ETV Bharat / sitara

”மூடிய கதவுக்கு பின்னால்”- பாலியல் சீண்டல் குறித்து மனம் திறந்த கஸ்தூரி!

சென்னை: நடிகை கஸ்தூரி தானும் பாலியல் தொல்லை அனுபவித்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Sep 22, 2020, 4:42 PM IST

கஸ்தூரி
கஸ்தூரி

பாலிவுட்டில் பிரபல இயக்குநராக வலம்வரும் அனுராக் காஷ்யப், தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாயல் கோஷ் சமீபத்தில் பரபரப்புக் குற்றச்சாட்டை வைத்தார். இவரின் இந்தக் குற்றச்சாட்டு தற்போது பாலிவுட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திரையுலகை சேர்ந்த பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நடிகை பாயல் கோஷ், அனுராக் காஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்துள்ளார். உறுதியான அல்லது உறுதிப்படுத்தும் சான்றின்றி ஒருவர் மேல் வைத்த பாலியல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்க இயலாது. ஆனால் அது சம்பந்தப்பட்டவரின் பெயரை அழித்துவிடும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதைக்கண்ட நெட்டிசன் ஒருவர், “இதுபோன்ற சம்பவம் உங்கள் நெருங்கிய நண்பர் யாருக்காவது நடந்திருந்தால் இதுபோன்றுதான் கருத்து பதிவு செய்து இருப்பீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த நடிகை கஸ்தூரி, “அது என்ன யாருக்காவது, நானே அதை சந்தித்துள்ளேன். இன்னும் அது அப்படியேதான் இருக்கிறது. மூடிய கதவுக்கு பின்னால்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாலிவுட்டில் பிரபல இயக்குநராக வலம்வரும் அனுராக் காஷ்யப், தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாயல் கோஷ் சமீபத்தில் பரபரப்புக் குற்றச்சாட்டை வைத்தார். இவரின் இந்தக் குற்றச்சாட்டு தற்போது பாலிவுட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திரையுலகை சேர்ந்த பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நடிகை பாயல் கோஷ், அனுராக் காஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்துள்ளார். உறுதியான அல்லது உறுதிப்படுத்தும் சான்றின்றி ஒருவர் மேல் வைத்த பாலியல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்க இயலாது. ஆனால் அது சம்பந்தப்பட்டவரின் பெயரை அழித்துவிடும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதைக்கண்ட நெட்டிசன் ஒருவர், “இதுபோன்ற சம்பவம் உங்கள் நெருங்கிய நண்பர் யாருக்காவது நடந்திருந்தால் இதுபோன்றுதான் கருத்து பதிவு செய்து இருப்பீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த நடிகை கஸ்தூரி, “அது என்ன யாருக்காவது, நானே அதை சந்தித்துள்ளேன். இன்னும் அது அப்படியேதான் இருக்கிறது. மூடிய கதவுக்கு பின்னால்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.