ETV Bharat / sitara

தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இயக்குநர் பாரதிராஜா தேர்வு

author img

By

Published : Aug 29, 2020, 10:55 PM IST

சென்னை: தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இயக்குநர் பாரதிராஜா தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

பாரதிராஜா
பாரதிராஜா

ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்கம் தொடங்கப்பட்டுள்ளதாக இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் 50-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளதாக நேற்று (ஆகஸ்ட் 28) வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் டி சிவா, ஜி தனஞ்ஜெயன் ஆகியோரது அழைப்பின்பேரில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நடக்கவிருக்கும் தேர்தல் குறித்து விவாதிக்க நேற்று ஜூம் மீட்டிங் நடைபெற்றது.

இந்நிலையில் தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் அலுவலர்
விஜயகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:

பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியவுடன் TFAPA-வின் விதிகளின்படி 2020 முதல் 2022 வரையிலான நிர்வாகக்குழு, நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென உறுப்பினர்களிடன் நான் கூறினேன்.

விதி 28இன்படி ஆன்லைன் வழி நடக்கும் கூட்டங்களும் நிகழ்வுகளும் அதிகாரப்பூர்வமானவையே என்றும் தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் ‘ஜூம்’ கூட்டமும் அத்தகைய ஒன்றே என்பதால் தேர்தல் நடத்தும் அதிகாரமும் அதற்கு உண்டு. வேறு உறுப்பினர்களுக்குக் காட்டுவதற்காகவும் சென்னையில் உள்ள சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் சட்டரீதியான ஃபைலிங்குகள் (Filing) செய்வதற்கும் இந்தப் பதிவு பேருதவியாக இருக்கும்.

விதி 1(E)-யின்படி பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள தேவைப்படும் தகுதி அனைவருக்கும் உள்ளதாகவும் அவ்வாறு தகுதியுள்ள உறுப்பினர்கள் மட்டுமே பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைக்கப்பட்டுள்ளதாகவும் நான் உறுப்பினர்களிடம் தெரிவித்தேன்.

நமது ஆவணங்களின்படி இதுவரை பதிவுசெய்துள்ள 50 முதன்மை (PRIMARY) உறுப்பினர்கள் மட்டும் அழைக்கப்பட்டனர். இதை விதி 1(e)-உடன் சேர்த்துப் பார்க்கையில், கூட்டங்கள் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையும் முதன்மை உறுப்பினர்களுக்கு உண்டு.

விதி 43இல் கூறியுள்ளபடி குறைந்தது 25 விழுக்காடு முதன்மை உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் கூட்டமே அதிகாரப்பூர்வமானது என்பதையும் உறுப்பினர்கள் எண்ணிக்கை 38-ஐத் தாண்டிவிட்டதால் (இதுவரை இணைந்துள்ள 50 உறுப்பினர்களில் 25 விழுக்காட்டிற்கும் மேல்) தேர்தலுக்கான நடவடிக்கைகளைத் தொடங்கலாம் என்றும் உறுப்பினர்களிடம் நான் கூறினேன்.

விதி 14-இன்படி பொதுக்குழு வாக்களித்து 7 நிர்வாகிகள் அடங்கிய ஒரு ஆட்சிமன்றக் குழுவையும் (பிரிவுகள் பற்றிய விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன) 12 உறுப்பினர்கள் அடங்கிய நிர்வாக / பொதுக்குழுவையும் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டேன்.

பிரிவு வாரியான அலுவலக நிர்வாகிகளின் விவரம் பின்வருமாறு:

அ) ​தலைவர் – 1

ஆ)​ பொதுச்செயலாளர் – 1

இ)​ துணைத்தலைவர்கள் - 2

ஈ)​ பொருளாளர் - 1

உ)​ இணைச்செயலாளர்கள் – 2

சங்கத்தைத் தோற்றுவித்து உறுப்பினர்களாகத் தொடரும் பாரதிராஜா, T.G. தியாகராஜன், T. சிவா, G. தனஞ்ஜெயன், S.R. பிரபு, த S.S. லலித்குமார், சுரேஷ் காமாட்சி ஆகியோர் கீழுள்ள ஒவ்வொரு நிர்வாகிப் பதவிகளுக்கும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதை அனைத்து உறுப்பினர்களிடமும் தெரிவித்தேன்.

