம் பாகம் விரைவில் வெளிவரும்' என்றார்.

ctor karthi speech in Thambi audio launch

நடிகை ஜோதிகா பேசியதாவது, '' தம்பி எனக்கு படம் இல்ல, ஒரு சென்டிமென்ட். என் தம்பியோட நடிக்கிற முதல் படம். கார்த்தி, தன்னுடன் இணைந்து நடிக்கிற கேரக்டர்களுக்குச் சமமான இடம் கொடுப்பார். அப்படித்தான் இந்தப் படத்தில் எனக்கும் முக்கியத்துவம் உள்ளது .

நடிகர் ரஜினி காந்துடன் இணைந்து சந்திரமுகி படத்தில் நடித்தபோது முதல் நாள், அவர் வந்து இது உன்னோட படம் நல்லா பண்ணு, சந்திரமுகின்னு பேரே உன்ன வச்சுதான்னு சொன்னார். அப்போ அவருக்கு எவ்வளவு பெரிய மனசுன்னு தோணுச்சு. அதே ஃபீல் கார்த்தியிடம் உள்ளது.

சத்யராஜுடன் இணைந்து நடித்தது மிகப்பெரிய சந்தோஷம். என் குழந்தைகள் நீங்க கட்டப்பா கூடய்யா நடிக்கிறீங்கன்னு கேட்டாங்க. இயக்குநர் ஜீத்து ஜோசப் வீட்டில் இருந்து அவரோட பெண்கள் உதவி இயக்குநரா வேலை பார்த்தாங்க. அவங்களை பார்க்க அவ்வளவு சந்தோஷமா இருந்தது. 'தம்பி' எனக்கு ரொம்ப முக்கியமான படம் '' என்று பேசினார்.

ctor karthi speech in Thambi audio launch

நடிகர் சத்யராஜ் பேசியதாவது, 'ஒரு குடும்பம் தொடர்ந்து என்ன பயமுறுத்திட்டு இருக்குனா அது சிவகுமார் குடும்பம் தான். அவர் மாதிரி ஒரு நல்ல நடிகனா இருக்க முடியுமா, அவர் மாதிரி பிள்ளைகள் வளர்க்க முடியுமா என்கிற பயம் தான். இப்படி தொடர்ந்து அவரது குடும்பம் பயமுறுத்திட்டு இருக்கிறார்கள்.

இயக்குநர் ஜீத்து ஜோசப்போட பாபநாசம் மூணு மொழில பார்த்தேன், ரசித்தேன். அவர் இயக்கத்தில் நடிக்க முடியுமானு நினைச்சேன். இப்போது அவர் இயக்கத்தில் நடிப்பது மகிழ்ச்சி. இந்தப் படத்தில் எனக்கு ஒரு வித்தியாசமான கதாபாத்திரம். சராசரி கேரக்டர் பண்றதுல எனக்கு விருப்பம் இல்ல. ஆனா, இந்தப் படத்துல பாகுபலி மாதிரி ஒரு வித்தியாசமான, நடிப்புக்கு வாய்ப்புள்ள கேரக்டரில் நடித்துள்ளேன்.

நான் அதிகமா இன்வால்வாகி கொஞ்சம் ஓவரா நடிச்சுடுவேன். ஆனா, இயக்குநர் அதெல்லாம் வேணாம்னு ஒரே வார்த்தையில் சொல்லிடுவார். இப்படிதான், படத்த கெடுக்கிற எல்லா வேலையையும் பார்ப்பேன். அதைக் கட்டுபடுத்தி, என்ன இந்தப் படத்துல நடிக்க வச்சிருக்காங்க.

ctor karthi speech in Thambi audio launch

நடிகர் ரமேஷ் திலக் பேசியதாவது,

'இந்தப் படத்தில் நடிச்சதே எனக்குப் பெருமை. கார்த்தி நடிப்பதை நேரில் பார்த்து ரசித்தேன். ஒவ்வொரு காட்சிக்கும் அவர் எடுக்கும் சிரத்தை பார்த்து பிரமித்தேன்.

