ETV Bharat / sitara

'கோலி சோடா' பட இயக்குநருடன் கைகோர்த்த விஜய் ஆண்டனி - vijay antony'

'கொலைகாரன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் விஜய் மில்டன் இயக்கும் புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

விஜய் ஆண்டனி
author img

By

Published : Jun 17, 2019, 10:44 AM IST

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்துள்ள 'கொலைகாரன்' திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று, வசூல் ரீதியாக அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. 'பிச்சைக்காரன்' படத்தின் வெற்றிக்கு பிறகு இந்தப் படத்தின் வெற்றிதான் அவரை தலை நிமிர வைத்துள்ளது. தொடர் தோல்வி படங்களை கொடுத்துவந்த விஜய் ஆண்டனிக்கு 'கொலைகாரன்' திரைப்படம் நிலையான வெற்றியைப் பெற்று மனநிறைவை தந்துள்ளது என்றே கூறலாம்.

இந்நிலையில், 'கொலைகாரன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் சார்பில் லலிதா தனஞ்செயன், எஸ்.விக்ரம் குமார், பி.பிரதீப் குமார், கமல் போரா ஆகியோர் தயாரிக்க இருக்கின்றனர். கூட்டு தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை கோலி சோடா பட இயக்குநர் விஜய் மில்டன் இயக்குகிறார்.

தற்போது, ​​இந்தப் படத்தில் நடிக்க நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடந்துவருகின்றன. அக்டோபர் மாதம் முதல் கோவா, டையூ, டாமன் ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்துள்ள 'கொலைகாரன்' திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று, வசூல் ரீதியாக அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. 'பிச்சைக்காரன்' படத்தின் வெற்றிக்கு பிறகு இந்தப் படத்தின் வெற்றிதான் அவரை தலை நிமிர வைத்துள்ளது. தொடர் தோல்வி படங்களை கொடுத்துவந்த விஜய் ஆண்டனிக்கு 'கொலைகாரன்' திரைப்படம் நிலையான வெற்றியைப் பெற்று மனநிறைவை தந்துள்ளது என்றே கூறலாம்.

இந்நிலையில், 'கொலைகாரன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் சார்பில் லலிதா தனஞ்செயன், எஸ்.விக்ரம் குமார், பி.பிரதீப் குமார், கமல் போரா ஆகியோர் தயாரிக்க இருக்கின்றனர். கூட்டு தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை கோலி சோடா பட இயக்குநர் விஜய் மில்டன் இயக்குகிறார்.

தற்போது, ​​இந்தப் படத்தில் நடிக்க நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடந்துவருகின்றன. அக்டோபர் மாதம் முதல் கோவா, டையூ, டாமன் ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படம்.

“கொலைகாரன்” திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களையும், பாக்ஸ் ஆபிஸ் வெற்றியும் பெற்றிருக்கிறது.  இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து  போஃப்டா மீடியா ஒர்க்ஸ் மற்றும் தியா மூவீஸ் உடன் இணைந்து "இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ்" என்ற நிறுவனத்தின் கீழ் புதிய படம் ஒன்றை  லலிதா தனஞ்செயன், எஸ்.விக்ரம் குமார், பி.பிரதீப் குமார் மற்றும் கமல் போரா ஆகியோர் இந்த படத்தை தயாரிக்கிறார்கள்.

கூட்டு தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை  இயக்குனர் விஜய் மில்டன் இயக்குகிறார் இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார்.

தற்போது, ​​இந்த படத்தில் நடிக்க  நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன. அக்டோபர் மதம் முதல் கோவா, டையூ மற்றும் டாமன் ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க  திட்டமிட்டுள்ளனர்.







ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.