விதி 15-இல் குறிப்பிடப்பட்டுள்ள போட்டியிடும் தகுதியை சரிபார்த்து, போட்டியாளர்களின் விண்ணப்பங்கள் சரியானவை என்று உறுதிசெய்து கொண்டதும், பின்வரும் பதவிகளுக்காகப் போட்டியிடுவோரின் விவரங்களை நான் அறிவித்தேன்.

​தலைவர் – P. பாரதிராஜா

பொதுச்செயலாளர் - T. சிவா

துணைத் தலைவர்கள் - G. தனஞ்செயன், S.R. பிரபு

பொருளாளர் - T.G. தியாகராஜன்

இணைச் செயலாளர்கள் – S.S. லலித்குமார், சுரேஷ் காமாட்சி

இவர்கள் உறுப்பினர்கள் அனைவரால் ஏகமனதாகத் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அனைவரும் இரண்டாண்டுகளுக்கு (29.8.2020 முதல் 28.8.2022 வரை) அந்தந்தப் பதவிகளுக்குப் போட்டியின்றித் தேர்வாகிவிட்டதாக ஏகமனதாக நான் அறிவித்தேன். பொதுக்குழுவும் இதற்குத் தன் ஒப்புதலை அளித்தது.

பொதுக்குழுக்கூட்ட உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட 12 பேர் மட்டும் தெரிவித்தனர்.

போட்டியிட முன்வந்தவர்கள் 12 பேர் மட்டுமே என்பதாலும் குறிப்பிட்ட எண்ணிக்கையை மீறி யாரும் போட்டியிட முன்வரவில்லை என்பதாலும் 2020 முதல் 2022 வரை TFAPA-வின் பொதுக்குழுவுக்கு 12 பேரும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர்.

என்ற முடிவை நான் அறிவித்தேன். இதைப் நிர்வாகக் குழுவும் ஒப்புக்கொண்டது.

தேர்தல் பணியானது மேலே கூறியவாறு முழுமையாகவும் திருப்தியாகவும் செய்துமுடிக்கப்பட்டு எனது தேர்தல் பணியை நான் முடித்துவிட்டதால் இதற்குப் பின் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளும் பொதுக்குழுவும் வேலையைக் கவனிப்பர் என்ற நம்பிக்கையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு என் வாழ்த்துகளைக் கூறிவிட்டு, TFAPA-வின் விதிகளின்படி நிர்வாகக் குழு கூட்டத்திலிருந்து நான் வெளியேறினேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்கம் தொடங்கப்பட்டுள்ளதாக இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் 50-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளதாக நேற்று (ஆகஸ்ட் 28) வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் டி சிவா, ஜி தனஞ்ஜெயன் ஆகியோரது அழைப்பின்பேரில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நடக்கவிருக்கும் தேர்தல் குறித்து விவாதிக்க நேற்று ஜூம் மீட்டிங் நடைபெற்றது.

இந்நிலையில் தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் அலுவலர்
விஜயகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:

பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியவுடன் TFAPA-வின் விதிகளின்படி 2020 முதல் 2022 வரையிலான நிர்வாகக்குழு, நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென உறுப்பினர்களிடன் நான் கூறினேன்.

விதி 28இன்படி ஆன்லைன் வழி நடக்கும் கூட்டங்களும் நிகழ்வுகளும் அதிகாரப்பூர்வமானவையே என்றும் தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் ‘ஜூம்’ கூட்டமும் அத்தகைய ஒன்றே என்பதால் தேர்தல் நடத்தும் அதிகாரமும் அதற்கு உண்டு. வேறு உறுப்பினர்களுக்குக் காட்டுவதற்காகவும் சென்னையில் உள்ள சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் சட்டரீதியான ஃபைலிங்குகள் (Filing) செய்வதற்கும் இந்தப் பதிவு பேருதவியாக இருக்கும்.

விதி 1(E)-யின்படி பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள தேவைப்படும் தகுதி அனைவருக்கும் உள்ளதாகவும் அவ்வாறு தகுதியுள்ள உறுப்பினர்கள் மட்டுமே பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைக்கப்பட்டுள்ளதாகவும் நான் உறுப்பினர்களிடம் தெரிவித்தேன்.

நமது ஆவணங்களின்படி இதுவரை பதிவுசெய்துள்ள 50 முதன்மை (PRIMARY) உறுப்பினர்கள் மட்டும் அழைக்கப்பட்டனர். இதை விதி 1(e)-உடன் சேர்த்துப் பார்க்கையில், கூட்டங்கள் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையும் முதன்மை உறுப்பினர்களுக்கு உண்டு.

