ETV Bharat / sitara

நடிகர் அருண்பாண்டியன் குடும்பத்தினர் சந்தித்த சவால்கள்: கீர்த்தி பாண்டியன் உருக்கம்!

author img

By

Published : May 9, 2021, 1:34 PM IST

சென்னை: நடிகர் அருண் பாண்டியனுக்கு இதயத்தில் அடைப்பு காரணமாக நடந்த அறுவை சிகிச்சை குறித்தும், அதற்கு முன் அவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது குறித்தும் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் இன்ஸ்டாகிராமில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Arun Pandian
Arun Pandian

நடிகர் அருண் பாண்டியன் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் இணைந்து 'ஹெலன்' என்னும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கான 'அன்பிற்கினியாள்' படத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் நடிகர் அருண் பாண்டியனுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது குறித்தும் அதைத் தொடர்ந்து அவருக்கு நடந்த இருதய அறுவை சிகிச்சை குறித்தும் கீர்த்தி பாண்டியன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் உருக்காமான கடிதம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், " கரோனா இரண்டாவது அலையைச் சுற்றியிருக்கும் அத்தனை குழப்பங்களுக்கும் நடுவில் ஒரு நாள் இரவில் அப்பா லேசான நெஞ்சுவலி, தூங்க முடியவில்லை என்று சொன்னார். அவரை அவசர சிகிச்சைக்காக மருத்துமனைக்கு அழைத்துச் சென்றோம். எல்லாம் சரியாக இருந்தது. மருத்துவர் அன்றிரவு மருத்துவமனையில் தங்கிவிட்டு செல்ல வேண்டும் என்றார். அடுத்த நாள் அப்பாவுக்கு கரோனா தொற்று உறுதியானது.

திருநெல்வேலியில் வீட்டுத் தனிமையில் அவரை வைக்க முடிவு செய்தோம். முதல் ஏழு நாட்கள் அங்கேயே மருத்துவ உதவி கிடைக்கும் படி ஏற்பாடு செய்தோம். அந்த 15 நாட்கள் எங்களை அதிகம் பயமுறுத்தியது. ஏனென்றால் அப்பாவுக்கு சர்க்கரை வியாதி உள்ளது. முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டதால் அவருக்கு கரோனா தொற்று தீவிரமாகப் பரவில்லை என்று நினைக்கிறேன்.

நெஞ்சுவலிப் பிரச்சினையைக் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று அப்பா உறுதியாக இருந்தார். கரோனா தொற்று நீங்குவதற்கு காத்திருந்தார். தொற்று இல்லை என்று தெரிந்து ஏழு நாட்களுக்குப் பிறகு மதுரை மீனாக்ஷி மிஷன் மருத்துவமனைக்கு முழு இதய பரிசோதனை செய்து கொள்ள அப்பா சென்றார். ஆஞ்ஜியோகிராம் சோதனையில் அப்பாவுக்கு இதயத்தில் பல அடைப்புகள் இருப்பதும் அதில் இரண்டு அடைப்புகள் 90 விழுக்காடு தீவிரமடைந்தால் உடனடி சிகிச்சை தேவை என்பதும் தெரிய வந்தது. நாங்கள் சரியான நேரத்துக்கு வந்தாக மருத்துவர்கள் கூறினார்கள்.

அவசரத்தின் அடிப்படையில், அடுத்த நாளே அப்பாவுக்கு ஆஞ்ஜியோ ப்ளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டது. கரோனாவிலிருந்து அப்போது தான் மீண்டிருந்தாலும் அப்பா சிகிச்சை செய்யது கொள்ளத் தயாராக வலிமையுடன் இருந்தார். 2.5 மணி நேர சிகிச்சை முடிந்த பின் அப்பாவை சந்தித்தோம். அதிக வலியில் இருந்தாலும் நலமாக இருந்தார். இந்த தொற்று காலத்தில் கூடுதலாக இந்த விஷயமும் சேர்ந்துக்கொண்டது. எங்களுக்கு அதிக மனச் சோர்வைத் தந்தது. முன்னெச்சரிக்கையாக நாங்கள் அனைவரும் அப்பாவைச் சுற்றி இருக்க முடியாத சூழல். அவரோடு பக்கத்தில் இருக்க வேண்டிய நேரத்தில் தகுந்த இடைவெளியை பின்பற்றினோம்.

இப்போது என் சூப்பர்ஹீரோ அப்பா நலமாக இருக்கிறார். நன்றாக தேறி வருகிறார். கடந்த மாதம் எங்கள் குடும்பத்துக்கு கடினமாக இருந்தது. ஆனால் நேர்மறையாக இருந்ததே எங்களை தொடர்ந்து முன் செல்ல வைத்தது. குறிப்பாக அப்பா மனரீதியாக உறுதியுடன் இருந்தார். தன் உடலில் ஏதோ சரியில்லை என்பதை அவரால் சரியாக கணிக்க முடிந்தது.

நமது குடும்பத்தில் இருக்கும் பெரியவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு அடிக்கடி உடல் பரிசோதனை செய்து கொள்வது மிக முக்கியம். அறிகுறிகள் தென்படும் போது அதைப் புரிந்துகொள்வதும் முக்கியம். சிறிய அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள். சரியான நேரத்தில் சிகிச்சை என்பது மிக முக்கியம். தயவு செய்து கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். முகக் கவசம் அணியுங்கள் பாதுகாப்பாக இருங்கள்" என்று கீர்த்தி பாண்டியன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், " சித்தப்பா இரும்பு மனிதர். அவருக்கு ஒன்றும் ஆகாது" என பதிவிட்டுள்ளார்.

