வாஷிங்டன்: நமது சூரிய குடும்பம் கேலக்டிக் மையத்திலிருந்து சுமார் 27,000 ஒளியாண்டுகள் சுற்றளவில் நட்சத்திரங்கள், கோள்கள், கருந்துளைகள், விண்கற்கள், வாயுகள், தூசிக்களான ஓரியன் கையின்(சுருள் வடிவம்) உள் விளிம்பில் அமைந்துள்ளது.
இதனை பால்வழி அண்டம் என்று பொதுவாகவும், சுருள் வழி அண்டம் என்று குறிப்பாகவும் அழைக்கின்றோம். இந்த அண்டத்தில் 100 முதல் 400 கோடி சூரிய குடும்பங்கள் உள்ளதாகவும், அதனை சுற்றி லட்ச கோடிக்கணக்கான கோள்கள் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்த ஆராய்ச்சிகளில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா பல்வேறு புதியக் கோள்களை கண்டுபிடித்துள்ளது. அந்த வகையில், வாஷிங்டனில் உள்ள பெல்லூவைச் சேர்ந்த டாம் ஜேக்கப்ஸ் என்பவர் பூமியிலிருந்து சுமார் 379 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு மாபெரும் வாயுக் கோளை கண்டுபிடித்துள்ளார்.
இவர் 2010ஆம் ஆண்டு முதல் நாசாவின் தன்னார்வள விஞ்ஞானியாக உள்ளார். அண்டவியல் பயின்ற விஞ்ஞானிகளுக்கு நாசா நிறுவனம் "குடிமகன் விஞ்ஞானிகள்" என்ற அந்தஸ்தை அளித்து, தனது தரவுகள் மூலம் சூரிய குடும்பத்திற்கு அப்பாற்பட்ட கோள்களை பற்ற ஆராய ஊக்கம் அளிக்கிறது.
இவர்கள் தன்னார்வள விஞ்ஞானிகள் என்று அழைக்கப்படுகின்றனர். அவ்வப்போது, புதிய கோள்களையும் கண்டுபிடிக்கின்றனர். அப்படி, டாம் ஜேக்கப்ஸ் கண்டுபிடித்த புதிய வாயுக்கோளானது, நமது சூரியனைப் போன்றதொரு பெரும் கோளை சுற்றிவருகிறது. இதற்கு TOI-2180 என்று பெயரிடப்பட்டுள்ளது.
TOI-2180 வாயுக்கோள்
TOI-2180 கோளானது நமது சூரியக்குடும்பத்தில் உள்ள வாயுக்கோளான வியாழனை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு பெரியது. ஹைட்ரஜன் மற்றும் ஹீலியத்தை விட கனமான தனிமங்களை இந்த கோள் கொண்டுள்ளதாக ஜேக்கப்ஸ் கூறுகிறார்.
அத்துடன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் TOI-2180 போன்ற மாபெரும் வாயுக்கோள் நம்முடைய சூரியக் குடும்பத்தில் இல்லை. இதன் வெப்பநிலை சராசரியாக 170 டிகிரி பாரன்ஹீட். இங்கும் வியாழனைப் போலவே உயிரினங்கள் வாழ தகுதியற்ற சூழ்நிலை உள்ளது.
இந்தக் கோள் சுற்றிவரும் குடும்பத்தில் வேறு கோள்கள் உள்ளனவா, அவற்றில் பூமியை போன்று சூழலியல் கொண்ட கோள் ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்து அடுத்தக்கட்ட ஆராய்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன" என்றார்.
இதையும் படிங்க: பூமியை நோக்கி வரும் ராட்சத விண்கல்