விதி 43இல் கூறியுள்ளபடி குறைந்தது 25 விழுக்காடு முதன்மை உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் கூட்டமே அதிகாரப்பூர்வமானது என்பதையும் உறுப்பினர்கள் எண்ணிக்கை 38-ஐத் தாண்டிவிட்டதால் (இதுவரை இணைந்துள்ள 50 உறுப்பினர்களில் 25 விழுக்காட்டிற்கும் மேல்) தேர்தலுக்கான நடவடிக்கைகளைத் தொடங்கலாம் என்றும் உறுப்பினர்களிடம் நான் கூறினேன்.

விதி 14-இன்படி பொதுக்குழு வாக்களித்து 7 நிர்வாகிகள் அடங்கிய ஒரு ஆட்சிமன்றக் குழுவையும் (பிரிவுகள் பற்றிய விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன) 12 உறுப்பினர்கள் அடங்கிய நிர்வாக / பொதுக்குழுவையும் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டேன்.

பிரிவு வாரியான அலுவலக நிர்வாகிகளின் விவரம் பின்வருமாறு:

அ) ​தலைவர் – 1

ஆ)​ பொதுச்செயலாளர் – 1

இ)​ துணைத்தலைவர்கள் - 2

ஈ)​ பொருளாளர் - 1

உ)​ இணைச்செயலாளர்கள் – 2

சங்கத்தைத் தோற்றுவித்து உறுப்பினர்களாகத் தொடரும் பாரதிராஜா, T.G. தியாகராஜன், T. சிவா, G. தனஞ்ஜெயன், S.R. பிரபு, த S.S. லலித்குமார், சுரேஷ் காமாட்சி ஆகியோர் கீழுள்ள ஒவ்வொரு நிர்வாகிப் பதவிகளுக்கும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதை அனைத்து உறுப்பினர்களிடமும் தெரிவித்தேன்.

விதி 15-இல் குறிப்பிடப்பட்டுள்ள போட்டியிடும் தகுதியை சரிபார்த்து, போட்டியாளர்களின் விண்ணப்பங்கள் சரியானவை என்று உறுதிசெய்து கொண்டதும், பின்வரும் பதவிகளுக்காகப் போட்டியிடுவோரின் விவரங்களை நான் அறிவித்தேன்.

​தலைவர் – P. பாரதிராஜா

பொதுச்செயலாளர் - T. சிவா

துணைத் தலைவர்கள் - G. தனஞ்செயன், S.R. பிரபு

பொருளாளர் - T.G. தியாகராஜன்

இணைச் செயலாளர்கள் – S.S. லலித்குமார், சுரேஷ் காமாட்சி

இவர்கள் உறுப்பினர்கள் அனைவரால் ஏகமனதாகத் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அனைவரும் இரண்டாண்டுகளுக்கு (29.8.2020 முதல் 28.8.2022 வரை) அந்தந்தப் பதவிகளுக்குப் போட்டியின்றித் தேர்வாகிவிட்டதாக ஏகமனதாக நான் அறிவித்தேன். பொதுக்குழுவும் இதற்குத் தன் ஒப்புதலை அளித்தது.

பொதுக்குழுக்கூட்ட உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட 12 பேர் மட்டும் தெரிவித்தனர்.

போட்டியிட முன்வந்தவர்கள் 12 பேர் மட்டுமே என்பதாலும் குறிப்பிட்ட எண்ணிக்கையை மீறி யாரும் போட்டியிட முன்வரவில்லை என்பதாலும் 2020 முதல் 2022 வரை TFAPA-வின் பொதுக்குழுவுக்கு 12 பேரும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர்.

என்ற முடிவை நான் அறிவித்தேன். இதைப் நிர்வாகக் குழுவும் ஒப்புக்கொண்டது.

தேர்தல் பணியானது மேலே கூறியவாறு முழுமையாகவும் திருப்தியாகவும் செய்துமுடிக்கப்பட்டு எனது தேர்தல் பணியை நான் முடித்துவிட்டதால் இதற்குப் பின் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளும் பொதுக்குழுவும் வேலையைக் கவனிப்பர் என்ற நம்பிக்கையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு என் வாழ்த்துகளைக் கூறிவிட்டு, TFAPA-வின் விதிகளின்படி நிர்வாகக் குழு கூட்டத்திலிருந்து நான் வெளியேறினேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.