பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர் ரோனி க்ரூவிலா, சின்ன பட்ஜெட்டில் தொடர்ச்சியாகப் படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளார். அவ்வாறு அவர் தயாரிக்கும் படத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஆணுறை பரிசோதனை செய்யும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆணுறை தயாரிக்கும் நிறுவனங்கள் புதிய வகை ஆணுறையை அறிமுகப்படுத்தும் வகையில் இளம் பெண்களை வேலைக்கு எடுத்துக் கொள்வார்கள். அவர்கள் அந்த புதிய ஆணுறையின் செயல் திறனை சோதித்து சொல்ல வேண்டும். இப்படியொரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
தற்போது இந்த படத்திற்கு 'சத்ரிவாலி' என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தை இயக்குநர் தேஜாஸ் விஜய் தியோஸ்கர் இயக்குவார் என தெரிகிறது. இந்த படத்தில் நடிக்க் முதலில் சாரா அலி கான், அனன்யா பாண்டே ஆகியோரிடம் பேசப்பட்டது. அவர்கள் நடிக்க மறுக்கவே ரகுல் ப்ரீத் சிங் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.