பொதுவாக படங்களை விமர்சனம் செய்பவர்கள், கொஞ்சம் தரம் தாழாமல் விமர்சனம் செய்யவேண்டும் என்று வேண்டுகொள் வைக்கிறேன். ஒரு திரைப்படம் பார்த்து தற்கொலை செய்துகொண்டவர்கள் யாரும் கிடையாது. ஆனால், படம் எடுத்து தற்கொலை செய்து கொண்டவர்கள் உள்ளனர். அதை மனதில் வைத்து விமர்சனம் செய்யுங்கள்' என்றார்.

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா பேசியதாவது, ' 'உறியடி' படத்துக்கு பின்னணி இசை பண்ணினதுக்கு அப்புறம், நடிகர் சூர்யா ஒரு லேப்டாப் கிஃப்ட் கொடுத்தார். அதுதான் எனக்கு சினிமாவில கிடைச்ச முதல் கிஃப்ட். அந்த லேப்டாப்லதான் ’தம்பி' பட மியூஸிக் பணிகளை பண்ணினேன். கார்த்தி ஒரு ஜீனியஸ். மெட்ராஸ் படத்துக்கு அப்புறம் நான் அவரோட பெரிய ஃபேன்' என்று கூறினார்

படத்தின் இயக்குநர் ஜீது ஜோசப் பேசியதாவது, ' 'பாபநாசம்' என்னோட முதல் தமிழ்ப்படம். அதுக்கு அப்புறம் நல்ல கதைக்காக காத்திருந்தேன். ஜோதிகா - கார்த்தி ஆகியோர் அக்கா - தம்பியாக நடிக்க வைக்கிற ஐடியா இருக்குனு சூரஜ் சொன்னார். இதை மிஸ் பண்ணக்கூடாதுனு உடனே ஒப்புக்கொண்டேன். சத்யராஜ், சௌகார் ஜானகி இந்தப் படத்துக்கு மிகப்பெரிய பலம். குடும்பங்கள் ரசிக்கிற கமர்ஷியல் படமாக இருக்கும்' என்று கூறினார்.

Thambi movie audio launch
Intro:‘தம்பி’ தம்பி படத்தின் இசை வெளியீட்டு விழா Body:வயாகம்18 ஸ்டுடியோஸ் மற்றும் பாரலல் மைண்ட்ஸ் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள  படம் ’தம்பி’. இந்த படத்தை ‘பாபநாசம்’ படத்தை இயக்கிய இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். அக்கா தம்பி சென்டிமென்டில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜோதிகா,கார்த்தி,  சத்யராஜ், சீதா, நிகிலா விமல், இளவரசு, சௌகார் ஜானகி, அம்மு அபிராமி, ரமேஷ் திலக் ஆகியோர்நாடிர்த்துள்ளனர் .
 “தம்பி” படத்தின் இசை வெளியீடு இன்று சென்னை சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது.

விழாவில் கார்த்தி, ஜோதிகா, சூர்யா, சிவகுமார் உள்ளிட்ட படக்குழுவினர் மற்றும்
திரைபிரபலங்கள்கலந்து
கொண்டனர்.

நடிகர் ரமேஷ் திலக் பேசுகையில்,

இந்தப்படத்தில் நடிச்சதே எனக்கு பெருமை. கார்த்தி சார் நடிப்பதை நேரில் பார்த்து ரசித்தேன்.  ஒவ்வொரு காட்சிக்கும் அவர் எடுக்குற சிரத்தை என்னை பிரமிக்க வச்சது. பொதுவாக படங்களை விமர்சனம் செய்ப்பவர்கள்  கொஞ்சம் தரம் தாழாமல் விமர்சனம் செய்யவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் . படம் பார்த்து தற்கொலை செய்துகொண்டவர்கள்  யாரும் கிடையாது, ஆனால், படம் எடுத்து தற்கொலை செய்துகொண்டவர்கள் உள்ளனர். அத மனத்தில் வைத்து  விமர்சனம் செயுங்கள்.

