ETV Bharat / sitara

புது வீட்டில் குடியேறிய இயக்குநர் மாரி செல்வராஜ்!

author img

By

Published : Feb 23, 2022, 4:48 PM IST

Updated : Feb 23, 2022, 4:54 PM IST

சென்னையில் தான் புதிதாக கட்டியுள்ள வீட்டிற்கு குடியேறிய மாரி செல்வராஜூக்கு, பல்வேறு திரைப்பிரபலங்களும் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

புது வீட்டில் குடியேறிய இயக்குநர் மாரி செல்வராஜ்!
புது வீட்டில் குடியேறிய இயக்குநர் மாரி செல்வராஜ்!

'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் மாரி செல்வராஜ். இவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்குநர் ராமிடம், உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். தனது இரு திரைப்படங்களிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையை கொண்டு சேர்த்ததன் மூலம் இவருக்கென ரசிகர் பட்டாளம் பெருகியது.

இவர் சமீபத்தில் சென்னையில் கட்டியுள்ள புதிய வீட்டுக்கு தனது குடும்பத்தோடு குடியேறினார். மாரிசெல்வராஜின் குருநாதர் ராமின் ஆசிர்வாதத்துடன் புதுமனை புகுவிழா நடைபெற்றுள்ளது. இதனையடுத்து இயக்குநர் பா.இரஞ்சித், தயாரிப்பாளர் தாணு, சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர், மாரி செல்வராஜை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

மாரி செல்வராஜ் இயக்கும் மூன்றாவது திரைப்படத்தில் உதயநிதியே தயாரித்து, நாயகனாக நடித்து வருகிறார். துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை முடித்துவிட்டு, உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தை இயக்க ஒப்பந்தமானார் மாரி செல்வராஜ். பின்னர் இதில் மாற்றம் ஏற்பட்டு துருவ் விக்ரம் படத்துக்கு முன்பாகவே, உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை இயக்குகிறார் மாரி செல்வராஜ்.

மாரி செல்வராஜை சந்தித்த உதயநிதி
மாரி செல்வராஜை சந்தித்த உதயநிதி

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்றன. 'ஆர்டிகிள் 15' தமிழ் ரீமேக் படப்பிடிப்பைத் தொடர்ந்து, மாரி செல்வராஜின் படத்தில் உதயநிதி நடிக்கிறார்.

மாரி செல்வராஜை சந்தித்த பா. ரஞ்சித்
மாரி செல்வராஜை சந்தித்த பா. ரஞ்சித்

இதையும் படிங்க: ஆர்.கே. சுரேஷ் இப்போதுதான் உருப்படியான ஒரு படத்தை நடித்துள்ளார் - பாலா

'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் மாரி செல்வராஜ். இவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்குநர் ராமிடம், உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். தனது இரு திரைப்படங்களிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையை கொண்டு சேர்த்ததன் மூலம் இவருக்கென ரசிகர் பட்டாளம் பெருகியது.

இவர் சமீபத்தில் சென்னையில் கட்டியுள்ள புதிய வீட்டுக்கு தனது குடும்பத்தோடு குடியேறினார். மாரிசெல்வராஜின் குருநாதர் ராமின் ஆசிர்வாதத்துடன் புதுமனை புகுவிழா நடைபெற்றுள்ளது. இதனையடுத்து இயக்குநர் பா.இரஞ்சித், தயாரிப்பாளர் தாணு, சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர், மாரி செல்வராஜை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

மாரி செல்வராஜ் இயக்கும் மூன்றாவது திரைப்படத்தில் உதயநிதியே தயாரித்து, நாயகனாக நடித்து வருகிறார். துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை முடித்துவிட்டு, உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தை இயக்க ஒப்பந்தமானார் மாரி செல்வராஜ். பின்னர் இதில் மாற்றம் ஏற்பட்டு துருவ் விக்ரம் படத்துக்கு முன்பாகவே, உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை இயக்குகிறார் மாரி செல்வராஜ்.

மாரி செல்வராஜை சந்தித்த உதயநிதி
மாரி செல்வராஜை சந்தித்த உதயநிதி

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்றன. 'ஆர்டிகிள் 15' தமிழ் ரீமேக் படப்பிடிப்பைத் தொடர்ந்து, மாரி செல்வராஜின் படத்தில் உதயநிதி நடிக்கிறார்.

மாரி செல்வராஜை சந்தித்த பா. ரஞ்சித்
மாரி செல்வராஜை சந்தித்த பா. ரஞ்சித்

இதையும் படிங்க: ஆர்.கே. சுரேஷ் இப்போதுதான் உருப்படியான ஒரு படத்தை நடித்துள்ளார் - பாலா

Last Updated : Feb 23, 2022, 4:54 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.