சென்னை: மனிதர்கள் மீதான அன்பும், செய்யும் தொழில் மீதான பற்றும் என்னை உற்சாகமாக்கி வருகிறது என்று நடிகர் மன்சூரலிகான் கூறினார்.
வில்லன் நடிகரான மன்சூர் அலிகான், கதாநாயகன், நகைச்சுவை கலந்த வில்லத்தனம், முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்கள் என வித்தியாசமாகவும் சில படங்களில் நடித்துள்ளார்.
![Mansoor Ali Khan latest speech](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6121848_908_6121848_1582100353536.png)
நடிப்பு தவிர சமூக விஷயங்களிலும் அக்கறை காட்டிவரும் இவர், சமீப காலமாக போராட்டம், வழக்கு, ஜெயில், தேர்தல் பரப்புரை என்று பரபரப்பாகவும் இருந்துவருகிறார். இதையடுத்து படப்பிடிப்புத் தளத்தில் பிஸியாக இருந்த அவர் சிறிய பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
என் மகளுக்குத் திருமண வரன் பார்த்துக்கொண்டிருக்கிறேன். மகளுக்கு நீதிபதி ஆக வேண்டும் என்பது கனவு. அதற்காக அவர் படித்துக் கொண்டிருக்கிறார். படித்துக்கொண்டிருக்கும்போதே திருமணம் நடத்திவைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். மேலும் இப்போது நிறைய படங்களிலும் நடித்துவருகிறேன்.
![Mansoor Ali Khan latest speech](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6121848_237_6121848_1582100332312.png)
கெளதம் மேனன் இயக்கும் படம், இயக்குநர் சற்குணத்தின் படம், தங்கர் பச்சான் இயக்கும் படம், நடிகை ரெஜினா நடிக்கும் படம், விமல், விக்ரம் பிரபு ஆகியோரின் படங்களிலும் நடித்துவருகிறேன்.
![Mansoor Ali Khan latest speech](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6121848_184_6121848_1582100419574.png)
மனிதர்கள் மீதான அன்பும், செய்யும் தொழில் மீதான பற்றும்தான் என்னை இப்போது உற்சாகமாக்கி வருகிறது. சினிமா வாழ்விலும் என் வீட்டிலும் இன்னும் பல நல்ல செய்திகள் வரும். இவ்வாறு அவர் பேசினார்.