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா  பேசுகையில் ,

உறியடி படத்துக்கு பின்ணணி இசை பண்ணினதுக்கு அப்புறம் சூர்யா சார் ஒரு லேப்டாப் கிஃப்ட் கொடுத்தார். அது தான் எனக்கு சினிமால கிடைச்ச முதல் கிஃப்ட். அந்த லேப்டாப்ல தான் தம்பி மியூஸிக் பண்ணினேன். கார்த்தி சார் ஒரு ஜீனியஸ் மெட்ராஸ் படத்துக்கு அப்புறம் நான் அவரோட பெரிய ஃபேன்.

இயக்குநர் ஜீது ஜோசப் பேசுகையில் ,

பாபநாசம் என்னோட முதல் தமிழ்ப்படம் அதுக்கப்புறம் நல்ல கதைக்காக காத்திருந்தேன் . ஜோதிகா கார்த்தி அக்கா தம்பியா நடிக்கிற ஐடியா இருக்குனு சூரஜ்  ஐடியா சொன்னார். இதை  மிஸ் பண்ணக்கூடாதுனு என்று உடனே ஒப்புக்கொண்டேன் . சத்யாராஜ், சௌகார் ஜானகி மேடம் இந்தப்படத்துக்கு மிகப்பெரிய பலம். இது ஒரு  குடும்பங்கள் ரசிக்கிற கமர்ஷியல் படம்.

சத்யராஜ்  பேசுகையில் ,

ஒரு குடும்பம் தொடர்ந்து என்ன பயமுறுத்திட்டு இருக்குனா அது சிவக்குமார் குடும்பம் தான். அவர் மாதிரி ஒரு நல்ல நடிகனா இருக்க முடியுமா என்கின்ற பயம்,  அவர் மாதிரி பிள்ளைகள் வளர்க்க முடியுமா பயம். இப்படி தொடர்ந்து பயமுறுத்திட்டுஇருக்கு இந்த குடும்பம் .  இயக்குநர் ஜீத்து ஜோசப்போட பாபநாசம் மூணு மொழில பார்த்தேன் ரசித்தேன் . அவர் இயக்கத்தில் நடிக்க  முடியுமானு நினைச்சேன் இப்பொது வ
அவர் இயக்கத்தை நடிப்பது மகிழ்ச்சி . இந்த படத்தில் எனக்கு ஒரு வித்தியாசமான பாத்திரம். சாராசரி பாத்திரம் பண்றதுல எனக்கு விருப்பம் இல்ல ஆனா இந்தப்படத்துல பாகுபலி மாதிரி ஒரு வித்தியாசமான, நடிப்புக்கு வாய்ப்புள்ள படம். நான் அதிகமா இன்வால்வாகி கொஞ்சம் ஓவரா நடிச்சுடுவேன் ஆனா இயக்குனர் அதெல்லாம் வேணாம்னு ஒரே வார்த்தையில் சொல்லிடுவார். நான் அப்படி தான் படத்த கெடுக்கிற எல்லா வேலையும் பார்ப்பேன் அதை கட்டுபடுத்தி என்ன இந்தப்படத்துல நடிக்க வச்சிருக்காங்க.

