ETV Bharat / sitara

'அந்த மாடர்ன் பொண்ணுக்கு, அப்படி ஒரு பரந்த மனசு' - உதவிக்கரம் நீட்டும் பர்த்டே பேபி தர்ஷுமா

இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் 'குக் வித் கோமாளி' பிரபலம் தர்ஷா குப்தா, கரோனா பேரிடரில் அயராது உழைத்துவரும் முன்களப்பணியாளர்களான காவல் துறையினரின் தாகம் போக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது பலரது பாராட்டையும் பெற்றுவருகிறது.

author img

By

Published : Jun 7, 2021, 12:14 PM IST

Updated : Jun 7, 2021, 12:34 PM IST

காவலர்களுக்கு உதவும் தர்ஷா குப்தா.
காவலர்களுக்கு உதவும் தர்ஷா குப்தா.

தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் கரோனா தொற்றுப் பரவலால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பலரும் சாப்பாட்டுக்கே வழியின்றி தவித்துவருகின்றனர். வறுமைக் கோட்டுக்கு கீழ், உள்ளவர்களின் பசிப்பிணியைப் போக்கும் வகையில் பல சின்னத்திரை, வெள்ளித்திரையைச் சேர்ந்த பிரபலங்களும் உதவி செய்துவருகின்றனர்.

அந்த வகையில் சில தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா, வறுமையில் வாடுவோருக்கு உதவி வருகிறார். உதவிக்கரம் நீட்டும் தர்ஷாவுக்கு இன்று (ஜுன்.7) பிறந்த நாள் என்பது கூடுதல் சிறப்பு.

காவலர்களுக்கு உதவும் தர்ஷா குப்தா.
காவலர்களுக்கு உதவும் தர்ஷா குப்தா

அதன்படி கரோனா பேரிடர் சமயத்தில் தங்களது உயிரைத் துச்சமெனக் கருதி பணியாற்றி வரும் காவல் துறையினரின், தாகம் தணிக்கும் பொருட்டு குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில்களை காவலர்களுக்கு வழங்கி வானளாவ உயர்ந்துள்ளார், தர்ஷா குப்தா.

அதுமட்டுமல்லாமல் பசியால் வாடும் ஆதரவற்றோர்களையும் தேடிச் சென்று உணவு வழங்கிவருகிறார். அதன்படி தான் உதவியோரின் புகைப்படங்களையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அதில், "பசியோடு இருப்பவர்களுக்கு உணவு கொடுத்துப் பாருங்கள். நீங்கள் இறந்தபின் காணும் சொர்க்கத்தை ஒரு நொடிப் பொழுதில் காணமுடியும்" எனவும் தெரிவித்துள்ளார். தர்ஷாவின் பிறந்தநாளான இன்று வாழ்த்துகளுடன் சேர்ந்து, அவரது நற்செயலுக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன் #HBDDHARSHAGUPTA என்ற ஹேஷ்டேக்கையும் அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

இதையும் படிங்க : திடீரென மருத்துவமனைக்குச் சென்ற ஜான்வி கபூர்: ஏன் தெரியுமா?

தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் கரோனா தொற்றுப் பரவலால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பலரும் சாப்பாட்டுக்கே வழியின்றி தவித்துவருகின்றனர். வறுமைக் கோட்டுக்கு கீழ், உள்ளவர்களின் பசிப்பிணியைப் போக்கும் வகையில் பல சின்னத்திரை, வெள்ளித்திரையைச் சேர்ந்த பிரபலங்களும் உதவி செய்துவருகின்றனர்.

அந்த வகையில் சில தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா, வறுமையில் வாடுவோருக்கு உதவி வருகிறார். உதவிக்கரம் நீட்டும் தர்ஷாவுக்கு இன்று (ஜுன்.7) பிறந்த நாள் என்பது கூடுதல் சிறப்பு.

காவலர்களுக்கு உதவும் தர்ஷா குப்தா.
காவலர்களுக்கு உதவும் தர்ஷா குப்தா

அதன்படி கரோனா பேரிடர் சமயத்தில் தங்களது உயிரைத் துச்சமெனக் கருதி பணியாற்றி வரும் காவல் துறையினரின், தாகம் தணிக்கும் பொருட்டு குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில்களை காவலர்களுக்கு வழங்கி வானளாவ உயர்ந்துள்ளார், தர்ஷா குப்தா.

அதுமட்டுமல்லாமல் பசியால் வாடும் ஆதரவற்றோர்களையும் தேடிச் சென்று உணவு வழங்கிவருகிறார். அதன்படி தான் உதவியோரின் புகைப்படங்களையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அதில், "பசியோடு இருப்பவர்களுக்கு உணவு கொடுத்துப் பாருங்கள். நீங்கள் இறந்தபின் காணும் சொர்க்கத்தை ஒரு நொடிப் பொழுதில் காணமுடியும்" எனவும் தெரிவித்துள்ளார். தர்ஷாவின் பிறந்தநாளான இன்று வாழ்த்துகளுடன் சேர்ந்து, அவரது நற்செயலுக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன் #HBDDHARSHAGUPTA என்ற ஹேஷ்டேக்கையும் அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

இதையும் படிங்க : திடீரென மருத்துவமனைக்குச் சென்ற ஜான்வி கபூர்: ஏன் தெரியுமா?

Last Updated : Jun 7, 2021, 12:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.