தமிழ் சினிமாவில் ரோஜா மலரே, அடடா என்ன அழகு படங்களை இயக்கிய டி.எம் ஜெயமுருகன் இயக்கும் புதிய படம் 'தீ இவன்'. இதில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நவரச நாயகன் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் சுகன்யா, ஐஸ்வர்யா லட்சுமி, அர்த்திகா, சேது அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு, மஸ்காரா அஸ்மிதா, ஹேமந்த் மேனன், பெரைரோ, இயக்குனர் சரவண சக்தி, ராஜேஸ்வரி, ஸ்ரீதர் ஆகியோர் நடிக்கிறார்கள்.
மனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் இப்படத்தை தயாரிக்கிறார். இந்த நிலையில் இப்படம் குறித்து படத்தின் இயக்குநர் பேசுகையில், 'நம் தமிழ் சமுதாயம் கலை மற்றும் கலாசாரம், சமூக உறவுகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்டது. ஆனால் இன்று அவைகள் கட்டுப்பாடுகளை இழந்துவருகிறது. இன்றைய இளம் தலைமுறைக்கு நம் உறவையும் கலாசாரத்தையும் கொண்டுசெல்லும் விதமாக இப்படம் உருவாகியுள்ளது’ என்றார்.
இதையும் படிங்க: பூல் புலையா 2 பட அப்டேட்: மேரே தோல்னா பாடலுக்கு நடனமாடும் த
பு