ஜோதிகா பேசுகையில்,

 தம்பி எனக்கு படம் இல்ல ஒரு செண்டிமெண்ட். என் தம்பியோட நடிக்கிற முதல் படம். கார்த்தி கூட நடிக்கிற கேரக்டர்களுக்கு சமமான இடம் கொடுப்பார் அப்படித்தான் இந்த படத்தில் எனக்கும் முக்கியத்துவம் உள்ளது . ரஜினி சார் கூட சந்திரமுகி நடிச்சப்போ முதல் நாள் அவர் வந்து இது உன்னோட படம் நல்லா பண்ணு, சந்திரமுகி பேரே உன்ன வச்சுதான்னு சொன்னார். எவ்வளவு பெரிய மனுசன்னு தோணுச்சு. அதே ஃபீல் காத்த்திகிடம்  உள்ளது. சத்யாராஜ் சார் கூட நடிச்சது மிகப்பெரிய சந்தோஷம். என் குழந்தைகள் நீங்க கட்டப்பா கூட நடிக்கிறீன்ங்கனு கேட்டாங்க.  இயக்குநர் ஜீத்து ஜோசப்  வீட்டில் இருந்து அவரோட பெண்கள் உதவி இயக்குநரா வேலை பார்த்தாங்க அவங்கள பார்க்க அவ்வளவு சந்தோஷமா இருந்தது. தம்பி எனக்கு ரொம்ப முக்கியமான படம்.

கார்த்தி பேசுகையில்,

இரண்டு வருட உழைப்பு இந்தப்படத்துக்கு பின்னாடி இருக்கு. இயக்குநர் ஏற்கனவே மோகன்லால், கமல் சார் படமெல்லாம் பண்ணிட்டு வந்திருக்கார். இயக்குனருக்கு  என்ன வேண்டும் என்பதில்  தெளிவா இருந்தார்.  அண்ணி கூட நடிச்சது எனக்கு ஸ்பெஷல். அவங்க ஒரு கேரக்டருக்கு எடுக்கிற சிரத்தை, உழைப்பு பிரமிப்பு தருது. இப்படி அண்ணி கூட ஒரு படம் நடிப்பேன்னு நான் நினைக்கவே இல்ல.  சத்யராஜ் சார் இல்லை என்றால்  இந்தப்படமே வேண்டாம் என்று  சொன்னேன்.  அவ்வளவு முக்கியமான கேரகடர். இளவரசு, ரமேஷ் திலக் ரெண்டு பேரையும் நீங்க ரசிப்பீங்க.  கைதிக்கு அப்புறம் இந்தப்படம் வர்றது எனக்கு சந்தோஷம். குடும்பத்தோட எல்லாரும் ரசிக்கிற மாதிரியான படம். கைதி 2ஆம் பக்கம் விரைவில் வெளிவரும்


சூர்யா பேசுகையில்,

ரொம்ப நெருக்கமான படைப்பு. சத்யராஜ் மாமா, ஜோ, கார்த்தி, சூரஜ் எல்லாரும் இணைஞ்சிருக்க படம். ஒரு சின்ன கரு இவ்வளவு பெரிய படமா மாறியிருக்கிறது கார்த்தி ஜோ இரண்டு பேருமே சிறந்த  நடிகர்கள். கிளிசரின் போடமா என்னால அழவே முடியாது “நந்தா” படத்தில மட்டும் தான் என்னால அப்படி நடிக்க முடிஞ்சது . ஆனா கார்த்தி கிளிசரின் போடாம அத அநாயசமா பண்ணிடுறாரு. கைதி வரைக்குமே அத நான் பார்த்துட்டு இருக்கேன் ரொம்ப ஈஸியா பண்ணிடுறார். ஜீத்து ஜோசப் பாகுபலி அளவிற்கு  இணையா பாபநாசம் படத்தை இந்தியா முழுக்க கொண்டு போனவர். அவர் இந்தப்படம் இயக்கியது  சந்தோஷம்.Conclusion:  இறுதியாக ரசிகர்களுக்கு உறவுகளுக்கு நாம்  எவ்வளவு அவசரம் இருந்தாலும் அதிகாலை பயணம் செய்வதை தவிர்த்துடுங்க, 3 மணி, 4 மணிக்கு பயணம் செய்வதால் சில தவறான சம்பவங்கள் நடந்து விடுகிறது. நாம நினவுகள் இல்லாம நம்ம கட்டுப்பாடு மீறி சில விசயங்கள்நடந்து விடுகிறது . ஆகவே தயவு செய்து அதிகாலை பயணத்தை தவிர்த்துவிடுங்கள் 
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.