நடிகர் அருண் பாண்டியன் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் இணைந்து 'ஹெலன்' என்னும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கான 'அன்பிற்கினியாள்' படத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் நடிகர் அருண் பாண்டியனுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது குறித்தும் அதைத் தொடர்ந்து அவருக்கு நடந்த இருதய அறுவை சிகிச்சை குறித்தும் கீர்த்தி பாண்டியன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் உருக்காமான கடிதம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், " கரோனா இரண்டாவது அலையைச் சுற்றியிருக்கும் அத்தனை குழப்பங்களுக்கும் நடுவில் ஒரு நாள் இரவில் அப்பா லேசான நெஞ்சுவலி, தூங்க முடியவில்லை என்று சொன்னார். அவரை அவசர சிகிச்சைக்காக மருத்துமனைக்கு அழைத்துச் சென்றோம். எல்லாம் சரியாக இருந்தது. மருத்துவர் அன்றிரவு மருத்துவமனையில் தங்கிவிட்டு செல்ல வேண்டும் என்றார். அடுத்த நாள் அப்பாவுக்கு கரோனா தொற்று உறுதியானது.

திருநெல்வேலியில் வீட்டுத் தனிமையில் அவரை வைக்க முடிவு செய்தோம். முதல் ஏழு நாட்கள் அங்கேயே மருத்துவ உதவி கிடைக்கும் படி ஏற்பாடு செய்தோம். அந்த 15 நாட்கள் எங்களை அதிகம் பயமுறுத்தியது. ஏனென்றால் அப்பாவுக்கு சர்க்கரை வியாதி உள்ளது. முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டதால் அவருக்கு கரோனா தொற்று தீவிரமாகப் பரவில்லை என்று நினைக்கிறேன்.

நெஞ்சுவலிப் பிரச்சினையைக் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று அப்பா உறுதியாக இருந்தார். கரோனா தொற்று நீங்குவதற்கு காத்திருந்தார். தொற்று இல்லை என்று தெரிந்து ஏழு நாட்களுக்குப் பிறகு மதுரை மீனாக்ஷி மிஷன் மருத்துவமனைக்கு முழு இதய பரிசோதனை செய்து கொள்ள அப்பா சென்றார். ஆஞ்ஜியோகிராம் சோதனையில் அப்பாவுக்கு இதயத்தில் பல அடைப்புகள் இருப்பதும் அதில் இரண்டு அடைப்புகள் 90 விழுக்காடு தீவிரமடைந்தால் உடனடி சிகிச்சை தேவை என்பதும் தெரிய வந்தது. நாங்கள் சரியான நேரத்துக்கு வந்தாக மருத்துவர்கள் கூறினார்கள்.

அவசரத்தின் அடிப்படையில், அடுத்த நாளே அப்பாவுக்கு ஆஞ்ஜியோ ப்ளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டது. கரோனாவிலிருந்து அப்போது தான் மீண்டிருந்தாலும் அப்பா சிகிச்சை செய்யது கொள்ளத் தயாராக வலிமையுடன் இருந்தார். 2.5 மணி நேர சிகிச்சை முடிந்த பின் அப்பாவை சந்தித்தோம். அதிக வலியில் இருந்தாலும் நலமாக இருந்தார். இந்த தொற்று காலத்தில் கூடுதலாக இந்த விஷயமும் சேர்ந்துக்கொண்டது. எங்களுக்கு அதிக மனச் சோர்வைத் தந்தது. முன்னெச்சரிக்கையாக நாங்கள் அனைவரும் அப்பாவைச் சுற்றி இருக்க முடியாத சூழல். அவரோடு பக்கத்தில் இருக்க வேண்டிய நேரத்தில் தகுந்த இடைவெளியை பின்பற்றினோம்.

இப்போது என் சூப்பர்ஹீரோ அப்பா நலமாக இருக்கிறார். நன்றாக தேறி வருகிறார். கடந்த மாதம் எங்கள் குடும்பத்துக்கு கடினமாக இருந்தது. ஆனால் நேர்மறையாக இருந்ததே எங்களை தொடர்ந்து முன் செல்ல வைத்தது. குறிப்பாக அப்பா மனரீதியாக உறுதியுடன் இருந்தார். தன் உடலில் ஏதோ சரியில்லை என்பதை அவரால் சரியாக கணிக்க முடிந்தது.

நமது குடும்பத்தில் இருக்கும் பெரியவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு அடிக்கடி உடல் பரிசோதனை செய்து கொள்வது மிக முக்கியம். அறிகுறிகள் தென்படும் போது அதைப் புரிந்துகொள்வதும் முக்கியம். சிறிய அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள். சரியான நேரத்தில் சிகிச்சை என்பது மிக முக்கியம். தயவு செய்து கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். முகக் கவசம் அணியுங்கள் பாதுகாப்பாக இருங்கள்" என்று கீர்த்தி பாண்டியன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், " சித்தப்பா இரும்பு மனிதர். அவருக்கு ஒன்றும் ஆகாது" என பதிவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.